Wednesday, September 30, 2020

மாப்பிளா முஸ்லீம் பழக்க வழக்கம்

மாப்பிளா முஸ்லீம் பழக்க வழக்கம்


ஒரு மாப்பிளா முஸ்லீம் (Mapilla Muslim) தனது 13 வயது மகளை, 1871-ல் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கிறார். அப்போது, தன் மகளுக்காக, தனது சொத்தை, அவரின் மருமகனுக்கு தானம் கொடுக்கிறார்.


பொதுவாக, மாப்பிள்ளா முஸ்லீம் சமுதாயத்தில் இப்படிச் செய்வது வழக்கமாம். இப்படி பணத்தையோ, சொத்தையோ தானமாகக் கொடுப்பதை Kasi or Badi என்று சொல்கிறார்கள். அப்படி, மருமகனுக்கு கொடுத்த சீதனத்தை, அவர்கள் வாழும்வரை அனுபவிக்க முடியுமாம். ஒருவேளை, அந்த பெண்ணை விலக்கி வைத்து விட்டால் (Divorce), அல்லது அவள் இறந்து விட்டால், இந்த சீதனத் சொத்தானது, அவளின் பெற்றோருக்கே திரும்ப வந்து விடுமாம். கணவனோ, அவனின் மற்ற வாரிசுகளோ எடுத்துக் கொள்ள முடியாதாம். 


இந்த வழக்கில், அந்தப் பெண், 1877-ல் இறந்து விடுகிறாள். அதாவது திருமணம் ஆன ஆறு வருடங்களில் இறந்து விடுகிறாள். அவளுக்குச் சீதனமாக கொடுப்பட்டதோ ஒரு வீடு. அந்த வீட்டைத்தான், திருமணத்தின் போது மருமகன் பெயரில் (மகளுக்காக) சீதனச் சொத்தாக (Kasi or Badi) என்று எழுதிக் ககொடுத்திருக்கிறார். அந்தப் பத்திரத்தில் துளு மொழியில் அந்த தானம் என்று எழுதப்பட்டுள்ளது. 


ஆனால், அந்த சொத்தை, மருமகன் திரும்ப் கொடுக்க மறுக்கிறான். வழக்கு கோர்ட்டுக்கு வருகிறது. அதில் காசி அல்லது படி (Kasi or Badi) என்ற இரண்டு வார்த்தைகளும் வேறு வேறு அர்த்தத்தை கொடுக்கும் என்றும், இரண்டும் ஒரே அர்த்தத்தை கொடுக்காது என்றும் வாதம். 


Kasi என்பது திருமணம் முறிவு நடந்தால், (Divorce), அல்லது மகள் இறந்து விட்டால், சொத்தைத் தானம் கொடுத்தவர், அதைத் திரும்ப பெறும் உரிமையை அந்த பத்திரத்தில் நிறுத்தி வைத்துக் கொள்வாராம். 


Badi என்பது அப்படி அந்த சொத்தை எப்போதும் திரும்ப பெறும் உரிமையை நிறுத்தி வைத்துக் கொள்ளாமல் எழுதுவதாம்.


ஆனால், இந்த தானப் பத்திரத்தில், "காசி" என்கிற "படி" பத்திரம் என்று எழுதப் பட்டுள்ளதால், இந்தக் குழப்பமாம். 


எனவே, இது எந்த நோக்கத்தில் எழுதிக் கொடுக்கப் பட்டது என்பதையே கோர்ட் பார்க்க வேண்டும் என்பதைப் பொறுத்தே அதன் முடிவு இருக்கும் என்று கோர்ட் சொல்கிறது. 


இந்த தானப் பத்திரத்தை, மகளின் திருமணம் முடிந்த மூன்றாவது நாளில் எழுதிக் கொடுத்திருக்கிறார். மகளுக்கு அப்போது 13 வயதுதான் என்பதால், மருமகன் பெயரில் அதை எழுதிக் கொடுத்திருக்கிறார். எனவே மகளுக்காக, அதை, மருமகனுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. இந்த சொத்தை மகளுக்காக, அவரின் மருமகனிடம் பாதுகாவலராக (in trust) கொடுக்கப் பட்டிருக்கிறது. அந்த பத்திரத்தில், மகளும், மகளின் வாரிசுகள் என்பதை (generation to generation) புத்திர பௌத்திர பாரம்பரியமாய் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி எழுதப்பட்டுள்ளது. 


எனவே மகளும் அவளின் வாரிசுகளும் அனுபவிக்க கொடுப்பதாகவே கோர்ட் கருதுகிறது. தகப்பன் இந்த சொத்தை திரும்ப பெற்றுக் கொள்வான் என்பது போன்ற எந்த விஷயமும் இதில் இல்லை. 


எனவே இது மகளின் தனிச் சொத்துத்தான் என்றும், தகப்பன் திரும்ப பெற முடியாது என்றும் சொல்லிவிட்டது. ஆகையால், மகள் இறந்தவுடன், அவளின் கணவர் சொத்தை எடுத்துக் கொண்டது சரிதான் என்றே கோர்ட் முடிவு செய்கிறது.

Ismail Beari v. Abdul Kadar Beari, (1883) ILR 6 Mad 319

Judgment by: Kindersley & Muthusamy Iyer JJ. of the Madras High Court on 23 Feb 1883.


இந்து சட்டத்திலும் இதேபோன்ற நிலை உள்ளது.

 

இந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956-ல் பிரிவு 15 என்பது ஒரு இந்து பெண்ணின் சொத்து, அவள் இறந்த பின்னர் யார் யாருக்கு போகும் அல்லது யார் யார் அவளுக்கு வாரிசு என்று தெளிவு படுத்தி உள்ளது.


அதன்படி, ஒரு இந்து பெண்ணின் சொத்தை மூன்று வகையில் பிரித்துள்ளார்கள். 

“(1) இந்து பெண்ணின் சுய சம்பாத்திய சொத்து. அவளே கிரயம் வாங்கிய சொத்து. அல்லது அவளின் சீதனமாக அல்லது செட்டில்மெண்டாக பெற்ற சொத்து (இதுவும் அவளின் தனிச் சொத்துத்தான்).


(2) இந்து பெண்ணுக்கு அவளின் கணவர் மூலம் கிடைத்த சொத்து. (அதாவது அவளின் கணவர் இறந்து விடுகிறார். ஆனால் அவள் கணவனின் தகப்பன் பெயரில் சொத்து உள்ளது. அவர் இறக்கும் போது, இவள் கணவனின் பங்காக, இவளுக்கும் ஒரு பாகம் வரும்).


(3) இந்து பெண்ணுக்கு அவளின் தந்தை, தாய் மூலம் கிடைத்த சொத்து. (அதாவது, இவளின் தகப்பன் பெயரில் சொத்து இருக்கிறது. அவர் இறந்து விட்ட பின்னர், மகளின் பங்காக கிடைக்கும் சொத்து).


இப்படி மூன்று வழிகளில் மட்டுமே ஒரு இந்து பெண்ணுக்கு சொத்து கிடைக்கும். வேறு வழிகளில் சொத்து வருவதற்கு வாய்ப்பு இல்லை. 


இப்படிப்பட்ட தனது சொத்துக்களை விட்டுவிட்டு, ஒரு இந்து பெண் இறந்து விட்டால், அந்த சொத்தில், அவளின் கணவனும், அவளின் மகன், மகள் இவர்கள் வாரிசு முறைப்படி சரி சமமாக பங்கு அடைவர்.


இன்னொரு நிலை: அவளுக்கு குழந்தைகள் இல்லை என்றால், சொத்து யாருக்கு போகும்?

அப்போதுதான், அவளுக்கு, இந்த சொத்து எப்படிக் கிடைத்தது என்று பார்க்க வேண்டும். முதல் இரண்டு வகைகளில் கிடைத்திருந்தால் (அதாவது, அவளின் தனிச் சொத்தாக இருந்தால், அல்லது அவளின் கணவர் வழி மூலம் கிடைத்திருந்தால்), அவளுக்கு குழந்தை ஏதும் இல்லை என்றால், அந்த சொத்து, அவளின் கணவனுக்கோ, அல்லது கணவன் இறந்து விட்டால், கணவனின் மற்ற வாரிசுகளுக்கு (கணவன் சொத்துப் போல) போய் சேரும்.


அவளுக்கு குழந்தை இல்லாத நிலையில், அவள், தனது தகப்பன், தாய் மூலம் அடைந்த சொத்தாக இருந்தால், கணவனின் வாரிசுகளுக்குப் போகாது. மாறாக, அந்த சொத்தானது, தனது தந்தைக்கும் தாய்க்கும் போகும் அல்லது அவர் உயிருடன் இல்லை என்றால், தந்தையின் வாரிசுகளுக்குப் போகும், அவர்களும் இல்லை என்றால், தந்தையின் வாரிசுக்கும், அவர்களும் இல்லை என்றால், தாயின் வாரிசுகளுக்கும் போய்ச் சேரும். (குறிப்பாக, இப்படிப்பட்ட சொத்து, வந்த வழியிலேயே திரும்ப போய்விடும் என்பது பொருள்.) Reverted back principle. 

