Saturday, August 15, 2015

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-13

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-13
மைனர் போடும் வழக்குகள்;
கோர்ட்டில் வழக்குகளை தாக்கல் செய்யவதற்கு அந்த வழக்கை போடுபவர் மேஜராக இருக்க வேண்டும், அதாவது அவர் 18 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். அதாவது அவருக்கு அப்போது 19 வயது நடந்து கொண்டிருக்க வேண்டும். அப்படி மேஜர் ஆகாமல் இருந்தால், அதாவது மைனராக இருந்தால், அவருக்காக அவரின் கார்டியன் அந்த வழக்கை போடலாம். அந்த கார்டியன் அவரின் தந்தையாகவோ, தாயாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த மைனரின் நண்பனாக இருக்கலாம். (the next friend). வேறு யாராவது, மைனருக்கு எதிராக ஒரு வழக்கை கோர்ட்டில் போட வேண்டும் என்ற நிலை இருந்தால், அவர் அந்த மைனர் மீது வழக்கை போடலாம். ஆனால், அந்த வழக்குடன் ஒரு மனுவையும் போட்டு, அதில், அந்த மைனருக்காக அந்த வழக்கை நடத்த, ஒரு கோர்ட் கார்டியனையும் நியமிக்க சொல்லி கேட்க வேண்டும். அந்த கார்டியன் அந்த மைனரின் தகப்பன், தாய், அல்லது வேறு யாராவகவும் இருக்கலாம். கோர்ட் அதை முடிவு செய்யும்.

**

No comments:

Post a Comment