Thursday, July 30, 2015

US Constitution part-1

US Constitution -part-1
அமெரிக்க அரசியல் சாசன சட்டத்தை 1789ல் கொண்டுவந்துள்ளனர். இதை முதன்முதலில் உருவாக்கும்போது மொத்தமே ஏழு பிரிவுகளை (ஆர்ட்டிகிள்களை) மட்டுமே கொண்டதாக இருந்தது. இதுதான் எல்லா நாட்டு அரசியல் சாசன சட்டங்களிலும் மிகச் சிறிய சட்டம் என்னும் பெருமையையும் கொண்டிருந்தது. பின்னர், மிக அவசியம் என்று கருதிய உரிமைகளை இதில் சேர்ப்பதற்காக, இதை 27முறை திருத்தம் செய்து, பல புதிய திருத்த பிரிவுகளையும் கொண்டு வந்துள்ளனர்.

அமெரிக்க உருவாகும்போது மொத்தமே 13 மாநிலங்கள் மட்டுமே இருந்தன. அவைகள்தான் இந்த அரசியல் சாசன சட்டத்தை வகுத்து கூட்டு சேர்ந்து யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்று கூட்டாச்சி முறையை கொண்டு வந்தனர்.

ஆரம்பகால அமெரிக்க அரசிலயமைப்புச் சட்டத்தில் இருந்த ஏழு ஆர்ட்டிகிள்களில் முதல் ஆர்ட்டிக்கிள் காங்கிரஸ் என்ற ஒரு கூட்டுசபையை உருவாக்கி அதன்படி இந்த நாட்டை ஆளும் சட்டங்களை இயற்றும் அதிகாரமும், பதவிகளை உருவாக்கும் அதிகாரமும் அந்த காங்கிரஸூக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆர்ட்டிகிள்-2ல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பதவியை ஏற்படுத்தி, அவர் அந்த கூட்டாச்சி அமெரிக்கவுக்கு ஆட்சித் தலைவராக இருக்க வகை செய்துள்ளது.

ஆர்ட்டிகிள் 3-ல் கூட்டாச்சி அமெரிக்காவுக்கு ஒரு உயர்ந்த நீதிமன்றதை ஏற்படுத்தி வைத்து நீதியை நிலைநாட்டவும், மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும், அமெரிக்காவின் மாநிலங்களுக்குள் நிகழும் பிரச்சனைகள் தீர்த்துவைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆக இந்த முதல் மூன்று ஆர்ட்டிகிள்களில், ஜனநாயகத்தின் மூன்று தூண்கள் என்று சொல்லிக்கொள்ளும், சட்டமியற்றல், ஆட்சி நிர்வாகம், நீதி நிர்வாகம் ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அமெரிக்க அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்ட்டிகிள் 4-ல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் உள்ள உறவு, மற்றும் அந்த மாநிலங்களுக்கும் அமெரிக்க மாநில கூட்டமைப்புக்கும் உள்ள உறவு, மற்றும் இவைகளை எப்படி பாதுகாப்பது, அதன் அதன் உரிமைகள் என்ன என்பதை சொல்கிறது. (கூட்டாச்சி முறையை சொல்கிறது).

ஆர்ட்டிகள் 5-ல் காங்கிரஸ் என்ற இந்த மாபெரும் சபை, எப்போது வேண்டுமானாலும் இந்த அரசியலைமைப்பு சட்டத்தை தங்களின் தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியது என்ற உரிமையை வழங்குகிறது.

ஆர்ட்டிகிள் 6-ல் இந்த அமெரிக்க அரசிலமைப்பு சட்டம் மட்டுமே முதன்மை சட்டம் என்றும், இதில் சொல்லப்பட்டுள்ளதை மீறி யாரும் வேறு மாதிரி சட்டங்களை இயற்ற அதிகாரமில்லை என்றும் சொல்கிறது. இதற்கு உட்பட்டே சட்டங்களை இயற்ற வேண்டும் என்று கூறுகிறது.

ஆர்ட்டிகிள் 7-ல் புதிய மாநிலங்களை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளும் அதிகாரமும் இதற்கு அளிப்பட்டுள்ளது.

