Sunday, May 31, 2015

பாகப்பிரிவினை-4

பாகப்பிரிவினை-4
சொத்துக்களைப் பிரித்துக் கொள்ளும்போது, யார் விட்டுக் கொடுக்க வேண்டும். மூத்தவரா, இல்லை இளையவரா? விட்டுக் கொடுப்பது என்பது பொதுவானது. இதில் மூத்தவர், இளையவர் என்ற வித்தியாசம் இல்லை. இவர் விட்டுக் கொடுத்தால், அவரும் விட்டுக் கொடுப்பார். இவர் இறுக்கிப்பிடித்தால், அவரும் இறுக்கிப்பிடிப்பார். ஆனாலும், ஒன்று கோழி முந்தி இருக்க வேண்டும் அல்லது முட்டை முந்தி இருக்க வேண்டும். ஒன்றை ஒன்று முந்தியிருக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான விட்டுக் கொடுப்பது நிகழும். அது ஆள்மனதிலிருந்து வருவது.
இதில், வலுத்தவன் விட்டுக் கொடுக்கலாம் என்பது பெரியோர்களின் யோசனை. இளைத்தவன் விட்டுக் கொடுப்பது நியாமில்லைதான். யார் வலுத்தவன், யார் இளைத்தவன் என்பது பணத்தை வைத்து முடிவு செய்யும் காலம் இது. ஆனால் முன் காலங்களில், இதை “மூத்தவன் வலுத்தவனாகவும், இளையவன் இளைத்தவனாகவும்” கருதி இருந்தனர். இந்த நியாயத்தின் அடிப்படையில்தான் சொத்துக்களை பங்கு பிரித்துக் கொடுத்தனர்.
ஒரு சொத்தை (நிலத்தை) இரண்டு முறையில் துண்டுகளாக பங்கு பிரிக்கலாம். ஒன்று கிழக்கிலிருந்து மேற்காக ஒவ்வொரு பங்காக பிரித்துக் கொடுக்கலாம்; அல்லது வடக்கிலிருந்து தெற்காக ஒவ்வொரு பங்காக பிரித்துக் கொடுக்கலாம். இந்த இரண்டு வழிமுறைதவிர, சொத்தை துண்டுகளாக பிரிக்க வேறு வழிமுறைகளே இல்லை. அவ்வாறு முடியாது என்றால், மொத்த சொத்தையும் விற்று, பணத்தை பிரித்துக் கொள்ளலாம். அதுவே கடைசி வழி.
இவ்வாறு சொத்தை ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கமாக பிரித்துக் கொண்டு வரும்போது, எந்தப்பங்கை யாருக்கு கொடுப்பது என்பதில் குழப்பம் வரலாம் என்பதாலேயே, நம் முன்னோர்கள் ஒரு சரியான யோசனையையும் சொல்லி இருக்கிறார்கள். அதன்படி பிரித்துக் கொடுப்பது மிக மிக எளிது. அதில் சண்டை வராது. எனக்கு இந்தப் பக்கத்து சொத்துத்தான் வேண்டும் என்ற அடாவடித்தனமும் இருக்காது. ஏனென்றால் இதுவே உலக நியதி என்று எல்லா மக்களும் ஒப்புக்கொண்ட வழிமுறை இது. மிக அதிகமானவர்கள் இந்த வழிமுறைப் பற்றி இதுநாள்வரை தெரியாமல் வேண்டுமானால் இருந்திருக்கலாம், ஆனால், இதை மீறி ஒரு புதுவழிமுறையை ஏற்படுத்தவே முடியாது. அதற்கும் ஒரு தடை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள் நம் முன்னோர். அதாவது, இந்த வழிமுறைக்கு மாறாக சொத்தின் பங்கை மாற்றி எடுத்துக் கொண்டால், அது சாஸ்திரப்படி மகா தவறு என்றும், அந்த சொத்தை நிம்மதியாக அனுபவிக்கவே முடியாது என்றும், காலம் காலமாக ஒரு சாபக்கேடும் உண்டு என்றும் சொல்லிச் சென்றுள்ளனர். அது உண்மைதான் என்றும் அதை நடைமுறையில் கண்டுள்ளதாகவும் இப்போதும் சொல்லிக் கொள்கிறார்கள்.
