Monday, June 27, 2016

ஆயில் என்ஜின் அசையாச் சொத்தா?

விவசாய வயலில் உள்ள ஆயில் என்ஜின் அசையாச் சொத்தா?
நிலம், மண், அதிலுள்ள கட்டிடம் இவைகள் எல்லாம் அசையாச் சொத்துக்கள்; மற்ற பொருள்கள் எல்லாம் அசையும் சொத்துக்களே; ஆனாலும், ஒரு பொருளை, உதாரணமாக, ஒரு இயந்திரத்தை நிலத்தில் புதைய நிறுவி இருந்தால், அதுவும் அசையாச் சொத்தான நிலத்துடன் சேர்ந்துவிடுமா என்பது சட்டக் கேள்வியாகவே இருந்து வருகிறது; மண்ணில் புதைய கட்டியுள்ள கட்டிடம் அசையாச் சொத்து; கட்டிடமானது நிரந்தரமாக மண்ணில் புதைய இருப்பதால், கட்டிடம் அசையாச் சொத்து என சட்டம் கருதுகிறது; கட்டிடம் என்பது அதிலுள்ள செங்கல் சுவர்கள், கம்பிகள், கூரை, கதவு, ஜன்னல்கள், இவைகளும் சேர்ந்துதான்; ஆனால், சுவரில் பதித்து வைத்துள்ள பீரோ, சுவரோடு பிரிக்கமுடியாமல் பதித்து இருந்தால் அதுவும் அசையாச் சொத்தே; நகர்த்தும்படி வைத்திருக்கும் பீரோ மட்டும் அசையும் சொத்துதான்; அது அசையாச் சொத்தான வீட்டுடன் சேராது; ஒரு பொருளை அல்லது இயந்திரத்தை நிரந்தரமாக மண்ணுடன், அல்லது மண்ணில் உள்ள கட்டிடத்துடன் புதைய நிறுவி இருந்தால், அதுவும் அசையாச் சொத்து என்றே சட்டம் கருதுகிறது; அப்படிப் பார்த்தால், விவசாய வயலில் உள்ள ஆயில் என்ஜினை நிரந்தரமாக மண்ணில் புதைய பதித்து இருக்கிறார்களா என்று பார்ப்பதுடன், அது அந்த நிலத்திலிருந்து வருமானம் வருவதற்காக அந்த இயந்திரத்தை நிறுவி இருந்தால் அதுவும் அசையாச் சொத்தே என்று சட்டம் கருதுகிறது; இந்த விளக்கங்கள் எல்லாம் சொத்துரிமைச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன; இந்தியச் சொத்துரிமை சட்டமானது, ஆதியில் இங்கிலாந்து சொத்துரிமை சட்டத்திலிருந்து வந்தவையே!
சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு: மூன்று நீதிபதிகள் அடங்கிய புல் பெஞ்ச் (Full Bench) தீர்ப்பு அது; AIR 1955 Mad 620. போர்டு ஆப் ரெவின்யூ vs. கே.வெங்டசாமி என்ற வழக்கு; இதில் தீர்ப்பு வழங்கிய மூன்று நீதிபதிகளில் அடங்கிய புல் பெஞ்ச்சில் (Full Bench) இருந்த தலைமை நீதிபதியான ஜஸ்டிஸ் ராஜமன்னார் அவர்கள் வழங்கிய முக்கிய தீர்ப்பு இது; அதில் --- ஒரு டூரிங் தியேட்டர்; அதில் சினிமா காண்பிக்கும் இயந்திரங்களான புரஜெக்டர்கள் உள்ளன; அந்த தியேட்டரை லீஸ் என்னும் குத்தகைக்கு (Lease) விட்டு லீஸ் பத்திரம் எழுதிக் கொள்கிறார்கள்; அந்த பத்திரத்தை பதிவுக்கு கொடுக்கும்போது, தியேட்டர் நிலத்தையும், அதிலுள்ள கட்டிடத்தையும் மட்டும் லீஸ் கொடுப்பதாக எழுதி உள்ளது; தியேட்டர் என்றால் புரஜெக்டர்கள் மற்ற இயந்திரங்கள் இருக்கும்; அதை ஏன் பத்திரத்தில் குறிப்படவில்லை என்றும், அதற்கும் மதிப்பிட்டு ஸ்டாம்ப் கட்டணம் கட்டவேண்டும் என கேட்கிறார் பதிவாளர்; ஏனென்றால், கட்டிடத்தில் பதிய வைத்துள்ள இயந்திரங்களும் அசையாச் சொத்தே என்று சட்டம் சொல்லி உள்ளதே என்கிறார்; அந்த பத்திரத்தில் உள்ள பார்ட்டிகள், இந்த இயந்திரங்கள் அசையும் பொருள்களே என்று வாதம் செய்கின்றனர்; வழக்கு கோர்ட்டுக்கு போகிறது; கடைசியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு வந்தது; அதில் கூறப்பட்டுள்ள தீர்ப்பு: “டூரிங் தியேட்டரில் உள்ள புரஜெக்டர்கள் எல்லாம் தரையில் அல்லது ஒரு மேடையில் போல்ட்-நட் மூலம் இணைக்கப் பட்டிருந்தாலும், அதை எளிதில் பிரித்து எடுத்துக் கொள்ளும் நிலையில்தான் உள்ளது; நிரந்தரமாக அந்த இயந்திரங்களை தரையில் பதிய வைத்திருக்கவில்லை; எப்போது வேண்டுமானாலும் பிரித்து எடுத்துக் கொண்டு போய் விடலாம்; அப்படிப்பட்ட புரஜெக்டர்கள் அசையும் பொருளே என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு கூறிவிட்டது; பொதுவாக, இப்படிப்பட்ட இயந்திரங்கள் அசையும் பொருளா, அல்லது நிலத்தில் பதிய வைத்ததால் அது அசையும் சொத்தா என்பதை அந்தந்த தனிப்பட்ட விஷயங்களைக் கொண்டே முடிவு செய்ய முடியும் என தீர்ப்புகள் பல வந்துள்ளன; அதற்குறிய அடிப்படை இதுதான்; மண்ணில் நிரந்தரமாக பதிய வைத்து, அந்த நிலத்துக்கு ஆதார வருமானத்துக்கு உதவி வந்து, அது நிரந்தரமாக இதில் இருப்பதற்காக எண்ணத்துடன் அதை நிறுவி இருந்தால் அது அசையாச் சொத்தே!
**