இந்த முறை எப்படி இருக்கும் என்றால்:

“(1) Firstly – upon the sons, daughters and the husband (including the children of the predeceased son or daughter).

(2) Secondly – upon the heirs of the husband;

(3) Thirdly – upon the heirs of the mother and father;

(4) Fourthly – upon the heirs of the father; and

(5) Fifthly – upon the heirs of the mother.


இதுதான் இன்றைய நடைமுறையில் இருக்கும் சட்டமாகும். இது இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 பிரிவு 15-ல் சொல்லப்பட்டுள்ளது.

** 

Sunday, September 27, 2020

இந்து திருமணச் சட்டம் சில விளக்கங்கள்

இந்து திருமணச் சட்டம் சில விளக்கங்கள்

1960-ல் நடந்த வழக்கு:

1957-ல் சவுமியநாராயணன் என்பவர் ஜெயலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கணவர் ஆண்மை இல்லாதவர் (Impotent) என்று சொல்லி, இந்த திருமணத்தை ரத்து செய்யும்படி இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 12-ல் கோர்ட்டில் மனைவி மனுக் கொடுக்கிறார். கீழ்கோர்ட் அதை ஒப்புக்கொண்டு அந்தத் திருமணத்தை ரத்து (Annulment of marriage; not divorce) செய்து விடுகிறது.

பின்னர், மனைவி, தனக்குச் ஜீவனாம்சம் வேண்டும் என்று அவர் மீது இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 25-ல் வழக்குப் போடுகிறார். ஆனால் கணவனோ, “திருமணமே ரத்து ஆகி விட்டது; கணவன்-மனைவி உறவே இல்லை என்றும்; அப்படி இருக்கும்போது, இந்த ஜீவனாம்ச மனு எப்படி செல்லுபடியாகும்” என்று எதிர்க்கிறார். ஆனாலும் அவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று கீழ்கோர்ட் சொல்கிறது.

அதை எதிர்த்து கணவன் ஐகோர்ட்டில் அப்பீல் செய்கிறார். அங்கு, இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 25-ன்படி “மனைவி என்ற நிலையை இழந்தவர் (a woman, who has ceased to be a wife) ஜீவனாம்சம் கேட்க முடியாது என்று உள்ளது என்று வாதம் செய்கிறார். 

ஐகோர்ட் விளக்கம்:

டைவர்ஸ் வாங்கிய பின்னரும், அந்தக் கணவன், அவனின் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்பதே சட்டம். ஆனால், அந்த மனைவி, மறு திருமணம் (Re-marriage) செய்யாமல் இருக்க வேண்டும் என்பது அதன் நிபந்தனை. 

கோர்ட் உத்தரவு மூலம், ஜீவனாம்சம் பெற்றுக் கொண்டிருக்கும் மனைவி, கீழ்கண்ட நிலைகளில், அவள் ஜீவனாம்சம் பெற முடியாது. 

“(1) அவள் மறு திருமணம் செய்து கொண்டால் (remarried).

(2) அவள் நடத்தை கெட்டவளாக வாழ்ந்தால் (she has not remained chaste).

எனவே டைவர்ஸ் வாங்கியவரும், திருமணத்தை வேறு காரணங்களுக்காக ரத்து செய்து கொண்டவரும், ஜீவனாம்சம் கேட்கும் உரிமை உள்ளது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. 

மூன்று வகைகளில் ஒரு இந்து திருமணத்தை ரத்து செய்யலாம்:

“(1) இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 11-ன்படி அந்த திருமணம் சட்டப்படி சரியில்லாத காரணங்களில் இருந்தால், அதாவது, பிரிவு 5(1), 5(4) & 5(5) இவைகளில் இருந்தால் அந்த திருமணம் செல்லாது (null and void) என்று கோர்ட் டிகிரி கொடுக்கலாம். 

(2) இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 12-ன்படி அந்த திருமணம் சட்டப்படி இல்லை என்று (annulment of marriage) டிகிரி கொடுக்கலாம். 

(3) இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 13-ல் சொல்லி உள்ள காரணங்களுக்காக டைவர்ஸ் டிகிரி (decree of divorce) கொடுக்கலாம். 

பிரிவு 5(1)-ல் அந்த திருமணம் நடக்கும் போது, அந்த ஆணுக்கோ, அல்லது அந்தப் பெண்ணுக்கோ ஏற்கனவே ஒரு மனைவியோ, கணவணோ உயிருடன் இருக்க கூடாது என்பது கன்டிஷன். அதை மீறினால் அப்படிப்பட்ட திருமணத்தை சட்டப்படி செல்லாது என்று null and void டிகிரியை கோர்ட் கொடுக்கும்.

பிரிவு 5(4)-ல் அந்த ஆணும் பெண்ணும் தடை செய்யப்பட்ட உறவுக்குள் இருக்க கூடாது. அதாவது அவர்கள் இருவரும் நெருங்கிய உறவாக இருக்க கூடாது. (குறிப்பாக தன்னுடைய சகோதரியை திருமணம் செய்ய முடியாது. தன்னுடைய தந்தையின் சகோதரியை (அத்தையை) திருமணம் செய்ய முடியாது). இவர்கள் எல்லாம் தடை செய்யப்பட்ட திருமண உறவுக்குள் வருவார்கள். அப்படிப்பட்ட திருமணத்தை சட்டப்படி செல்லாது என்று nulll and void டிகிரியை கோர்ட் கொடுக்கும்.

பிரிவு 5(5)-ல் திருமணம் செய்யும் ஆண் பெண் இருவரும் சபிண்டர்களாக இருக்க கூடாது. சபிண்டா உறவு என்பது, ஒரே ரத்த உறவு ஆகும். இது தாய் வழியில் மூன்று தலைமுறைக்கும், தந்தை வழியில் ஐந்து தலைமுறைக்கும் தொடரும். ஒரே மூதாதையர் வழி வந்தவர்கள் இருவருக்கும் நடக்கும் திருமணம் தடைசெய்யபட்ட உறவு அல்லது சபிண்டா உறவு (Spandia relationship or prohibited relationship) ஆகும். (இதன்படி பார்த்தால், அத்தைமகள், மாமன்மகள், அத்தைமகன், மாமன்மகன் இவர்கள் சபிண்டா உறவு என்னும் தடை செய்யப்பட்ட உறவுக்குள் வருவார்கள். ஆனாலும், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அத்தை அல்லது மாமன் மகன் அல்லது மகளைத் திருமணம் செய்வது சமுதாயப் பழக்க வழக்கமாக சில சமுதாயங்களில் தொடர்ந்து கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. இதை “தொடர் பழக்க-வழக்கம்” (Custom and Usage) என்பர். இப்படி ஒரு பழக்க-வழக்கம் தொடர்ந்து வெகுகாலம் ஒரு சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தால், அதை இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 3-ல் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே அது விதிவிலக்கால் செல்லுபடியாகும் திருமணம் ஆகும்).

பிரிவு 12-ன்படி கணவனோ, மனைவியோ ஆண்மை அல்லது பெண்மை அற்றவராக இருந்தால் (impotent; இந்த திருமணத்தின் போது, அந்தப் பெண் வேறு ஒருவர் மூலம் கருவுற்று இருந்தால்; இருவரில் ஒருவர் மனநிலை சரியில்லாதவராக இருந்தால்; அப்படி (இந்த விபரங்கள் தெரியாமல் மறைத்து நடந்த) திருமணத்தை, மற்றவர் மறுத்து விடலாம். இதை Voidable marriage அல்லது அவர் விரும்பினால் ஏற்றுக் கொள்ளலாம், விரும்பவில்லை என்றால் அந்த திருமணத்தை இதே காரணத்தைச் சொல்லி கோர்ட் மூலம் ரத்து (anullment of marriage) செய்து கொள்ளலாம்.

இந்து திருமணச் சட்டத்தின் முக்கிய பிரிவுகள்:

பிரிவு 5-ல் ஒரு திருமணத்துக்கு என்னென்ன நிபந்தனைகள் இருக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது. அதில், இருவருக்கும் இந்த திருமணம் நடக்கும்போது, ஏற்கனவே அவர்களுக்கு ஒரு கணவனோ மனைவியோ உயிருடன் இருக்க கூடாது; இந்த திருமணத்துக்கு சம்மதம் கொடுக்கும் அளவுக்கு மனநிலை சரியில்லாதவராக இருக்கக் கூடாது; பைத்தியமாக இருக்க கூடாது; ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் இருக்க வேண்டும்; இருவருக்கும் தடைசெய்யப்பட்ட ரத்த உறவாக இருக்க கூடாது; இருவரும் சபிண்டா உறவுக்குள் இருக்க கூடாது (இதற்கு விதிவிலக்கும் உண்டு); இருவரும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவராக இருக்க கூடாது, அதாவது இருவருமே இந்துக்களாவே இருக்க வேண்டும்.