அப்படி என்ன வழிமுறை?
ஒரு சொத்தை, பல பங்குகளாக, கிழக்கிலிருந்து மேற்காக பிரித்துக் கொண்டால், கிழக்கு ஓரத்தில் இருக்கும் பங்கை கடைசித் தம்பியோ, தங்கையோ, அதாவது கடைக்குட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடுத்தவர், அதை அடுத்த பங்கை எடுத்துக் கொள்ள வேண்டும், இவ்வாறு எடுத்துக் கொண்டு வந்தால், மேற்கு கடைசி சொத்தை மூத்தபிள்ளை எடுத்துக் கொள்வார். இதை “இளையவர் கிழக்கிலும், மூத்தவர் மேற்கிலும் பெறுக” என்ற பொன்மொழிக்கு ஏற்ப பங்கு பிரிக்கப்பட்டுவிடும்.
அதேபோல், ஒரு சொத்தை, பல பங்குகளாக, வடக்கிலிருந்து தெற்காக பிரித்துக் கொண்டால், வடக்கு ஓரத்தில் இருக்கும் பங்கை கடைசித் தம்பியோ, தங்கையோ, அதாவது கடைக்குட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடுத்தவர், அதை அடுத்த பங்கை எடுத்துக் கொள்ள வேண்டும், இவ்வாறு எடுத்துக் கொண்டு வந்தால், தெற்கு கடைசி சொத்தை மூத்தபிள்ளை எடுத்துக் கொள்வார். இதை “இளையவர் வடக்கிலும், மூத்தவர் தெற்கிலும் பெறுக” என்ற பொன்மொழிக்கு ஏற்ப பங்கு பிரிக்கப்பட்டுவிடும்.
இந்தியா என்னும் நாடு வடக்கில் உயரமான மலைகளைக் கொண்டும், தெற்கில் பள்ளமான பகுதியை கொண்டும் உள்ளது. எனவே உயரமான பகுதி இளையவருக்கு போய் சேரட்டும் என்றும் வலுத்தவனான மூத்தவன் பள்ளமான பகுதியான தகுதி குறைவான பகுதியை அடையட்டும் என்று ஏற்பாடாம்.
அதேபோல உலகில் கிழக்கில் சூரியன் உதிக்கிறான், அவன் காலையில் எழும் கிழக்கு திசை வளர்ச்சியை நோக்கி மேலே எழும்பும் திசை. மாலையில் மேற்கில் மறையும் திசையானது கீழே சாயும் திசை. எனவே இளையவனே, சூரியன் உதிக்கும், அல்லது வளரும் அல்லது மேலெழும் திசையில் உள்ள சொத்தை அடையட்டும் என்றும், வலுத்தவனான மூத்தவன் மறையும் திசையான மேற்கை அடையட்டும் என்று வகுத்து வைத்துள்ளனர்.
இளையவனே சலுகைக்கு உரியவன் என்பதே கோட்பாடு. மூத்தவன் விட்டுக் கொடுக்கும் நிலையில் இருக்க வேண்டும். இளையவன் பெறும் நிலையில் இருக்க வேண்டும். ஆனாலும், இளையவன் இந்த தத்துவத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு, “நான் சலுகையைப் பெற்றவன்” என்று நினைத்து எப்போதும் நன்றியுள்ளவனாகவும் இருக்க வேண்டுமாம்.
நூறை மூன்றாக பிரித்தால் 33.33 வரும்; அதிலும் ஒரு பைசா மிச்சமிருக்கும். இந்த மிச்சத்தையும் சேர்த்துப் பெறுபவனே இந்த இளையவன். ஏனென்றால், அவனே மூத்தவர்களின் வாழ்நாள் பாதுகாவலன். \

