Sunday, August 30, 2015

NJAC

NJAC = National Judicial Appointments Commission

சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும்போது, சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகளைக் கொண்ட கொலிஜியம் (collegium) என்ற குழுவே நிதிபதிகளை நியமித்து வந்தது. 

இதை சரியில்லையென்று, இந்த என்ஜேஏசி அமைப்பை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இதை எதிர்த்துத்தான் இப்போது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. எந்த முறையில் நீதிபதி நியமனம் இருக்க வேண்டும் என்று விசாரித்து வருகிறது. அதில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அந்த வழக்கை விசாரிக்கிறது. 

அரசின் சார்பில், அட்டார்னி ஜெனரல் முகுல் ரொகட்கி அவர்கள் வாதம் செய்கிறார். 
நீதிபதிகளே, நீதிபதிகளை நியமித்துக் கொள்ளும் கொலிஜியம் முறை சரிஇல்லை என்று அரசு வாதம். அதனால், மத்தியஅரசும், நீதிபதிகளும், நீதிசார்ந்த மூத்தவர்களும் இந்த குழுவான என்ஜேஏசி-ல் இருக்க வேண்டும் என்கிறது அரசு. ஆனால், நீதித்துறை எந்த அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுதந்திரமாக இயங்க வேண்டும் என சிலர் கருத்து. 

இதில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.    

No comments:

Post a Comment