பிரிவு 11-ல் Void Marriages செல்லவே செல்லாது என்ற திருமணங்களைப் பற்றிச் சொல்கிறது. பிரிவு 5(i), 5(iv), 5(v) இவைகளில் சொல்லி உள்ளதற்கு மாறாக செய்த திருமணங்கள் செல்லவே செல்லாது என்கிறது. 

பிரிவு 5(i)-திருமணத்தின் போது, அவர்களுக்கு வேறு கணவன் மனைவி இருக்க கூடாது. 

பிரிவு 5(iv)- தடைசெய்யப்பட்ட உறவாக இருக்க கூடாது. பிரிவு 5(v)- சபிண்டா உறவுக்குள் இருக்க கூடாது). 

பிரிவு 12-ல் Voidable Marriage (avoid this marriage) வேண்டுமானால் திருமணத்தை வெட்டிக் கொள்ளலாம் என்று சொல்கிறது. இதன்படி, யாராவது ஒருவர் இந்த திருமணம் வேண்டாம் என்று சொன்னால் ரத்து செய்து கொள்ளலாம். இல்லையென்றால், அந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டு வாழலாம் என்று சொல்கிறது. 

அதன்படி, பிரிவு 12(1)-ல் அவர்களில் யாருக்காவது ஆண்மை அல்லது பெண்மை இல்லை என்றால் (impotent), மற்றவர் விரும்பினால் பிரிந்து கொள்ளலாம், அல்லது பரவாயில்லை என்றால் சேர்ந்து வாழலாம். 

பிரிவு 5(ii)-ன்படி திருமணத்துக்கு சம்மதம் கொடுக்கும் மனநிலையில் இல்லாமல் மனநிலை சரியில்லாதவராக இருந்தால் அதை ஏற்றுக் கொண்டும் வாழலாம் அல்லது வேண்டாம் என்றால் பிரிந்து கொள்ளலாம். (ஒருவனை போதை ஏற்றிவிட்டு, அவனிடம் சம்மதம் வாங்கி திருமணம் செய்திருந்தால், அதை அவன் பின்னர் மறுத்து இந்தப் பிரிவில் திருமண உறவை விலகிக் கொள்ளலாம்).

பிரிவு 12(2)-ல் திருமணத்தின் போது, அந்தப் பெண் வேறு ஒரு ஆணால் கர்ப்பமாகி இருந்தால், இப்போது திருமணம் செய்யும் கணவன் அதை தெரிந்தவுடன் திருமணத்தை மறுத்து விலகலாம், அல்லது ஏற்றுக் கொண்டு வாழலாம். 

ஆனால், இந்தக் காரணத்தைச் சொல்லி திருமணத்தை விலக்கும் போது (avoiding the marriage) அந்த திருமணம் நடந்து ஒரு வருடத்துக்குள் அவ்வாறு செய்ய வேண்டும். அந்த திருமணத்தின் போது, அந்த விபரம் தனக்குத் தெரியவில்லை, மறைத்து விட்டார்கள் என்றும் நிரூபிக்க வேண்டும். அதற்கு மேல் காலம் கடந்து விட்டால், அது சம்மதம் என்றே சட்டம் எடுத்துக் கொள்கிறது. அதற்குமேல் அந்த திருமணத்தை இந்த காரணத்துக்காக ரத்து செய்து விட முடியாது.







இந்து சாஸ்திர சட்டம் (Hindu Sastric Law)

இந்து சாஸ்திர சட்டம்

Hindu Sastric Law 


இந்து சாஸ்திர சட்டத்தின் அடிப்படையே ஸ்மிருதி (Smriti) ஆகும். இந்த ஸ்மிருதியை பலவாறு வியாக்கியானம் செய்துள்ளனர். அவ்வாறு செய்தவர்களின் கொள்கைகளை இந்தியா முழுவதுமாக எல்லோரும் ஆதரிக்கவில்லை. ஒரு சில பகுதிகளில் ஒருசிலரின் கொள்கைகள் ஆதரவு பெற்றன. அதில் முக்கியமாக இரண்டு கொள்கைகள் இந்தியாவில் வேரூன்றி இருந்து வந்தன. ஒன்று மித்தாக்சரா  வியாக்கியான சட்டம் (Mitakshara Law). மற்றொன்று தயாபாக வியாக்கியான சட்டம் (Dayabhaga Law).


இதில் மித்தாக்சரா சட்டமானது  இந்தியாவின் பெரும்பகுதிகளில் பின்பற்றப் பட்டது. ஆனால் தயாபாக சட்டம் இந்தியாவில் கிழக்குப் பகுதியான பெங்கால் பகுதியில் (வங்காளப்பகுதியில்) மட்டும் பின்பற்றப்பட்டது. 


மேலும் மித்தாக்சரா வியாக்கியானச் சட்டம் மேலும் நான்கு பிரிவுகளாக ஆனது. பெனாரஸ் முறை, மிதிலா முறை, மகாராஷ்டிரா முறை அல்லது பாம்பாய் முறை, மற்றும் திராவிட முறை அல்லது மெட்ராஸ் முறை.  இவ்வாறு ஒவ்வொரு பகுதியிலும் இந்த மித்தாக்சரா சட்ட முறையானது அந்த அந்த பகுதிக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்.


இப்படி மாறுபட்ட கொள்கைகள் இருந்தாலும், இவை எல்லாம் இந்துக்களின் சொத்துக்களில் பங்குரிமை, திருமணம், மண முறிவு, தத்து எடுப்பது, வாரிசு உரிமை போன்றவற்றைப் பற்றி விளக்கி உள்ளது.


இந்த சட்டங்களைத்தான் பிரிட்டீஸ் அரசு, இந்தியாவை ஆட்சி செய்யும் போது, இந்துக்களின் சட்டமாக கொண்டு வந்தது. 


Mitakshara law


இந்த மித்தாக்சரா இந்து சட்டத்தின்படி, ஒருவருக்கு அவரின் தந்தை, பாட்டன், முப்பாட்டன் வழியில் சொத்துக்கள் வாரிசு முறைப்படி கிடைத்தால், அது அவரின் பூர்வீகச் சொத்து ஆகும். (It is an Ancestral Property or Coparcenary Property). அப்படிக் கிடைத்த பூர்வீகச் சொத்தில், அவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரன் ஆகிய மூன்று தலைமுறையும், அவர்களின் "பிறப்பால்" பங்கு பெறுவர். இதில் பெண்களுக்கு சொத்து உரிமையே கிடைக்காது. ஆண்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதுவும், பூர்வீகச் சொத்து வைத்துள்ளவரின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்ற மூன்று தலைமுறைக்கு மட்டுமே சொத்து கிடைக்கும். இது பிறப்பால் கிடைக்கும் சொத்துரிமை என்பதால் இதை Survivorship என்று சொல்வர். அதாவது, உயிருடன் இருக்கும்போது சொத்துரிமை இருக்கும், இறந்து விட்டால் அந்த உரிமை போய்விடும். வாரிசு முறைப்படி (Succession) அவரின் மகனுக்கு கிடைக்காது.  இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், பூர்வீகச் சொத்தை வைத்திருப்பவர், அவரின் மகன், அவரின் பேரன், அவரின் கொள்ளுப்பேரன் என (சொத்து வைத்திருப்பவரையும் சேர்த்துக் கொண்டால்) மொத்தம் நான்கு தலைமுறை ஆண்கள் அந்த பூர்வீகச் சொத்தில் பிறப்பால் தலைக்கு ஒரு பங்கு உரிமை பெறுவர். கிட்டத்தட்ட ஒரு பங்கு நிறுவனத்தில் பார்ட்னர்கள் போலவே இருப்பார்கள். தந்தை, மகன், பேரன் என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை. எல்லோருக்கும் சம உரிமை உண்டு. இவர்கள், இந்த நான்கு தலைமுறை ஆண்களை கோபார்சனர்கள் (Coparceners) என்று இந்த மித்தாக்சரா இந்து சாஸ்திர சட்டம் சொல்கிறது. 