அதற்காகத்தான், இராமன் நிழலாக லஷ்மணன் இருந்திருக்கிறான். மூத்தவனின் நிழலாக இளையவன் இருப்பானாக!!!

பாகப்பிரிவினை-3

பாகப்பிரிவினை-3
பொதுவாக, கோர்ட்டுக்கு போகாமல், குடும்பச் சொத்துக்களை பங்கு பிரித்துக் கொள்வது என்பதே புத்திசாலிதனம். பங்காளிகளான நம்மைக் காட்டிலும் கோர்ட் ஒன்றும் பெரிதல்ல. நம் குடும்பத்துக்கு யோசனை சொல்லும் அளவுக்கு கோர்ட் ஒன்றும் நம் தந்தையோ, பாசமான தாயோ அல்ல. சட்டத்துக்கு ஈவு இரக்கம் இருக்காது. அந்த ஈவு இரக்கத்தை காட்ட வேண்டும் என்று எந்தச் சட்டமும் சொல்லவில்லை. ஆனாலும், பாகப் பிரிவினை வழக்குகளின் முடிவில் பங்கை தனித்தனியாக பிரிக்கும்போது EQUITY ஈக்விட்டி என்னும் தர்ம ஞாயத்தை சிறிது கடைப்பிடிக்கும்படி கோர்ட்டுக்கு சலுகையுண்டு. அதன்படி பங்குதாரர்கள் அவர்களுக்குள் கிடைக்கும் பங்கு சொத்தை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ளலாம். ஒருவர் செலவில் ஏற்கனவே இருந்த பொது அடமானக் கடனை ஒருவர் மட்டும் பணம் கொடுத்து மீட்டி இருந்தால் அந்த பணத்தை அவர் பெறும் உரிமை உண்டு. ஒருவர் மட்டும் தன் பணத்தை செலவு செய்து வீட்டை கட்டி இருந்தாலோ, அல்லது ஒரு மாடியைக் கட்டி இருந்தாலோ, அதை மற்ற பாகஸ்தர்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்தால், அதற்குறிய அதிக பங்கை அவர் பெற இந்த ஈக்விட்டி சட்டம் (தர்ம-நியாயச் சட்டம்) வழி கொடுக்கும். அதைக் கொண்டு நீதிபதி அந்த சலுகை தீர்ப்பை வழங்க வழியுண்டு. ஆனால், மற்ற பாகஸ்தர்களின் சம்மதத்தை பெறாமல் வீட்டையோ, ஒரு மாடியையோ தன் செலவில் கட்டி இருந்தால், அந்த பணத்தை, அல்லது செலவை இந்த ஈக்விட்டி சட்டம் பெற்றுத்தராது. அவ்வாறு வீட்டைக் கட்டியவர், அவர் இஷ்டத்துக்கு, மற்றவரின் சம்மதம் இல்லாமல், செலவு செய்தவர் என்று கைகழுவி விட்டுவிடும். இந்த மாதிரி நேரங்களில், உண்மையில் ஒருவர் பொதுச் செலவு செய்திருந்தாலும், பொதுவாக மற்ற பாகஸ்தர்கள் வேண்டுமென்றே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவ்வாறு ஒப்புக்கொள்ளும் மனநிலையில் இருந்தால், அந்த வழக்கு கோர்ட்டுக்கு வந்தே இருக்காது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனநிலை இப்போதைய காலங்களில் இல்லவேயில்லை!
ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான். ஆணும் பெண்ணும் சிறுவர்களாக இருக்கும்போது அண்ணன் தம்பி அக்காள் தங்கை என்ற உறவுகளில் லயித்து, ஒரே தட்டில் உணவு உண்டு, எச்சில் தின்பண்டங்களையும் பகிர்ந்து கொண்டு, ஒரே பாயில் படுத்த உறவுகள்தான் இவர்கள். யாரோ ஒரு வெளியாள் நம் அண்ணன் தம்பி அக்காள் தங்கையை திட்டினாலோ, அடிக்க வந்தாலோ அந்த வெளிநபர் தொலைந்தார். எல்லோருமாகச் சேர்ந்து அவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டுத்தான் வீடு வந்து சேருவோம்! கடவுள், தன் படைப்புகளிலேயே, இந்த உறவுகளைப் பார்த்துத்தான் பெருமையை பட்டுக் கொள்வாராம்! எத்தனையோ தங்கைகள் திருமணம் முடித்து கணவன் வீட்டுக்கு செல்லும்போது, அவளின் தாய் தந்தை அண்ணன் தம்பிகள் கண்கலங்கி நிற்பதை பார்த்திருக்கிறோம். அவ்வளவும் நிஜமே!!!
அந்த நிஜங்கள் எங்கே சென்று ஒளிந்து கொண்டன. குடும்ப சொத்துக்களை பிரிக்கும்போது அவைகள் காணாமல் போய்விட்டனவே!!! எதிரியைக்கூட மன்னிப்பேன், என் அண்ணனை, தம்பியை, சகோதரியை மன்னிக்கவே மாட்டேன் என்று ஆவேசம்!! ஏன்? ஏன்? தெரியவில்லை. “ஐந்து வயதில் அண்ணன்-தம்பி; பத்து வயதில் பங்காளி” என்று ஒரு பழமொழியை நம் முன்னோர்கள் முன்னரே சொல்லி வைத்துவிட்டுத்தான் போயிருக்கிறார்கள். அப்படியென்றால், பாசம் என்பது பொய்யா? சொத்து வரும்போது பாசம் அடிபட்டுப் போய்விடுமா? பாசத்தைவிட சொத்து பெரியதுதானா?

மகாபாரதம் என்பது கலியுகம் தொடங்கிய காலத்தில் ஏற்பட்ட நிகழ்வு என்கின்றனர் சரித்திர வல்லுனர்கள். அதாவது சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வு. அங்கும் சொத்தில் பங்கு கேட்கின்றனர். கொடுக்கவில்லை. வேண்டாம் என்று போயிருக்கலாம். இந்த சொத்து வந்துதான் (நாடு வந்துதான்) அவர்கள் ஆள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஐவருமே பெரும் வீரர்கள். யுதிர்ஷ்டன் அசுவமேத யாகம் செய்தால் போதும் மகாசக்கரவர்த்தி ஆக முடியும், அர்ச்சுனன் ஒருவனால் மட்டுமே எல்லா மன்னர்களையும் தோற்கடித்து நாட்டை கைப்பற்றமுடியும். ஆனாலும், பங்காளி துரோகத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை. நான் விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறேன், ஆனால் என்னை ஏமாற்றி பெற்றதாக அவன் நினைக்கக் கூடாது. என் வாழ்வு சிதைந்தாலும் பரவாயில்லை, அவனை சிதைப்பேன். இங்கு இரண்டு கூட்டமுமே அழிகிறது. வெற்றியின் பலன் யாருக்கும் இல்லை. வென்றவரும் தோற்றவரும் அழிவை நோக்கியே பயணித்தனர்........... 