டெனன்சி-இன்-காமன் Tenancy-in-Common

டெனன்சி-இன்-காமன் Tenancy-in-Common
கூட்டுப் பங்குரிமை என்னும் ஜாயிண்ட் டெனன்சி Joint Tenancy என்ற முறைக்கு எதிரானது இந்த டெனன்சி-இன்-காமன் Tenancy-in-common. இரண்டுமே கூட்டாக சொத்தை அனுபவிப்பதுதான்; ஆனால் ஜாயிண்ட் டெனன்சியில் ஒருவர் இறந்து விட்டால், மற்றவர் அந்த சொத்தை முழுதாக அடைந்து அனுபவித்துக் கொள்ளலாம்; ஆனால் டெனன்சி-இன்-காமன் முறையில்  கூட்டுச் சொத்தில் ஒருவர் இறந்து விட்டாலும், அவரின் பங்கு அவரின் வாரிசுகளுக்குப் போய் சேரும்; 1956 முன்பு வரை இந்துக்களின் சொத்துக்கள் ஜாயிண்ட் டெனன்சி முறைப்படிதான் இருந்தது; 1956ல் புதிதாக இந்து வாரிசுரிமைச் சட்டம் வந்தது; அதன்படி, கூட்டுப் பங்குரிமை சொத்தில் ஒருவர் இறந்துவிட்டால், அவரின் பங்கு அவரின் வாரிசுகளுக்குப் போய் சேரும் என்று சட்டத்தை திருத்தி விட்டார்கள்; இப்போது இந்த புதிய முறைப்படியே டெனன்சி-இன்-காமன் சட்ட முறைப்படியே இருக்கிறது;
 **