இந்த ஆண்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால், அவரின் பங்கு, வாரிசு முறையில் யாருக்கும் போகாது. உயிருடன் இருக்கும் மற்ற ஆண்கள் (கோபார்சனர்கள்) அந்த சொத்தை எடுத்துக் கொள்வார்கள். இது ஒரு இந்து கூட்டுக்குடும்பம். கோபார்சனர்கள் உயிருடன் இருக்கும் போது, இந்த சொத்தில், யாருக்கு எவ்வளவு பங்கு என்று உறுதியாகச் சொல்ல முடியாது. தந்தை இறந்துவிட்டால், அடுத்த மூன்று தலைமுறை இந்த சொத்தை அனுபவிக்கும். மகன் இறந்து விட்டால், அவரிலிருந்து அதற்கு அடுத்த மூன்று தலைமுறை சொத்தை அனுபவிக்கும். இப்படி இது ஒரு தொடர்கதை மாதிரி போய்க்கொண்டே இருக்கும். இதைத்தான் இந்து கோபார்சனரி சொத்து அல்லது பூர்வீகச் சொத்து (Hindu Coparcenary Property or Hindu Ancestral Property or Hindu Joint Family Property) என்று பலவாறு சொல்லப்படுகிறது. ஆனால் சட்டத்தில் இதன் பெயர் கோபார்சனரி சொத்து என்றே பெயர். 


இந்த கோபார்சனரி சொத்து முறை (அதாவது உயிருடன் இருக்கும் நான்கு தலைமுறை ஆண்கள் சொத்தை அனுபவிக்கும் உரிமை) பல நூறு ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. 1956-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், புதிய சட்டம் கொண்டு வந்தனர். அதன் பெயர் இந்து வாரிசுரிமை சட்டம் 1956 (The Hindu Succession Act 1956). அதில் பெரிய மாற்றங்களை செய்துள்ளனர். அதன்படி, கோபார்சனரி சொத்துக்களின் பழைய முறையான “உயிருடன் இருக்கும் நான்கு தலைமுறை ஆண்கள் என்னும் கோபார்சனர்கள்” உயிருடன் இருப்பதால் சொத்தை அடைவார்கள் என்ற நிலையை மாற்றி, அந்த கோபார்சனரி ஆண் இறந்து விட்டால் அவரின் வாரிசுகள் (மனைவி, மகள், மகன், இறந்த மகனின் மகன்/மகள், இறந்த மகளின் மகன்/மகள்) இவர்களுக்கும் பங்கு, வாரிசு உரிமைப்படி கிடைக்க வகை செய்யப்பட்டது.


பழைய சட்டப்படி, உயிருடன் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமே பங்கு இருந்தது. இதை Survivorship முறை என்பர் (உயிருடன் இருந்தால் பங்கு உண்டு என்னும் முறை. ஆனால் 1956 புதிய சட்டப்படி, Survivorship முறை ஒழிக்கப்பட்டு, இறந்தவரின் வாரிசுகளுக்கு பங்கு அதாவது Succession முறைப்படி எல்லா வாரிசுகளுக்கும் (ஆண் பெண் உட்பட) உண்டு  என்று கொண்டு வரப்பட்டது. அதனால்தான், இந்த 1956 சட்டத்துக்கு Hindu Succesion Act என்றே பெயரிடப்பட்டது.

** 

Mohammedan Gift or Settlement

Mohammedan Gift or Settlement

முகமதியர் செட்டில்மெண்ட் அல்லது தானத்தை ஹிபா (Hiba) என்று முகமதிய சட்டம் சொல்கிறது. ஹிபா என்ற அரபு வார்த்தைக்கு “தானம்” என்று பொருள். 

ஒரு முகமதியர், தனது சொத்தை, ஹிபா என்னும் தானமாக வேறு ஒருவருக்குக் கொடுக்கலாம். அதை வாய்மொழியாகவே கொடுக்க முடியும். பத்திரம் ஏதும் எழுதிக் கொள்ளவோ, பதிவு செய்யவோ வேண்டியதில்லை. இந்திய சுப்ரீம் கோர்ட்டும் இதே கருத்தை உறுதி செய்துள்ளது.

ஆனால் அதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், பொதுவாக ஹிபா என்னும் செட்டில்மெண்ட்டை பத்திரமாக எழுதிப் பதிவு செய்து கொள்வது நல்லது.

சிலர், ஹிபா (வாய்மொழி தானம்) கொடுத்துவிட்டேன் என்று ஒரு உறுதிமொழிப் பத்திரம் மட்டும் எழுதி அதை நோட்டரி பப்ளிக் வக்கீல் மூலம் உறுதி செய்து கொள்வார்கள். அந்த உறுதிமொழிப் பத்திரத்தைக் கொண்டு, அந்த சொத்தை விற்கவோ, அனுபவிக்கவோ, பட்டா, வரி மாறுதல் செய்து கொள்ளவோ முடியும். 

இந்திய சொத்துமாற்றுச் சட்டம் 1882-ன் 122-வது பிரிவு (The Transfer of Property Act 1882, Sec.122)-ல் தானம் (Gift) என்றால் என்ன என்று சொல்லி உள்ளது. இந்தப் பிரிவானது, முகமதியர்களுக்கு பொருந்தாது என்று அந்தச் சட்டத்தில் முதலிலேயே சொல்லப் பட்டுள்ளது.

சொத்து மாற்றுச் சட்டத்தின் பிரிவு 122-ல் ஒரு சொத்தை, உயிருடன் இருக்கும் ஒருவருக்கு கொடுக்கலாம், அல்லது அதுவரை பிறக்காத பிள்ளைக்கும் கொடுக்கலாம், சொத்தின் உடைமையை (Possession) வேறு ஒரு சூழ்நிலையிலும் கொடுக்கலாம் என்று சொல்லி உள்ளது. 

பிரிவு 122-ல் விளக்கி உள்ள தானம் என்பது இப்படி இருப்பதால், அது முகமதியர்களுக்கு பொருந்தாது என்று சொல்லி உள்ளது. முகமதியர்களின் ஹிபா என்னும் செட்டில்மெண்ட் அல்லது தானம், அப்போது உயிருள்ள ஒரு நபருக்குத்தான் கொடுக்க முடியும், அதுவும் தானம் கொடுக்கும் சொத்தின் உரிமை, உடைமை இவைகளையும் அப்போதே கொடுத்து விட வேண்டும். பிறக்காத பிள்ளைக்கு ஹிபா கொடுக்க முடியாது என்று முகமதியர் சட்டம் (ஷரியத் சட்டம் -Shariat Law) உள்ளது. எனவே தான் சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 122 என்பது முகமதியர்களுக்குப் பொருந்தாது என்று அந்தச் சட்டத்திலேயே சொல்லி உள்ளது.

எனவே முகமதியர் செட்டில்மெண்ட் செய்யும் போது, மூன்று விஷயங்களை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

“(1) ஹிபா என்னும் செட்டில்மெண்ட் (அல்லது தானம்) பத்திரமாக எழுதி பதிவு செய்ய நினைத்தால், அந்த சொத்தின் உரிமையை, உடைமையை அப்போதே அந்தப் பத்திரத்திலேயே கொடுத்து விட வேண்டும். ஆயுட்கால உரிமையை நிறுத்தி வைத்துக் கொள்வது போல, நிறுத்திக் கொள்ள முடியாது. 

(2) ஹிபா பத்திரத்தில், உயில் போன்ற வாசகங்களை இருக்க கூடாது. எதைத் தானமாக கொடுத்தாலும், அதை அப்போதே கொடுத்து விட வேண்டும். உடைமையை வேறு ஒரு தேதிக்கோ, பின்னர் எடுத்துக் கொள்ளலாம் என்றோ எழுத முடியாது.

(3) ஹிபா என்னும் தானத்தை, பிறக்காத பிள்ளைக்கு எழுதி வைக்க முடியாது. அன்று உயிருடன் இருக்கும் ஒருவருக்குத்தான் எழுதி வைக்க முடியும். 

இந்த மூன்று விஷயங்கள்தான், இந்துக்களின் செட்டில்மெண்டுக்கும், முகமதியர்களின் செட்டில்மெண்டுக்கும் உள்ள  வித்தியாசங்கள் ஆகும்.

Sec.122 of Transfer of Property Act 1882 (Gift)

The Gift or Settlement as defined in Sec.122 of the Transfer of Property Act 1882 does not apply to Mohammedans. (This Sec.122 of TP Act applies to all other persons except Mohammedans).

The Mohammedan Gift or Settlement is called “HIBA” (or Gift) under the Mohammedan Law. 

In Mohammedan Law, a Hiba (or generally called Gift) may be oral and there is no need to put it in writing. That is, a Hiba is normally in the form of an oral gift.

But as per Transfer of Property Act and the Registration Act, any transfer of interest in immovable property should be in writing and it should be registered. Therefore, for convenience of future use, this practice of oral Hiba (without registratoin) is not advisable. The Supreme Court also approved the Hiba in the form of oral gift without registration.