பாகப்பிரிவினை-2

பாகப்பிரிவினை -2
பிரிக்க முடிந்த சொத்தை சுலபமாகப் பாகம் பிரித்துக் கொள்ளலாம். பிரிக்க முடியாத சொத்தாக இருந்தாலோ, ஒரே சொத்தை பல பங்குதாரர்கள் பாகம் பிரித்துக் கொள்ள முடியாமல் இருந்தாலோ, அல்லது அவ்வாறு பிரித்தாலும் அந்தப் பங்கு மிகச் சிறிய பங்காக இருந்து அதை தனியாக அனுபவிக்க முடியாமல் போனாலும், அதை பங்கு பிரித்துக் கொள்ள முடியாது. அவ்வாறு பங்கு பிரித்துக் கொள்ள முடியாதபடி இருக்கும் சொத்தை, NOT DIVISIBLE BY METES AND BOUNDS என்று சட்டம் சொல்கிறது. அதாவது, நீள அகலத்துடன் தனித்தனி சொத்தாக (துண்டுகளாக) பிரிக்க முடியாத சொத்து என சொல்கிறது. இவ்வாறான சொத்துக்களை ஒருவரோ, இருவரோ அனுபவித்துக் கொள்ள விட்டுக் கொடுத்து விடலாம். அதற்குறிய பங்கின் பணத்தை மட்டும் கணக்கிட்டுப் பெற்றுக் கொள்ளலாம். மற்றவர் விட்டுக் கொடுப்பதை “விடுதலை பத்திரம்” எழுதி பதிவு செய்து கொண்டால் போதுமானது. அதை பாகம் பிரித்துக் கொள்ள தேவையில்லை.
ஒருவேளை, எல்லோருக்கும் அந்த சொத்தில் ஆசை இருக்கிறது என்றால், யார் அந்த சொத்தை எடுத்துக் கொள்வது என்று போட்டி வரும். அதுவும் பங்காளிகள் ஆனபின்னர் இது மிக அதிகமாகவே இருக்கும். இது ஒரு “மனம் சார்ந்த பிரச்சனை.” மற்றவர் நன்றாக இருந்துவிடக் கூடாது என்பதில் நாம் மிகக் கவனமாக இருப்போமாம்! நமக்கு அந்த எண்ணம் இல்லாவிட்டாலும், நம்மை சுற்றியுள்ளவர் அந்தச் சகுனி பாத்திரத்தை திறம்பட செய்து முடிப்பார்களாம்! அதற்கு எப்படியும் நாம் இரையாகிவிடுவோமாம்! மகாபாரதம் முழுக்க பங்கு பிரிக்கும் சண்டைதானே!!
இந்தப் பிரச்சனை வரும் என்றே, சட்டமும் அதற்குறிய வழிமுறையை சொல்லியுள்ளது. ஒரே சொத்தை பலர் எடுத்துக் கொள்ள விரும்பும்போது, அவர்களுக்குள் ஒரு சமாதானமான முடிவை எடுத்து, அந்தச் சொத்தை ஒருவர் அல்லது இருவர் அடையும்படியும், மற்றவர்களுக்கு ஒரு நியாயமான பணத்தை கொடுத்து விடும்படியும் முடிவெடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு முடியாதபோது, அல்லது பங்காளிகளுக்குள் பகைமை ஏற்பட்டிருக்கும்போது, இது சாத்தியப்படாது என்பதால், சொத்துக்கு ஒரு விலையை நிர்ணயித்து அதைவிட அதிகமாக யார் விலைக்கு வாங்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு சொத்தை கொடுத்து விடுவது, மற்றவர்கள் பணத்தை பெற்றுக் கொள்வது என்பது ஒரு நியாயமான முடிவாக இருக்கும் என சட்டம் சொல்கிறது.

இதையும் தாண்டி, சொத்தில் பங்கு வேண்டும், பணம் வேண்டாம். கோடி ரூபாயாக இருந்தாலும் எனக்குத் தேவையில்லை. இது என் பாட்டன் சொத்து, இது என் அப்பன் சொத்து, இது என்னைப் பெற்ற தாயின் சொத்து, இவர்களின் ஞாபகார்த்தமாக (நினைவாக) ஒருபிடி மண்ணாவது எனக்கு சேர வேண்டும் என உலகிலுள்ள எல்லாத் தத்துவங்களையும் ஒருசேர அரசியல்வாதியைப் போல முழங்குவார்கள். பொதுவாக அதில் ஒரு உண்மையும் இல்லாதபோதிலும், வாதத்திற்காக அதை ஏற்கும் நிலை ஏற்படும். ஆனால் நடைமுறையில் இதற்கு எந்தவிதத்திலும் வழியே இல்லை. எனவே சட்டம் இங்கு நுழைந்து தன் வேலையைச் செய்யும். கோர்ட்டுகளுக்கு வழக்கு போகும். அங்கு அவரவர் பங்கு நிர்ணயம் ஆனபிறகு, சொத்தை “பொது ஏலத்தில்” விற்பனை செய்ய கோர்ட் உத்தரவிடும். அதில் “அப்பன், பாட்டன் சொத்தை வாங்க ஆசைப்படுபவர்களும் கலந்து கொள்ளலாம் என்றும், யார் அதிக விலை கேட்கிறார்களோ அவர்களுக்கு சொத்தை விற்பனை செய்ய உத்தரவாகும். இப்போது, பட்டான் சொத்தை கோடி கொடுத்து வாங்க முனைப்பு காட்ட மாட்டார்கள். அவர்கள் முன்னர் பேசிய தத்துவம் பொய்யாகிப் போய்விடும்.