இதை பின்னர் 27 முறை திருத்தம் செய்துள்ளனர்.
முதல் மூன்று திருத்தங்கள் "தனிமனித உரிமைகளை" கொடுத்துள்ளது. இதன் 1-வது திருத்தத்தின்படி (1791ல்) ஒவ்வொரு அமெரிக்கரும் அவர் விருப்பம்போல மத கொள்கைகளை அனுசரித்துக் கொள்ளவும், விருப்பம்போல பேசவும், எழுதவும், அவைகளை பிறருக்கு வெளியிடவும்ஒரு குழுவாக கூடவும், தன் உரிமைகளை கேட்டுப்பெறவும் உரிமை அளிக்கிறது.

2-வது திருத்தத்தின்படி (1791ல்) ஒவ்வொருவரும் தற்காப்பு ஆயுதங்களை வைத்துக் கொள்ள உரிமை கொடுக்கப் பட்டுள்ளது.

3-வது திருத்தத்தின்படி (1791ல்) போர் காலங்கள் தவிர, மற்ற நேரங்களில் போர் வீரர்களுக்கு இடம் அளிக்கும்படி, தனி மனதனை கட்டாய்படுத்த அரசுக்கு அனுமதியில்லை என்று தனி மனித உரிமையை கொடுக்கின்றது.

4-வது திருத்தத்தின்படி (1791ல்) யாரையும், சட்ட தேவையில்லாமல், சோதனை செய்யவும், அவர் பொருள்களை, சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அரசுக்கு அதிகாரமில்லை என்று தனிமனித உரிமையை கொடுக்கிறது.

5-வது திருத்தத்தின்டி (1791-ல்) பெரிய குற்றங்களை செய்திருப்பவரை முதலில் கிராண்ட் ஜூரி விசாரித்து அடிப்படை உண்மைகள் இருந்தால் மட்டுமே அவரை குற்றவாளி என கருதி தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும். நேரடியாக கோர்ட் சட்ட விசாரனை செய்யக் கூடாது.

6-வது திருத்தத்தின்படி (1791ல்) குற்றவாளிக்கு பல சட்ட உரிமைகளை கொடுக்கிறது. அதில் முக்கியமாக, குற்றவாளியை விசாரித்து தண்டனை வழங்குவதில் கால தாமதம் செய்யக்கூடாது என்பது முக்கியமான சலுகை.

7-வது திருத்தத்தில் (1791-ல்) சில சிவில் வழக்குகளுக்கும் ஜூரி விசாரனை வேண்டும் என்று சலுகையை கொடுத்துள்ளது.

8-வது திருத்தத்தில் (1791-ல்) எல்லாக் குற்றவாளிகளுக்கும் ஒரே மாதிரி அபராதம் விதிக்கக் கூடாது. பணக்காரன் அபராதத்தை சுலபமாக செலுத்திவிடுவான். எனவே அவன் தகுதிக்கு ஏற்ப அதிக அபராதம் விதிக்க சட்டம் வழி செய்தது.

9-வது திருத்தத்தில் (1791-ல்) தனிமனிதன் ஓட்டுப்போடும் உரிமை, நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பிரயாணம் செய்யும் உரிமை, தன் தனிமைக்கு உரிமை இவைகளை கொடுத்தது.

10-வது திருத்தத்தில் (1791-ல்) மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ள தனி அதிகாரங்களை வரையறுத்து கூறியுள்ளது. குறிப்பாக, மத்திய அரசு போர்களை நடத்தவும், வரிகளை விதிக்கவும், மாநிலங்களுக்கு இடையேயான விவகாரங்களில் தலையிடவும் அதிகாரம் அளிக்கிறது.

இந்த 10 திருத்தங்களையும் பொதுவாக, மனிதனின் அடிப்படை உரிமைகளை பற்றி சொல்வதால் இதை பில் ஆர் ரைட்ஸ் Bill of Rights என்றே பொதுப் பெயரில் அழைக்கின்றனர்.

மீதிமுள்ள 11 முதல் 27 வரையிலான திருத்தங்கள் பல காரணங்களுக்காக ஏற்பட்டன. கடைசியாக செய்த 27வது திருத்தம் 1992ல் செய்யப்பட்டது. (வித்தியாசமான திருத்தம் இது: காங்கிரஸில் உள்ள உறுப்பினர்கள், அதாவது செனட்டர், எம்பிக்கள் தங்களின் சம்பளத்தை தாங்களாகவே உயர்த்தி சட்டம் இயற்றிக் கொள்ள முடியாது. இனி வரும் எம்பிக்களுக்கு வேண்டுமானால் உயர்த்தி சட்டம் இயற்றலாம்.)
**


No comments:

Post a Comment