But for all practial purposes, it is better to get such Hiba or Settlement or Gift in writing and registration.

Under this Mohammedan Gift or Settlement or Hiba –

“(1) such Gift or Settlement or Hiba should be “an absolute one”  that is “a Mohammedan cannot give his property after his lifetime”. (such after lifetime settlement/gift is possible among Hindus).

(2) in such Gift or Settlement or Hiba, the possession should be given immediately along with the gift deed. The possession of the gifted property cannot be postponed to a future date. (In Hindu settlement deeds, such possession can be postponed to a future date).

(3) in a Hiba (Mohammedan Settlement or Gift), the property cannot be gifted to an unborn person.

Thus these are the three esssential conditions for a Mohammedan Gift or Settlement or Hiba.

Under the present Registration Act in Tamil Nadu:

As per Tamil Nadu Regn Act – a Mohammedan can settle his property to his family members (like that of Hindus) by way of Settlement deed by paying 1% stamp duty or the maximum of Rs.25,000/-.

BUT the three important conditions to be – (1) in such settlement deed, the Settlor (donor) has to settle his property absolutely. There is no question of after lifetime settlement. (2) the possession should be given immdieately. There is no question of postponement of giving possession of the property to a future date. (3) a Mohammedan cannot gifted (Hiba or Settlment or Gift) his property to an unborn person.

Those three things can be permitted among Hindu Settlements. Those are the only three differences between the Hindu Settlement and Muslim Settlement.

**





பிறக்காத குழந்தைக்கு சொத்து கொடுக்க முடியுமா

பிறக்காத குழந்தைக்கு சொத்து கொடுக்க முடியுமா

Settlement or Gift by Hindus: (இந்துக்களின் செட்டில்மெண்ட் அல்லது தானம்);

செட்டில்மெண்ட் அல்லது தானம் என்பது ஒரு சொத்தை தானம் கொடுப்பது. அதாவது அந்தச் சொத்துக்கு எந்தவித பணமும் பெறாமல் தானமாக மற்றொருவருக்கு கொடுப்பது. 

குடும்பத்துக்குள் ஒரு சொத்தை தானமாகக் கொடுப்பது செட்டில்மெண்ட் (Settlement) என்றும், வெளி நபருக்கு ஒரு சொத்தை இனாமாக கொடுப்பது தானம் (Gift) என்றும் பொதுவான கருத்து. ஆக இரண்டுமே  தானம் (Gift) தான்). இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இப்படிப்பட்ட தானம் (Gift) எப்படி இருக்க வேண்டும் என்று சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882 (The Transfer of Property Act 1882) Sec.122-ல் சொல்லப் பட்டுள்ளது. 

உயிலும், செட்டில்மெண்டும்:

ஒரு உயிலில் (Will), சொத்தை எழுதி வைத்தவர், இறந்த பிறகு, மற்றொருவருக்கு அந்தச் சொத்து கிடைக்கும். ஆனால் செட்டில்மெண்ட் (தானம்) பத்திரத்தில், சொத்தை கொடுத்தவர் இறப்பதற்கு முன்னரே, அந்த சொத்தைத் தானம் பெற்றவர் அதைப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 122=ல் தெளிவு படுத்தி உள்ளது. (இதுதான் உயிலுக்கும், செட்டில்மெண்டுக்கும் உள்ள ஒரே வித்தியாசம்).

இந்துக்களின் செட்டில்மெண்ட் பத்திரம்:

இந்துக்கள் உயில் எழுதலாம் (தன் ஆயுட்காலத்துக்கு பிறகு அந்த சொத்தை யார் அடையலாம் என்று எழுதுவது உயில்). இந்துக்கள் செட்டில்மெண்ட் எழுதலாம் (தன் ஆயுட்காலத்திலேயே அதை கொடுத்துவிட்டுச் செல்வது செட்டில்மெண்ட்).

பிறக்காத குழந்தைக்கு சொத்தைக் கொடுப்பது:

இந்துக்களின் உயில், செட்டில்மெண்டுகளில், பிறக்காத குழந்தைக்கும் எழுதி வைக்கலாம் என்று சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882-ல் பிரிவு 13-ல் சொல்லி உள்ளது. எனவே ஒரு இந்துவின் உயில் அல்லது செட்டில்மெண்ட் பத்திரத்தில் (தானப்பத்திரத்தில்) ஒருவர், திருமணம் ஆகாத தன் மகனுக்கோ, மகளுக்கோ (அதாவது அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு) அவரின் சொத்தை செட்டில்மெண்டாக எழுதிக் கொடுத்து, அதை அவரின் மகன்/மகள் ஆயுட்காலம் வரை அனுபவித்து வந்து, பின்னர் அவர்களுக்கு இனிமேல் பிறக்கும் குழந்தைகள் முழு உரிமையுடன் அந்தச் சொத்தை அடையும்படி எழுதி வைக்கமுடியும். 

சொத்து மாற்றம் என்றால் என்ன (What is Transfer of Property):

இப்படி சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 13-ல் சொல்லி உள்ளதில் சிலர் குழம்பி விடுகின்றனர். பொதுவாக, சொத்துரிமை மாற்றுச் சட்டம் Transfer of property-ல் “சொத்து மாற்றம்” என்றால் என்ன என்று அந்தச் சட்டத்தின் பிரிவு 5-ல் சொல்லி உள்ளது. அதன்படி, ஒரு சொத்தை (அசையும் சொத்து, அசையாச் சொத்து) ஒரு உயிர் உள்ள  நபர், மற்றொரு உயிர் உள்ள நபருக்கு, சொத்தை உரிமை மாற்றிக் கொடுப்பது என்று விளக்கி உள்ளது. (Transfer of property means – an act by which a living person conveys property to another living person). இங்கு “உயிர் உள்ள நபர்” என்பதற்கு விளக்கமாக, மனிதர்களையும், கம்பெனிகளையும், தனிநபர் நிறுவனங்களையும், கூட்டு நிறுவனங்களையும், சொசைட்டிகளையும்  சேரத்தே “உயிர் உள்ள நபர்” என்று சொல்லி உள்ளது. எனவே கம்பெனிகளும் ஒரு உயிர் உள்ள நபர் போலவே என்று இந்தச் சட்டம் விளக்கி உள்ளது.

ஆனால், பிரிவு 13-ல் பிறக்காத பிள்ளை என்பது ஒரு உயிர் உள்ள மனிதன் இல்லையே, அப்படி இருக்கும்போது, அவனுக்கு எப்படி சொத்தை மாற்றம் செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறது. இந்துக்களுக்கு மட்டும் அப்படி ஒரு சிறப்பு சலுகையை, இந்திய சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882 மற்றும் இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925 இவை இரண்டிலும் இந்தச் சலுகையைக் கொடுத்துள்ளது. 

இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925 என்பது கிறிஸ்தவர்களின் வாரிசு உரிமை பற்றியது. மேலும் அதில் இந்துக்களின் உயில் எப்படி இருக்க வேண்டும் என்று விரிவாகச் சொல்லி உள்ளது. அதை அப்படியே சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882-ல் 2-வது அத்தியாயம் (பிரிவுகள் 5-லிருந்து 53ஏ வரை) சொல்லி உள்ளது. இது ஒன்றை ஒன்று காப்பி அடித்தது போலவே இருக்கும்.

இந்துக்களின் பிறக்காத பிள்ளைக்கு ஒருவர், தனது சொத்தை எழுதிக் கொடுப்பது என்பது, இந்திய சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 5-க்கு எதிராகவே உள்ளது. எப்படி என்றால்: அந்த சட்டப்படி, உயிரோடு இருப்பர், மற்றொரு உயிரோடு இருப்பவருக்கு மட்டுமே சொத்தை கொடுக்க முடியும் என்று பிரிவு 5-ல் சொல்லி உள்ளது.

ஆனால் இந்த பிரிவு 5-க்கு விதிவிலக்காகவே, அந்த சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் பிரிவு 13-ல் சொல்லப் பட்டுள்ளது. அந்த பிரிவு 13-ன்படி, பிறக்காத பிள்ளைக்கும் சொத்தை மாற்றிக் கொடுக்கலாம் என்று சொல்லி உள்ளது. (ஆண், பெண் யாராக இருந்தாலும், தன்னுடைய பிள்ளையாக இருந்தாலும், வேறு யாருடைய பிள்ளையாக இருந்தாலும் சரியே).

அப்படி என்றால், அந்த பிறக்காத பிள்ளை, எப்படி அந்த சொத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்ற சந்தேகம் எழுகிறது. சொத்தை தானம் கொடுக்கும்போது, அதை வாங்கிக் கொள்வதற்கு ஒரு ஆள் வேண்டும். அவர்தான் இன்னும் பிறக்கவே இல்லையே என்பதே அந்த சந்தேகம்.