பாகப்பிரிவினை: 1

பாகப்பிரிவினை: 1
தனியொருவரே ஒரு சொத்தை வைத்திருந்தாலோ, வாங்கியிருந்தாலோ அந்த சொத்துக்கு பாகப்பிரிவினை என்னும் பிரச்சனை இல்லை. கூட்டாக வாங்கியிருந்தால்  (இரண்டுபேருக்கு மேல் சேர்ந்து வாங்கினால்) அதை ஒரு காலக்கட்டத்தில் பாகப் பிரிவினை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படும். அல்லது நமது பெற்றோர்கள், முன்னோர்கள் வாங்கிய சொத்தாக இருந்தால் அவர்களின் காலத்துக்குப்பின் அவரின் வாரிசுகள் அந்த சொத்தை பங்கு பிரித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.
சொத்தில் பங்கு இருப்பவர்கள், அந்த சொத்தில் எவ்வளவு பங்கு ஒவ்வொருவருக்கும் சேர வேண்டும் என கணக்கிட்டு, சுமூகமாக அவர்களாகவே பாகப்பிரிவினையை செய்து, அதை ஒரு பத்திரமாக எழுதிப் பதிவு செய்து கொள்ளலாம்.
விவசாய நிலங்களை பாகம் செய்து கொள்ளும்போது, வாய்மொழியாகவே பேசி அவரவர் பங்கு நிலத்தை பாகமாகப் பிரித்துக் கொள்ளலாம். நம் குடும்ப பெரியவர்கள் முன்னிலையிலும் பேசிக் கொள்ளலாம். அதை பத்திரத்தில் எழுதிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு பங்குபிரித்தபடியே பட்டாவை மாற்றிக் கொண்டால் போதுமானது. பாகப்பிரிவினை என்பது “சொத்து மாறுதல்” என்ற கணக்கில் வராது. எனவே இந்திய பதிவுச் சட்டப்படி அதை பத்திரமாக எழுதிப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என இந்திய சுப்ரீம் கோர்ட் பல வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது. இருந்தபோதிலும், நாம் அவரவர் ஞாபகத்துக்காக அதை ஒரு சீட்டில் (பேப்பரில் எழுதி) அதில் சம்மந்தப்பட்டவர்கள் கையெழுத்தையும் பெற்று ஒவ்வொருவரும் ஒரு காப்பியை வைத்துக் கொள்ளலாம். இதையே “வாய்மொழி பாகப் பிரிவினை” என்றும் “கூர்சீட்டு” (அதாவது கூர் போட்டுக் கொண்ட கணக்குச் சீட்டு) என்றும் சொல்கிறோம். அதை பத்திரப் பதிவு அலுலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால், அந்த கூர்சீட்டில் இன்றைய தேதியில் சொத்துக்களை பிரித்துக் கொண்டதாக எழுதிக் கொள்ளமாட்டோம். அதற்குப்பதிலாக, பங்குதாரர்கள் ஏற்கனவே வாய்மொழியாக சொத்தை முன்னரே பிரித்துக் கொண்டதாகவும், அதை இன்று ஒரு ஞாபகச் சீட்டாக எழுதிக் கொண்டோம் என்று தான் அதில் எழுதி இருக்க வேண்டும். ஆனால், இன்றே சொத்துக்களை பாகமாகப் பிரித்து எடுத்துக் கொண்டுள்ளோம் என்று எழுதி இருந்தால், அது சொத்தை மீது பரிமாற்றம் நடைபெற்றதாகக் கருதி, அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயாமும் ஏற்பட்டுவிடும்.
மிக அதிகமானவர்கள் இந்த தவறை செய்திருக்கிறார்கள். பத்திரம் எழுதும் அனுபவம் இல்லாதவர்கள், எதையோ எழுதி வைத்து விடுகிறார்கள். பிரச்சனை என்று கோர்ட்டுக்குப் போகும்போது இத்தகைய பத்திரம் சட்டப்படி செல்லுமா, செல்லாதா என்ற சட்டப் பிரச்சனையே வந்துவிடுகிறது. எனவே சட்டம் தெரிந்தவர், அல்லது வக்கீல் மூலமாக இதை எழுதிக் கொள்வது நல்லது.

ஆனாலும், நகரங்களில் உள்ள சொத்துக்களை பிரித்துக் கொள்ளும்போது, பாகப் பத்திரம் எழுதி கண்டிப்பாக பதிவு செய்வதே சாலச்சிறந்தது. இங்கு பட்டா மாற்றிக் கொள்ள ஒரு பத்திரம் தேவைப்படும். மேலும், சொத்து பாகம் ஆகிவிட்டது என்பதற்கான சாட்சியம் (ஆதாரம்) இந்தப் பதிவான பாகப் பிரிவினைப் பத்திரம் தான். இல்லையென்றால், சொத்து இன்னும் பாகம் ஆகவில்லை என்றே கருத வேண்டியிருக்கும்.

International Criminal Court


International Criminal Court (ICCC):
Fatou Bensoudaஅனைத்து உலக கிரிமினல் கோர்ட்டின் தலைமை வழக்கறிஞராக, கேம்பியா நாட்டைச் சேர்ந்த வக்கீல் பெண்மணியான பட்டோ பென்சோடா (Fatou Bensouda) என்பவர் 2011ல் இருந்து பணிபுரிந்தற்காக, அவருக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன; அனைத்துலக சூரிஸ்ட் அவார்டு கிடைத்துள்ளது; டைம் மேகசின் என்னும் புகழ்பெற்ற பத்திரிக்கையானது உலகில் மிக அதிகாரமிக்க 100 பேர்களில் இவரும் ஒருவர் என கணித்துள்ளது; ஆப்ரிக்க கண்டத்திலுள்ள பெண்மணிகளில் தன் பதவியை திறம்பட செய்துவரும் 50 நபர்களில் இவரும் ஒருவர் என சொல்லியுள்ளனர்; இவர் இனைத்துலக கிரிமினல் கோர்ட் விவகாரங்களில் வழக்குகளில் பலவருட அனுபவம் பெற்றவர்; இதுவரை பெண்களுக்கு கிடைத்த உரிமைகளில், அவை கிடைப்பதற்காக பாடுபட்டதில் இவருக்கும் பெரும் பங்குண்டு;