கூட்டு பங்குரிமை Joint Tenancy

கூட்டு பங்குரிமை Joint Tenancy:
1956ல் இந்து வாரிசுரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது; இந்தச் சட்டம் வருவதற்கு முன்னர், இந்து சட்டம் வேறு மாதிரி இருந்தது; ஒரு சொத்தில், ஒரே குடும்பத்து இந்துக்களுக்கு கூட்டு பங்குரிமை இருந்தது; இது கிட்டத்தட்ட இங்கிலாந்தில் உள்ள கூட்டு பங்குரிமையை போன்றே இருந்தது; இங்கிலாந்து நாட்டில் கூட்டு பங்குரிமையை Joint Tenancy என்பர்;
டெனன்சி என்பது சொத்தை அனுபவிக்கும் உரிமை; (வாடகை உரிமை என குழம்ப வேண்டியதில்லை); உதாரணமாக, இங்கிலாந்தில் இருவர் ஒரே சொத்தை கூட்டாக வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்; அந்த சொத்தில் இருவருக்கும் சரி சமமாக உரிமை இருக்கும்;
ஆனால், ஒருவர் இறந்துவிட்டால், உயிரோடு இருக்கும் மற்றவர் அந்தச் சொத்தை முழுமையாக அடைந்து கொள்வார்; இறந்தவரின் வாரிசுகளுக்கு அவரின் பங்கு போய்ச் சேராது; இப்படிப்பட்ட வித்தியாசமான உரிமையைத்தான் ஜாயிண்ட் டெனன்சி Joint Tenancy என்று அங்கு சொல்லிக் கொள்கிறார்கள்.
அதே போன்றே, இந்தியாவில் இந்துக்களின் கூட்டு குடும்பத்தில் உள்ளது; ஆனால் இது சற்று வித்தியாசமாக இருக்கும்; இங்கிலாந்து ஜாயிண்ட் டெனன்சி உரிமையைப் போலவே இருந்தாலும், சில விஷயங்கள் மட்டும் வித்தியாசமாக மாறு பட்டிருக்கும்; இந்து குடும்பங்களில் (பழைய இந்து சட்ட வழக்கப்படி) ஆண்களுக்கு மட்டுமே சொத்தில் உரிமை உண்டு; பெண்களுக்கு உரிமை கிடையாது; உரிமை கிடையாதே தவிர, அவர்களை காப்பாற்றுவதும், திருமணம் செய்து கொடுப்பதும், வாழ்நாள் வரை அவர்களுக்கு உதவி செய்வதும் இந்து குடும்பங்களில் உள்ள ஆண்களுக்கே பொறுப்பு;
ஆண்கள் மட்டுமே சொத்தை கூட்டாக அனுபவிப்பர்; பொதுவாக, ஒரு இந்து குடும்பத்தில் ஒருவர் இருந்தால், அவரும், அவரின் மகனும், அந்த மகனின் மகனான பேரனும், அந்த பேரனின் மகனான கொள்ளுப் பேரனும், ஆக அந்த ஒருவருடன் மூன்று வாரிசுகள் சேர்ந்து (மகன், பேரன், கொள்ளுப்பேரன்) ஆக மொத்தம் அந்த நான்கு ஆண்களும் சேர்ந்து அவர்களின் சொத்தை அனுபவிப்பர்; இந்த நான்கு பேரும் அந்த சொத்தை, இங்கிலாந்து முறைப்படி, கூட்டாக Joint Tenancy என்ற முறைப்படி அனுபவிப்பர்; யாருக்கும் அந்தச் சொத்தில் தனி உரிமை கிடையாது; தனியாக விற்கவும் முடியாது;
ஆனால் சண்டை போட்டுக் கொண்டு கூட்டுக் குடும்பத்தை விட்டு விலகினால், அவருக்குறிய பங்கை பிரித்துக் கொடுத்து விலக்கி விடலாம்; இப்படிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் உள்ள ஒரு ஆண் இறந்து விட்டால், அவரின் பங்கு மற்ற ஆண்களுக்குப் போய் சேர்ந்து விடும்; அவரின் மனைவி, மகன்களுக்கு தனியே போகாது; இது கிட்டத்தட்ட இங்கிலாந்து கூட்டுப் பங்குரிமை என்னும் Joint Tenancy போன்றதே!