அதற்குதான், அந்த பிரிவு 13-ல், ஒருவர் ஒரு சொத்தை, உயிருடன் இருப்பவருக்கு கொடுத்து, அவர் காலத்துக்குப் பின்னர், அந்த பிறக்காத பிள்ளைக்கு கொடுக்க வேண்டும் என்று தெளிவு படுத்தி உள்ளது.

இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும். அதாவது, ஒருவர் தன் சொத்தை, செட்டில்மெண்ட் (அல்லது உயில்) எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தன் ஆயுட்காலம் வரை அதை அனுபவிக்க உரிமை உண்டு என்றும், அவரின் காலத்துக்குப் பின்னர், அவரின் அப்போது உயிருடன் உள்ள திருமணம் ஆகாத மகன், அவன் ஆயுட்காலம் வரை இந்த சொத்தை அனுபவித்து வரு வேண்டும் என்றும், அந்த மகன் ஆயுட்காலத்துக்குப் பின்னர், அவனுக்கு திருமணம் ஆகி அதன் மூலம் பிறந்த அவனின் மகனுக்கு முழு உரிமையுடன் சேர வேண்டும் என்று எழுதி இருக்கிறார். இந்த செட்டில்மெண்ட் எழுதும்போது, அவரின் மகன் மட்டுமே உயிருடன் இருக்கிறான். பேரன் பிறக்கவேயில்லை. இப்படிப்பட்ட செட்டில்மெண்ட் சட்டப்படி செல்லும்.

Contingent Interrest நடக்கும் வாய்ப்பு உள்ள செயல்கள்:

ஆனால், அந்த பிறக்காத பிள்ளையின், பிறக்காத பிள்ளைக்கு அவ்வாறு எழுதி வைக்க முடியாது. ஏனென்றால், பிறக்காத பிள்ளை என்பதே, பிறக்குமா பிறக்காதா என்பதே சந்தேகம். அப்படி இருக்கும்போது, பிறக்காத பிள்ளையின், பிறக்காத பிள்ளை  என்பது இரண்டு சந்தேகங்களை கொண்டது. இதை Contingent Interest என்று சட்டம் சொல்கிறது. அதாவது, நடக்குமா நடக்காதா என்ற ஒரு வாய்ப்புக்கு மட்டும் சட்டம் அனுமதிக்கிறது. அப்படி சந்தேகத்தில் இருக்கிற இன்னொரு வாய்ப்புக்கு சட்டம் அனுமதிக்கவில்லை.

இன்னொரு உதாரணம்: ஒருவர் தன் சொத்தை, தனது பிறக்காத மகனுக்கு எழுதிக் கொடுக்கிறார். அவர் செட்டில்மெண்ட் எழுதும்போது, அவர் மகன் பிறக்கவே இல்லை. இது செல்லும். ஆனால், சொத்தை கொடுத்தவர் இறக்கும்போது, அந்த மகன் பிறந்து இருக்க வேண்டும். இல்லையென்றால், அந்த பத்திரம் செல்லாது. அவர் இறந்தபின்னர் பிறந்த மகனுக்கு சொத்து கிடைக்காது. ஏனென்றால், அவர் இறக்கும்போது, சொத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஆளே இல்லை. 

இதையே, அவர் தன் மனைவி அவள் ஆயுட்காலம் வரை அனுபவித்து வந்து, அவள் ஆயுட்காலத்துக்குப் பின்னர், அவரின் பிறக்காத மகன் அடைய வேண்டும் என்று எழுதி இருந்தால் அது செல்லும். ஒரே வேளை, அவளுக்கு மகனே பிறக்காமல் போய் விட்டால், Contingent Interest என்னும் வாய்ப்பு நடக்கவே இல்லை என்பதால், அவளே முழுஉரிமையுடன் அடைந்து கொள்வாள். (அதாவது அவள் கணவன் இறந்துவிட்டால், அவளுக்கு குழந்தை பிறக்காது, அல்லது அவளுக்கு 50 வயதை தாண்டி விட்டால் அவள் Menopause என்னும் கரு உருவாகும் நிலை முடிந்து விட்டால், அப்போது அவள் சொத்தை முழுஉரிமையுடன் அடைந்து கொள்வாள்.

ஆக, Contingent என்பது நடக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று பொருள். ஆனால் அது இதுவரை நடக்கவில்லை. இனி நடக்கலாம் என்ற வாய்ப்பு உள்ளவைகளை இவ்வாறு Contingent என்று சட்டம் சொல்கிறது. ஒருவன் ஆகாயத்தில் நடந்து சென்றால் அவனுக்கு என் சொத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று எழுதி இருந்தால், அது எப்போதுமே நடக்க முடியாத வாய்ப்பு உள்ளது. அவ்வாறு எழுதி இருந்தால், நடக்க முடியாத வாய்ப்பு (Not certain to happen) என்று சட்டம் கருதி அந்த நிபந்தனையே செல்லாது என்றும், எனவே அந்த நடத்திக் காட்ட முடியாத நிபந்தனையை நிறைவேற்றாமலேயே அவனே சொத்தை முழுஉரிமையுடன் அடைந்து கொள்ளலாம் என்று சட்டம் சொல்கிறது.

இப்படிப்பட்ட விபரங்களைத்தான் இந்திய சொத்துரிமை சட்டம் அத்தியாயம் 2-ல் பிரிவு 5 முதல் 53ஏ வரை சொல்லி உள்ளது. இந்த அத்தியாயம் 2-ல் சொல்லி உள்ள எவையும் முஸ்லீம்களுக்கு பொருந்தாது. ஆகவே முஸ்லீம்கள், பிறக்காத பிள்ளைக்கு சொத்தை எழுதிக் கொடுக்க முடியாது.

முகமதியர்களின் (Mohammedan or Muslim) செட்டில்மெண்ட் அல்லது தானம்:

 இந்திய சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882 என்பது ஒரு பொதுச் சட்டம். அது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும் என்பது பொதுவான விதி. ஆனால், அந்த சட்டத்தின் அத்தியாயம்-2 (Chapter-II) என்பது, பிறக்காத குழந்தைக்கு சொத்துக் கொடுப்பது பற்றிச் சொல்வதால், அது முகமதியர்களுக்கு அந்த அத்தியாயம் மட்டும் செல்லாது என்று அந்தச் சட்டத்தில் விலக்கி வைக்கப் பட்டுள்ளது.

அதே போலவே, சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் தானம் என்பதைப் பற்றிச் சொல்லும் பிரிவான பிரிவு 122-ம் அதேபோல முகமதியர்களுக்குச் செல்லாது என்று விலக்கி வைக்கப் பட்டுள்ளது.

ஏனென்றால், ஒரு சொத்தை தானம் கொடுக்கும்போது, இந்துக்கள் பிறக்காத பிள்ளைக்கும் கொடுப்பது வழக்கம். அதைப்பற்றி அந்த சட்டம் பிரிவு 122 சொல்வதால், அதையும் முகமதியர்களுக்குச் செல்லாது என்று விலக்கி விட்டுள்ளது. 

முகமதியர்களின் தானம் (செட்டில்மெண்ட்) சற்று வித்தியாசமானது. முகமதிய சட்டப்படி, (ஷரியத் சட்டப்படி- Sharit Law), ஒரு முகமதியர், அவரின் சொத்தை எந்த பத்திரமும் (தானம், செட்டில்மெண்ட்) எழுதாமலேயே, வாய்மொழியாக, அவரின் சொத்தை யாருக்காவது தானம் கொடுக்கலாம் என்று முகமதிய சட்டம் சொல்கிறது. இதை ஷரியத் சட்டப்படி ஹிபா (Hiba) என்பர். ஹிபா என்றால் அரபு மொழியில் “தானம்” என்று பொருள்.  ஹிபா என்ற தானம் கொடுக்கும்போது, பத்திரம் எழுதிக் கொள்ள வேண்டியதில்லை என்றும் அதை பதிவு செய்து கொள்ள வேண்டியதில்லை என்றும் சொல்கிறது. ஆனால், அந்த தானம் கொடுக்கும் சொத்தை உடனே முழு உரிமையுடன் கொடுக்க வேண்டும் என்பதே நிபந்தனை. ஆயுட்கால உரிமை ஏதும் வைத்துக் கொள்ள முடியாது. அதேபோல பிறக்காத பிள்ளைக்கும் கொடுக்க முடியாது. ஏனென்றால், சொத்தை தானமாகப் பெறுபவர் அன்றே கைநீட்டி அதை வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது அதன் பொருள்.

ஆனாலும், முகமதியர் எழுதிக் கொள்ளும் செட்டில்மெண்ட் பத்திரங்களை எழுதிப் பதிவு செய்து கொள்வது நல்லது என்பதால், (அப்போதுதான் அது ஒரு பத்திர ஆதாரமாக இருக்கும் என்பதால்), பலரும் செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதிப் பதிவு செய்து கொள்கின்றனர். 