"ஒரு பெண் மானபங்கப்படுத்தப்படும்போது, இரண்டுவகையான துன்பங்களுக்கு உள்ளாகிறார்; ஒன்று, கொடுமைக்காரர்களால் அவள் உடல் அளவில் துன்பமும், மற்றொன்று, அவர் சார்ந்த சமுதாய மக்களே அவளை ஒதுக்கி வைப்பதும் என இரண்டு கொடுமைகள்" என்று கூறுகிறார்;

"காலம் மெதுவாகவே சில விஷயங்களே ஏற்றுக் கொள்ளும்; ஆணும் பெண்ணும் சமமாக கருதும் உலகம் ஒருநாள் மலரும்" என்கிறார்.
"Equality for woman is progress for all."

Friday, May 29, 2015

Justice M.Patanjali Sastri

Justice M.Patanjali Sastri 
எம். பதஞ்சலி சாஸ்திரி (Justice)
மண்டகொளத்தூர் பதஞ்சலி சாஸ்திரி; (பிறந்த ஊர் திருவண்ணாமலை அருகில்)
இந்தியாவின் இரண்டாவது தலைமை நீதிபதியாக இருந்தவர்; (1951 நவம்பர் முதல் 1954 ஜனவரி வரை);
1914ல் மதராஸ் ஹைகோர்ட் வக்கீலாகிறார்; செட்டியார்களுக்கு வரி சம்மந்தப்பட்ட வழக்குகளில் ஆஜராகிறார்; பின்னர் வரிதுறைக்கு அரசாங்க வக்கீல் ஆகிறார்; 1939ல் ஹைகோர்ட் வக்கீல் ஆகிறார்
இவருக்கு ஒரு தனிப் பெருமையும் உள்ளது; அது, இவர்தான், சென்னை வக்கீல்களில் குறிப்பாக தமிழர்களில் முதல் இந்திய தலைமை நீதிபதியும் ஆவார்; (1952ல்); ஆனாலும் சிலர், இவர் ஆந்திராவில் பிறந்தவர் என்று தவறுதலாக சொல்வர்;



Broker

Broker
புரோக்கர்:
1950ல் நடந்த வழக்கு;
சொத்தின் உரிமையாளர், தன் சொத்தை விற்றுத்தரும்படி ஒரு புரோக்கரை நியமித்து அவருக்கு லெட்டர் கொடுக்கிறார்;
"சொத்தின் விலை ரூ. ஒரு லட்சம்; அதற்குறிய புரோக்கர் கமிஷன் ரூ.1,000/-;
அதற்கு மேல் விற்பனை செய்து கொடுத்தால், அந்த அதிகபட்சத் தொகையில் உனக்கு 25% ஸ்பெஷல் கமிஷன் தனியாக தருகிறேன்; இந்த டீல் இன்றிலிருந்து ஒரு மாதத்துக்கு மட்டுமே" என்று புரோக்கருக்கு சொத்தின் உரிமையாளர் லெட்டர் கொடுக்கிறார்;
இரண்டு பேர் வாங்குவதற்கு முன் வருகிறார்கள்; அவர்கள் ரூ.1,10,000/- க்கு வாங்கிக் கொள்ள முன்வருகிறார்கள்லெட்டர் கொடுக்கிறார்கள்; இதற்குள் ஒருமாதம் முடிவடைந்து விடுகிறது; எனவே சொத்தை விற்பவர், வாங்க வந்த நபரின் நாமினியிடம் (அவருக்காக வேறு ஒரு நபர்) ரூ.1,05,000/- க்கு அக்ரிமெண்ட் போட்டுக் கொள்கிறார்; கிரயப் பத்திரமும் எழுதிக் கொடுத்து பணத்தை வாங்கிக் கொண்டார்;
இதில், சொத்தை விற்றவர் ஏதோ தில்லுமுல்லு செய்திருப்பதாக புரோக்கருக்கு தெரியவருகிறது; தனக்கு கமிஷனும் கிடைக்கவில்லை; அவருக்கு கொடுத்த லெட்டர்படி, ஒரு மாதம் முடிந்துவிட்டது; இருந்தாலும், அதே பார்ட்டியின் பினாமிக்குத்தான் விற்பனை ஆகியுள்ளது; எனவே எனக்கு சேர வேண்டிய கமிஷன் தொகையை கொடுக்க வேண்டும் என கோர்ட்டில் வழக்கு போடுகிறார்;
கல்கத்தா ஹைகோர்ட்டின் ஒரு நீதிபதி கோர்ட்டின் தீர்ப்பு: கமிஷன் ஏஜெண்டை நியமித்து கமிஷன் தருவதாக லெட்டரும் கொடுத்து, அவர் ஒரு பார்ட்டியை ஏற்படுத்தி கொடுத்து, அவரும் வாங்குவதற்கு சம்மதமும் கொடுத்திருக்கிறார்; எனவே புரோக்கருக்கு கமிஷன் கிடைக்க உரிமையுண்டு: வாங்குபவர் வேறு ஒரு நபர் பெயருக்கு வாங்கினாலும், புரோக்கர்தான் இந்த வியாபாரத்தை முடித்துள்ளார்; எனவே அவருக்குறிய கமிஷன் அவருக்கு சேர வேண்டும்;
அதை எதிர்த்து எட்டு நீதிபதிகள் கொண்ட கல்கத்தா பெரிய பெஞ்ச் கோர்ட்டுக்கு அப்பீல் செய்கிறார்கள்;
அந்த அப்பீல் கோர்ட் தீர்ப்பு, "வாங்குபவர், முதலில் ரூ.1,10,000/-க்குத்தான் லெட்டர் கொடுத்திருக்கிறார்: பின்னர், கமிஷன் கொடுக்க வேண்டும் என நினைத்து, வேறு ஒரு பினாமி பெயரில் ரூ.1,05,000/- க்கு வாங்கி உள்ளார்; இதில், வாங்குபவருக்கு ரூ.5,000 லாபம்; விற்பவருக்கு மொத்த புரோக்கர் கமிஷனும் லாபம்; (லாபம் கிடைத்தால், அடுத்தவரை ஏமாற்றலாம்போல); ஆக இதில் ஏமாற்று வேலை நடந்துள்ளது தெரியவருகிறது; வேறு ஒரு பார்ட்டிதான் சொத்தை வாங்கி இருக்கிறார்: எனவே கமிஷன் கொடுக்க முடியாது என்ற வாதத்தை ஏற்கமுடியாது; அதிக தொகைக்கு புரோக்கர் ஒரு பார்ட்டியை கூட்டிவந்து லெட்டரும் வாங்கிக் கொடுத்திருக்கும்போது, ஏன் அதைவிட குறைந்த விலைக்கு வேறு ஒருவருக்கு விற்க வேண்டும்? தில்லு முல்லு!
எனவே புரோக்கருக்கு கமிஷன் கிடைக்க உரிமையுண்டு என அப்பீல் அனுமதிக்கப்பட்டது;