இந்து குடும்பத்தில் ஆண்வாரிசுகளில் மேற்சொன்ன நான்கு தலைமுறைகள் மட்டும் இந்த கூட்டுரிமை பங்கில் பங்குதாரர்கள் ஆவார்கள்; இவர்களை இங்கிலாந்து முறைப்படி ஜாயிண்ட் டெனன்சி Joint Tenancy என்று சொல்ல மாட்டார்கள்; இவர்களை கோபார்சனர்கள் Coparceners என்ற பெயரில் அழைப்பர்; சட்டமும் இவர்களை இந்து கூட்டு பங்குரிமையாளர்கள் என்றும் Hindu Coparceners என்று அழைக்கிறது;
பழைய இந்து குடும்ப வழக்கப்படி, தனி தொழில்கள் கிடையாது; அவரவர் அவர்களின் குடும்பத் தொழில்களான, விவசாயம், வியாபாரம், கைத்தொழில் இதில் ஏதாவது ஒன்றை அந்தக் குடும்பம் செய்துவரும்; அதில் தந்தையுடன் மகனும், மகனுடன், அவர் மகனும், அந்தப் பேரனுடன் அவர் மகனும் கூட்டுக் குடும்பமாகவே இருந்து தொழில் செய்வர்; வருமானம் பொதுவானதே!
வருமானம் பொதுவானது என்றால் குடும்ப சண்டைக்கு வேலையில்லை! அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்கள், அந்த குடும்ப “உறுப்பினர்கள்” அவ்வளவே! பெண்கள் ஒருபோதும் கோபார்சனர்கள் ஆக முடியாது;  அவர்களுக்கு உணவு, உடை, பாதுகாப்பு, கிடைக்கும்; திருமண வயதில் திருமணம் செய்து கொடுப்பர்; கணவர் இறந்துவிட்டால், தந்தை வீட்டுக்கு வந்து வசிக்கலாம்; வாழ்நாள் வரை வசிக்கும் உரிமை மட்டுமே; சொத்தில் எந்த உரிமையும் கிடையாது;
எனவே இந்து கூட்டுக் குடும்பம் என்பது கிட்டத்தட்ட ஆங்கிலேயர்களின் ஜாயிண்ட் டெனன்சி முறையிலானது; இங்கு இதை வேறு பெயர் சொல்லி அழைக்கிறார்கள்; அது கோபார்சனரி உரிமை என்றும் இந்து கூட்டுப் பங்குரிமை என்றும் சொல்கிறார்கள்; இதற்கு பொருள் என்னவென்றால், சொத்து இருக்கும்போது சம உரிமையுடன் அனுபவிக்கலாம்; இறந்தால் அவரின் வாரிசுகளுக்குப் பங்கு கிடையாது;

**

Thursday, June 9, 2016

Additional Evidence in Appeal stage

Order 41 Rule 27 of CPC
Production of Additional evidence in the Appellate stage:

“The parties to an appeal shall not entitled to produce additional evidence (oral or documentary) in the appellate court;

BUT
If the lower court refused such evidence, the Appellate Court may allow it; (or)

If the party establishes that such evidence was not within his knowledge, the Appellate Court may allow it; (or)

If the Appellate Court requires any document to be produced or any witness to be examined to enable it to pronounce judgment, the Appellate Court may allow it.
Whenever additional evidence is allowed to be produced, the court shall record the reason for its admission.