முகமதியர்களின் செட்டில்மெண்ட் எழுதும் போது, கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், சொத்தின் முழு உரிமையும் அன்றே கொடுத்திருக்க வேண்டும். ஆயுட்கால உரிமை போன்றவைகளை எழுத முடியாது. பிறக்காத பிள்ளைக்கு செட்டில்மெண்ட் எழுத முடியாது. அவ்வளவுதான். (இந்துக்களின் செட்டல்மெண்ட் பத்திரத்தில்  இதை எல்லாம் எழுதிக் கொள்ள முடியும். இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்).

** 




Monday, September 14, 2020

பவர் ஆப் அட்டார்னி பத்திரம்

பவர் ஆப் அட்டார்னி

தமிழ்நாட்டில் அசையாச் சொத்து இருக்கும்போது, அதன் பவர் பத்திரத்தை வேறு மாநிலத்தில் பதிவு செய்ய முடியுமா?

Registration Act Sec.28(a)-ன்படி தமிழ்நாட்டில், ஒரு சொத்து எந்த சார்-பதிவாளர் அலுவலக எல்லைக்குள் இருக்கிறதோ, அந்த சார்-பதிவாளர் அலுவலகத்தில்தான், பவர் பத்திரத்தை பதிவு செய்ய முடியும். 

ஆனாலும், அதற்கு விதிவிலக்காக – பவர் பத்திரத்தை எழுதிக் கொடுக்கும் பிரின்சிபல் வேறு சார்-பதிவாளரின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்தால் (வேறு மாநிலத்தில் வசித்தாலும்) அந்த சார்-பதிவாளர் முன்னர் பவர் பத்திரத்தை பதிவு செய்து கொள்ளலாம். அது செல்லுபடியாகும் என்று Regn Act Sec.28(a) Proviso சொல்கிறது. (இதை தமிழ்நாடு பதிவுத்துறையும் அங்கீகரிக்கிறது).

ஆனால், Regn Act Sec.28(b)-ன்படி, ஒரு சொத்து தமிழ்நாட்டில் இருக்கும்போது, வெளி மாநிலத்தில் பவர் பத்திரத்தை பதிவு செய்திருந்தால், அந்த பவர் பத்திரம் செல்லாது என்று சொல்கிறது.

இந்த குழப்பத்தை தீர்க்க – Tamil Nadu IG of Regn Circular-ல் தெளிவுபடுத்தி உள்ளது. அதன்படி, Regn Act Sec.28(a) Proviso-வின் படி, வெளி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட பவர் பத்திரத்தைக் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள சொத்தை பதிவு செய்யலாம் என்றும் அதற்கு தடையில்லை என்றும் சொல்லி உள்ளது.

எனவே, முடிந்தவரை, சொத்து இருக்கும் அந்த அந்த சார்-பதிவாளர் அலுவலகத்திலேயே அந்த பவர் பத்திரத்தை பதிவு செய்வது நல்லது. ஆனாலும், சொத்தின் உரிமையாளர் / பிரின்சிபல் தமிழ்நாட்டில் வேறு இடத்தில் (சொத்து இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்தில் இருந்தால்), அவர் குடியிருக்கும் பகுதியில் உள்ள சார்-பதிவாளரிடம் பவர் பத்திரம் பதிவு செய்து கொள்ளலாம். அதுவும் செல்லுபடியாகும்.

அதேபோல, சொத்து தமிழ்நாட்டில் இருக்கும்போது, சொத்தின் உரிமையாளர்/ பிரின்சிபல் வேறு மாநிலத்தில் இருந்தாலும், அவரும் அவர் குடியிருக்கும் பகுதியில் உள்ள சார்-பதிவாளரிடம் பவர் பத்திரம் பதிவு செய்து அனுப்பலாம். அதுவும் செல்லுபடியாகும். அதற்கு Regn Act Sec.28(b) தடையாக இருக்காது.

அப்படி தமிழ்நாட்டில், சொத்து-இருக்கும் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யாத பவர் பத்திரங்களி்ல் (அதாவது வேறு பகுதியில் அல்லது வேறு மாநிலத்தில் அந்தப் பவர் பத்திரத்தை பதிவு செய்திருந்தால்), அதைக் கொண்டு கிரயம் முதலிய பத்திரங்களை பதிவு செய்ய வரும்போது, அந்த கிரயம் முதலிய பத்திரங்களை பதியும் போது நிரந்தர பதிவு எண் கொடுக்காமல் (Pending Regn) தற்காலிக பதிவு எண் கொடுத்து, பவர் பதிவு செய்து கொடுத்த அலுவலகத்திற்கு தபால் மூலம் தகவல் கேட்டு, அதை சரிபார்த்துக் கொண்ட பின்னரே, பதிவு செய்த பத்திரத்துக்கு நிரந்த எண் (Regular Document Number) கொடுக்க வேண்டும் என்று IG of Regn சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்தின் விற்பனை சம்மந்தப்பட்ட பவர் பத்திரத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு சட்டம் 29/2012-ன்படி, சொத்தின் விற்பனை சம்மந்தப்பட்ட பவர் பத்திரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அந்தப் பதிவானது, வில்லங்க சர்டிபிகேட்டில் பிரதிபலிக்கும். ஏனென்றால், இந்த வகை பவர் பத்திரங்களை Regn Act Sec.17(1)(h)-ல் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற வகைப்பாட்டில் 1.12.2012 முதல் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பவர் பத்திரங்களை தமிழ்நாட்டில் பதிவுப் புத்தகம்-1-ல் பதிவு செய்யப்படுகிறது. இந்த நடைமுறை தமிழ்நாட்டில் 01.12.2012 முதல் அமலில் இருந்து வருகிறது.

வெளிநாட்டில் எழுதி அனுப்பும் பவர் பத்திரங்கள்:

சொத்தின் விற்பனைக்கோ அல்லது வேறு வேலைக்கோ, எந்தப் பவர் பத்திரமாக இருந்தாலும், அதை வெளி நாட்டில் வசிக்கும் நபர் அங்கேயே எழுதி இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடியும். அத்தகைய பவர் பத்திரங்களுக்கு மேற்சொன்ன நடைமுறைகள் தேவையில்லை. 

பொதுவாக பத்திரங்களை அதற்குறிய ஸ்டாம்பு பேப்பரில் எழுத வேண்டும். அல்லது அதற்குறிய ஸ்டாம்பு கட்டணத்தை செலுத்த வேண்டும். ஒரு பத்திரத்தை எழுதி, அதில் உள்ள பார்ட்டிகள் கையெழுத்துப் போட்ட பின்னர், அதற்குறிய ஸ்டாம்பு கட்டணத்தை நான்கு மாதங்களுக்குள் செலுத்தி இருக்க வேண்டும். 

எனவே தான், வெளிநாட்டில் எழுதும் பத்திரங்களை (குறிப்பாக பவர் பத்திரங்களை) வெள்ளைப் பேப்பரில் எழுதிக் கொள்ளலாம். அதை இந்தியாவுக்கு அனுப்பி விட்டால், அது இந்தியாவுக்குள் நுழைந்த தேதியில் இருந்து நான்கு மாதங்களுக்குள் அதற்குறிய ஸ்டாம்பு கட்டணத்தை செலுத்திவிட வேண்டும். இல்லையென்றால் அந்தப் பத்திரத்தை நடைமுறைப்படுத்த முடியாது. இந்த ஸ்டாம்பு கட்டணத்தை இதற்கு முன்னர் உள்ள சட்டங்களின்படி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி வசூலித்துக் கொண்டு, சரியான ஸ்டாம்பு கட்டணம் செலுத்தப்பட்டது என்று சான்று தருவார். இப்படிச் செய்வதை Adjudication of Stamps என்று சட்டம் சொல்கிறது. இப்போது இந்த வேலையை செய்வதற்கு எல்லா சார் பதிவாளர்களுக்கும் அரசு அதிகாரம் அளித்துள்ளது (Delegation of Power has been given to all the Sub-Registrars and District Registrars for such Adjudication Process).

Attestation of Power deed in a Foreign Country:

வெளிநாட்டில் எழுதிக் கொள்ளும் பவர் பத்திரத்துக்கு அங்கேயே Attestation வாங்க வேண்டும். இதில் இரண்டு வகை உள்ளது. 