AIR 1950 SC 15 Abdulla Ahmed vs Animendra Kissen Mitter.

Wednesday, May 27, 2015

Simmons Case

Simmons Case:
சைமன்ஸ் வழக்கு; (அமெரிக்க சிறுவனின் வழக்கு);
கிறிஸ்டோபர் சைமன் என்பவன் ஒரு சிறுவன்; 17 வயது ஆகிறது; அவன் ஒரு கொடுமையான குற்றத்தை செய்கிறான்; அவனை போலீஸ் பிடித்து கிரிமினல் வழக்கு போடுகிறது; ஜூவனைல் கோர்ட்டின் (சிறுவர்களின் குற்றங்களை விசாரிக்கும் கோர்ட்) விசாரனை முடிவில், அவனின் செயல் கொடூரமானது என்றும், அதனால் அவனுக்கு மரணதண்டனை கொடுக்கலாம் என்று கீழ் கோர்ட் தீர்ப்பு கொடுக்கிறது; அதை எதிர்த்து அவன் அப்பீல் கோர்ட்டில் அப்பீல் செய்கிறான்; அப்பீல் கோர்ட்டான மிசோரி சுப்ரீம் கோர்ட்டும் அவனது மரண தண்டனையை உறுதி செய்கிறது;
எனவே, அவன் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல் அப்பீல் செய்கிறான்; அதில் அவன் வக்கீல் சொல்லும் காரணம்: "இந்த குற்றம் நடக்கும்போது சிறுவனுக்கு 17 வயதுதான்; சிறுவன் என்பதால், அவனுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது என்பதே சட்டம்; அது அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 8வது மற்றும் 14வது திருத்த சட்டத்திற்கு எதிரானது; எனவே தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்."
இதற்கு முன் நடந்த வேறுஒரு வழக்கின் தீர்ப்பை பார்க்கிறது; அது ஸ்டான்ட்போர்டு vs. கென்டுகி வழக்கு (492 U.S. 361 (1989): அதில்8வது திருத்த சட்டத்தின்படி (அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம்) சிறுவனை தூக்கிலிட சட்டம் இடம் கொடுக்கவில்லை;
மற்றொரு வழக்கும் ஆராயப்படுகிறது; பென்றி -எதிர்- லைநாவ் வழக்கு; இதில் குற்றவாளி ஒரு பைத்தியம்; அதிலும் அந்த பைத்தியத்துக்கு தூக்கு கொடுக்க அரசியலமைப்பு சட்டம் இடம் கொடுக்கவில்லை என்று 1989ல் முடிவாகியுள்ளது;
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்:-
"குற்றம் செய்த சிறுவனை தூக்கில் போடலாமா? அவனுக்கு, தான் ஒரு மோசமான குற்றத்தை செய்கிறோம் என்ற தெளிவான அறிவு இருக்கும் என நாம் நம்பலாமா? சிறுவனுக்கு எப்படி அந்த அறிவு தெரியும்? அறியாச் சிறுவனின் தவறு, ஒரு நடத்தை தவறுதானே ஒழிய, இது குற்றத்தவறாக எடுத்துக் கொள்ள முடியாதே? ஒரு குழந்தை தவறு செய்வதை தாய் மன்னிப்பது போல, அறியாச் சிறுவனின் தவறை மன்னித்து அவனை நல்வழிப் படுத்துவதுதானே நாகரிக உலகின் வாழ்வுமுறை; மனிதனின் நெற்றிப்பகுதியில் முன் மூலையின் ஒரு சிறுபகுதிதான் காரண-காரியல்களை அறியச் செய்யும் ஆற்றல் கொண்டது; அதாவது நல்லது எது, கெட்டது எது, என்ற உலக ஞானத்தை உணர்த்தும்; அது தடுமாறி விட்டால், மனிதன் எந்த தவறையும் துணிச்சலுடன் செய்வான்சிறுவர்களுக்கு இது வளர்ச்சியடையாமல் இருக்கலாம்; அதற்காக அவர்களை தூக்கிலிடுவது எந்தவகை நியாயம்! ஆனாலும், தூக்கில்தான் இடவேண்டும் என்று வாதாடுகிறவர்கள் சொல்லும் காரணம், "அந்த வீணாப்போன விஞ்ஞானத்தை சொல்ல வேண்டாம்; சிறுவர்களுக்கு, குறிப்பான, 16, 17 வயது இளையவனுக்கு, நல்லது கெட்டது தெரியும், அவன் மூளை வளர்ச்சி அடைந்தே இருக்கிறது; வளர்ப்பு முறையும் இதை சொல்லிக் கொடுத்தே இருக்கிறது; கொலை செய்யும் சிறுவன், அதன் காரண-காரியத்தை அறிந்தே செய்கிறான்; அவன் ஒரு வயதுக்கு வந்தவனின் மனநிலையையே கொண்டிருக்கிறான்; அவனை இளையவன், ஜூவனைல், என்றெல்லாம் சின்னக் குழந்தையாகப் பார்க்க வேண்டாம்! இந்த வாதம் சரி என்று 2003ல் அமெரிக்கா 2 சிறுவர்களுக்கு மரணதண்டனை கொடுத்துள்ளது; இதற்கு முன் 2000த்தில் 7 சிறுவர்களை மரணதண்டனை கொடுத்துள்ளது; 1976ம் வருடத்திலிருந்து அமெரிக்காவில் மொத்தம் 7 மாநிலங்கள் மட்டுமே சிறுவர்களுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது;