Common Wealth Countries என்னும் நேச நாடுகளாக இருந்தால் அங்கு (இந்தியாவில் உள்ளது போல) நோட்டரி வக்கீல்கள் இருப்பபார்கள். அவர்களிடம் அந்த பவர் பத்திரத்தின் பிரின்சிபலின் கையெழுத்தை Attestation வாங்கிக் கொள்ள வேண்டும். காமன்வெல்த் நாடுகள் என்பது, பழைய பிரிட்டீஸ் சாம்ராஜியத்தின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த நாடுகள் எல்லாம் Common Law நடைமுறையை பின்பற்றி வருகின்றன. அதாவது, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், இலங்கை, பர்மா போன்ற நாடுகள் Common Law Principle-படி சட்ட நடைமுறை உள்ள நாடுகளாகும். இங்கு நோட்டரி-வக்கீல் முறை நடைமுறையில் உள்ளது (இந்தியாவைப் போலவே).

ஆனால், இந்த நாடுகள் இல்லாத, மற்ற நாடுகளில் Common Law சட்ட நடைமுறை இல்லாத நாடுகளான, சவுதி அரேபியா, துபாய், ஏமன், எகிப்து, போன்ற மன்னர் ஆட்சி அல்லது வேறு சட்ட நடைமுறை உள்ள நாடுகளில் நோட்டரி-வக்கீல் நடைமுறை இருக்காது. எனவே அப்படிப்பட்ட நாடுகளில் உள்ள இந்தியர் யாரேனும் பவர் பத்திரம் எழுதி Attestation பெற விரும்பினால், அங்குள்ள இந்திய தூதரகத்தில் உள்ள அதிகாரியான Consul General or Asst Consul General என்னும் கான்சல் அலுவலரிடம் சென்று அந்த பவர் பத்திரத்தை Attestation பெற்றுக் கொள்ளலாம்.

அவ்வாறு Attestation பெற்றுக் கொண்ட பவர் பத்திரத்தை தபாலில் அல்லது நேரில் வரும் நபரிடம் இந்தியாவுக்கு கொடுத்து விடலாம். அந்த பவர் பத்திரம் இந்தியாவுக்கு வந்தவுடன், அது தபாலில் வந்தது என்ற ஆதாரத்துடன்  அல்லது அதை அங்கிருந்த நபர் நேரில் கொண்டு வந்தார் என்ற ஆதாரத்துடன், இந்தியாவில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் (எந்தப் பகுதி அலுவலகமாக இருந்தாலும் பரவாயில்லை), அங்கு பவர் பத்திரத்துக்கு உரிய ஸ்டாம்பு கட்டணம் ரூ.100-ம் அபராதம் ரூ.5-ம் சேர்த்து ரூ.105 செலுத்தி சான்று பெற வேண்டும். இதையே Power Adjudication என்கின்றனர். எந்த சார் பதிவாளரிடமும் அதை தாக்கல் செய்து ஸ்டாம்பு கட்டணம் செலுத்தலாம். எனென்றால் அதற்கு ஸ்டாம்பு கட்டணம் மட்டும் அவர் வசூலித்து சான்று அளிக்கிறார். 

வெளிநாட்டில் இருந்து எழுதிக் கொடுக்கும் பவர் பத்திரத்தைக் கொண்டு, சொத்தின் விற்பனை, செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை, விடுதலை, அடமானம் போன்ற எந்த பத்திரத்தையும் செய்யலாம். ஆனால், அந்த பவர் பத்திரத்தில் அத்தகைய வேலைகளைக் குறிப்பிட்டு, சொத்தையும் குறிப்பிட்டு, அவருக்கு உள்ள உரிமையையும் குறிப்பிட்டுச் சொல்லி இருக்க வேண்டும். 

** 

Wednesday, September 9, 2020

லீஸ் அல்லது லைசென்ஸ் வித்தியாசம்

லீஸ் அல்லது லைசென்ஸ் வித்தியாசம் 

Lease or Licence – difference.

டெல்லியில் தங்கும் அறைகள் கொண்ட ஒரு பெரிய ஹோட்டல் ஒருவருக்குச் சொந்தமாக இருக்கிறது. அவரிடமிருந்து ஒருவர் அதன் கீழ்தளத்தில் இரண்டு அறைகள் வாடகைக்கு எடுத்து, ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிகை அலங்காரம் செய்து வந்தார். வருடத்துக்கு ரூ.8,000 கொடுத்து வந்தார். அப்படி ஒரு உடன்படிக்கையும் போட்டுக் கொண்டார். 

இவரை காலி செய்வதற்கு வாடகைக் கோர்ட்டில் மனுப் போடுகிறார். ஆனால் அதை எதிர்த்து, தான் மாத வாடகைதாரர் இல்லை என்றும், லைசென்ஸ் முறைப்படி இருப்பதாகவும், எனவே வாடகைக் கோர்ட் இந்த வழக்கை விசாரிக்கும் உரிமை பெற்றது இல்லை என்று வாதம்.

வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை வந்துவிட்டது. அவர்களுக்குள் எழுதிக் கொண்ட உடன்படிக்கையில் இப்படி எழுதப்பட்டுள்ளது. 

“Whereas the Licensee approached the Licensor through their constituted Attorney to permit the Licensee to allow the use and occupation of space allotted in the Ladies and Gents Cloak Rooms, at the .. Hotel in New Delhi…..”

ஆனால், ஒட்டுமொத்த பத்திரமும் என்ன சொல்கிறது என்றால்: ஹோட்டலில் உள்ள இரண்டு ரூம்களை சிகை அலங்காரம் செய்வதற்காக கொடுக்கப்படுகிறது. வருடா வருடம் அதற்குறிய தொகையை கொடுத்து விட வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. 

What is a LEASE?

Sec,105 of the Transfer of Property Act defines a LEASE of immovable property made for a certain time in consideration for a price paid or promised.

Under Sec.108 of the Transfer of Property Act, the Lessee is entitled to be put in possession of the property.

A LEASE is therefore a transfer of an interest in land. (The interest, transferred is called the “leasehold interest”.)

What is a LICENSE?

Sec.52 of the Indian Easements Act defines a Licence:

“Where one person grants to another, or to a definite number of other persons, a right to do or continue to do in or upon the immovable property of the grantor, something which would, in the absence of such right, be unlawful, and such right does not amount to an easement or an interest in the property, the right is called a LICENCE.

ஒரு சொத்தை “உபயோகப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்” (right to use that property) கொடுத்திருந்தால் அது லைசென்ஸ் ஆகும். இதில் சொத்தின் legal possession சட்டபூர்வ உரிமை, சொத்தின் உரிமையாளரிடமே இருந்து வருகிறது. லைசென்சியிடம் அந்த உரிமை இல்லை. Legal possession is with the property owner/landlord.

ஒரு சொத்தை, அதன் உரிமையுடன் சேர்த்தே அனுபவிக்கும் உரிமையை லீஸ் உரிமை என்று சட்டம் சொல்கிறது. அதில் சொத்தின் உரிமையாளர் உள்ளே நுழைய முடியாது. Legal possession is with the Lessee/tenant.

Lord Justice Denning கூற்றுப்படி, “The question in all the cases is one of intention: Did the circumstances and the conduct of the parties show that all that was intended was that the occupier should have a personal privilege with no interest in the land?”

எனவே மூன்று விஷயங்களை வைத்து அது லீஸா அல்லது லைசென்ஸா என்று முடிவு செய்து விடலாம்.

  1. பத்திரத்தில் அதை லீஸ் என்று சொல்லப்பட்டுள்ளதா அல்லது லைசென்ஸ் என்று சொல்லப்பட்டுள்ளதா.

  2. உண்மையில் இரண்டு பார்ட்டிகளும் எந்த நோக்கத்தில் அந்த இடத்தை வாடகைக்கு/ லைசென்ஸ்க்கு விடப்பட்டது என்பதை பார்க்க வேண்டும்.

  3. அந்த பத்திரத்தில், சொத்தின் அனுபவ உரிமையை மாற்றிக் கொடுத்திருந்தால் அது லீஸ் என்று முடிவுக்கு வர வேண்டும். அப்படி இல்லாமல், சொத்தின் உரிமையாளரே சொத்தின் அனுபவத்தை தன் கைவசம் வைத்துக் கொண்டு, அதில் “உபயோகப் படுத்தும் உரிமையை மட்டும்” கொடுத்திருந்தால் அது லைசென்ஸ் என்று முடிவுக்கு வர வேண்டும்.

எனவே இந்த வழக்கில், அந்த லாட்ஜ் ஓட்டலில், அறைக்கு வந்து சிகை அலங்காரம் தொழில் செய்துவிட்டுப் போகிறவர் கிடையாது இந்த வாடகைதாரர். அங்கேயே இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்து, அதை அனுபவிக்கும் உரிமையுடன் தொழில் செய்து வருவதால், அவர் லீஸ் என்னும் வாடகைதாரே ஆவார். எனவே அவர் லைசென்ஸி இல்லை என்று சுப்ரீம் கோர்ட் முடிவு சொல்கிறது.

**