பலநாடுகள் இதை எதிர்த்து, சிறுவர்களுக்கு மரணதண்டனை என்பது மனிதஉரிமை மீறல் என்று கண்டித்துள்ளது; மேற்கு ஐரோப்பிய நாடுகள், மரண தண்டனையே வேண்டாம் என்று நீக்கிவிட்டன;
எனவே அமெரிக்கா போன்ற பெரிய ஜனநாயக நாடு இந்த மரணதண்டனையை சட்டமாக தொடரக் கூடாது, அது நாட்டுக்கு ஒரு அவமானம் என கருதவேண்டும் என முன்னர் பல வழக்குகளில் கருத்து சொல்லியுள்ளது;
இப்போது அமெரிக்க சுப்ரீம் கோர்ட், "சிறுவர்களுக்கு மரண தண்டனை வேண்டாம்தான்; அதில் குழப்பம் இல்லை; ஆனால், சிறுவன் என்பவன் 18 வயது முடிவடையாதவன் என்று இருப்பது உறுத்தலாக இருக்கிறது", என்றும், "18 வயது முடிந்து ஒரு மாதம் ஆனவனும், 17 வயது முடிந்து 11 மாதம் ஆனவனும் ஒரு கொடுமையான குற்றத்தை செய்கிறார்கள் என்றால், 18 வயது முடிந்தவனுக்கு மரண தண்டனை உண்டு: மற்ற சிறுவனுக்கு இல்லை; சில மாதங்களே வித்தியாசத்தில் சட்டம் மாறிவிடுகிறது என்று அமெரிக்க சுப்ரீம் கோர்ட் இந்த உதாரணத்தை கொடுத்திருக்கிறது:
எனவே சிறுவன் என்பதற்கான வயதை குறைப்பதே சாலச் சிறந்தது என்று கருத்தும் சொல்லி உள்ளது;


Sunday, May 24, 2015

Review of judgment

Review
Sec.114 of the Civil Procedure Code 1908
“Any person considering himself aggrieved  --(a)   By a decree or order (from which is an appeal is allowed but from which no appeal has been preferred);
(b)   By a decree or order (from which no appeal is allowed);
-- may apply for review of judgment to the Court which passed the decree or order, and the Court may make such order thereon as it thinks fit.”

ORDER XLVII of the Civil Procedure Code 1908
Rule-1: “Any person considering himself aggrieved by a decree or order, and who, from the discovery of new or important matter or evidence which was not within his knowledge or could not be produced by him at the time when the decree was passed or order made, or on account of some mistake or error apparent on the face of the record, may apply for a review of judgment to the Court which passed the decree or order."

Certain salient features in the Review Application:
    (1)  The principle involved in Order 47 Rule 1 is that – before making the review application no superior Court has been move for getting the self-same relief.
(2)   The review applications are not by way of an appeal and have to be strictly confined to the scope and ambit of Order 47 Rule 1.
(3)   The power of review is not to be confused with the appellate power.
(4)   Only persons who are directly and immediately affected by the order can be considered as ‘parties aggrieved’
(5)   A discovery of new material or evidence would entitle a party to apply for review.
(6)   An error apparent on the face of the record must be such an error which must strike one on mere looking at the record and would not require any long drawn process of reasoning.
(7)   When a review petition is entertained and the Court is satisfied that the order under review was erroneous at the face of it then the Court shall set aside the findings.

**