Thursday, August 6, 2015

Rummel v. Estelle

US case ~ Rummel v. Estelle 445 US 263 (1980)

டெக்சாஸ் மாநிலம். அமெரிக்காவில்தான். இங்கு ஒருவர் பெயர் 'ரம்மல்'. இவர் 1964ல் ஒரு குற்றத்தை செய்கிறார். அது, கிரெடிட் கார்டை ஏமாற்றும் எண்ணத்துடன் உபயோகித்து $80 சுருட்டிவிட்டார். அதற்கு அந்த டெக்சாஸ் மாநில சட்டப்படி 2முதல் 10 வருடம் சிறையாம். இவர் அந்த குற்றத்தை ஒப்புக் கொள்கிறார். எனவே மூன்று ஆண்டுகள் மட்டும் சிறை தண்டனை கொடுக்கப்படுகிறது.
இவர், மறுபடியும், இரண்டாவதாக ஒரு குற்றத்தை செய்கிறார். அது, 1969ல். அதன்படி, போலிச் செக்கை தயாரித்து, அதைக் கொண்டு பாங்கை ஏமாற்றி $28 கையாடல் செய்து விட்டார். அந்த குற்றத்தையும் ஒப்புக் கொண்டார். அதனால், அவருக்கு நான்கு வருடங்களை தண்டனை கொடுக்கிறார்கள்.

இதற்குப்பின், மூன்றாவது ஒரு குற்றத்தை செய்கிறார். இவரின் கை சும்மா இருக்காதுபோல! அரித்துக் கொண்டே இருக்கும்போல! மூன்றாவது குற்றம், 1973ல். ஏசி-யை ரிப்பேர் செய்து தருகிறேன் என்று சொல்லி $120 பெற்றுக் கொண்டார். அதை செய்து தரவில்லை. பணத்தைக் கொடு என்று கேட்டபோது, தர மறுக்கிறார். இதுவும் குற்றமாம். இது கடன் கிடையாது. பணத்தை வாங்கிக் கொண்டு வேலை செய்யாமல் ஏமாற்றுவதாம். இதுவும் ஒருவகை திருட்டுத்தானாம். இவர் இந்தக் குற்றத்தையும் ஒப்புக் கொள்கிறார். அதற்குறிய தண்டனையாக 2 முதல் 10 வருடம் சிறைதண்டனை கொடுக்கலாமாம்.

ஆனால், அந்த டெக்சாஸ் மாநிலத்தில் இன்னொரு சட்டமும் உள்ளதாம். அதாவது, ஒருவர் தொடர்ந்து மூன்றுமுறை குற்றம் செய்து தண்டை அடைந்தால் (அதாவது இவர் கேடி என்று முடிவானால்) Texas three strikes law டெக்சாஸ் மூன்று அடி சட்டம் வந்துவிடுமாம். அதன்படி, இவர் தொடர் குற்றச் செயலில் ஈடுபடுபவர் என்று ஆகிறதாம். அதனால் இவருக்கு "ஆயுள்தண்டனை" வழங்குகிறது. ஆனால் பரோலில் அவ்வப்போது வெளியில் வரலாம் என்று அந்த மூன்று அடிகள் சட்டத்தில் உள்ளதாம். எனவே இவருக்கு அந்த மூன்றாவது வழக்கில் இந்த ஆயுள் தண்டனையை வழங்குகிறார்கள்.
அவர் இந்த ஆயுள் தண்டனையை எதிர்த்து டெக்சாஸ் அப்பீல் கோர்ட்டுக்கு அப்பீல் போகிறார். அது மறுத்துவிடுகிறது. 

அடுத்து, பெடரல் மாவட்ட கோர்ட்டுக்கு போகிறார். அவரை ஆயுள் சிறைவைப்பது சட்டபூர்வமானதல்ல என்று கேபியஸ் கார்பஸ் மனு செய்கிறார். அதுவும் மறுக்கப்படுகிறது. மூன்று குற்ற சட்டத்தில்தானே ஆயுள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள் எனவே சட்டப்படிதானே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று மறுத்து விடுகிறார்கள்.  அத்துடன் அந்த மூன்று குற்றச் சட்டத்தின்படி, இந்த ஆயுள்தண்டனை என்பது 12 வருடம்; அதிலும் பரோலில் வெளியே வரவும் செய்யலாம் என்றுதான் சட்டம் டெக்சாஸ் சுப்ரீம் கோர்ட்டும் சொல்லியுள்ளதாக, அந்த மாவட்ட கோர்ட் சொல்லியுள்ளது.

ஆனாலும், வழக்கு அதற்கு மேல் உள்ள கோர்ட்டான, அமெரிக்க கோர்ட் ஆப் அப்பீல் என்னும் 5-வது சர்கியூட் கோர்ட்டுக்கு வருகிறது. (இந்த மாதிரியான சர்க்யூட் கோர்ட்டுகள், இரண்டு மூன்று மாநிலங்களுக்கு ஒரு சர்க்யூட் கோர்ட் இருக்கும்; அது அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு கீழே இருக்கக் கூடியது. ஆனால், அந்தந்த மாநில சுப்ரீம் கோர்ட்டுக்கு மேலே இருக்கும் இந்த சர்கியூட் கோர்ட் என்பது).
அந்த 5-வது சர்க்யூட் கோர்ட்டில் (யூ.எஸ். கோர்ட் ஆப் அப்பீல் 5-வது சர்க்யூட்) இந்த வழக்கு வருகிறது. அங்கு என்ன சொல்கிறார்கள் என்றால், அமெரிக்க அரசியலமைப்பு சட்டப்படி, அநியாய தண்டனை கொடுக்கக் கூடாது என்பதற்கு எதிராக உள்ளதாக அந்த குற்றவாளியின் வக்கீல் கூறுகிறார். எனவே இதில் அரசியலமைப்பு சட்டத்தின் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை விசாரிக்க வேண்டி இருப்பதால், அந்த 5-வது சர்க்யூட் கோர்ட்டில் உள்ள எல்லா நீதிபதிகளும் ஒன்றாக ஒரே கோர்ட் அறையில் உட்கார்ந்து அந்த வழக்கை விசாரித்தார்கள். இவ்வாறு ஒரு கோர்ட்டின் மொத்த நீதிபதிகளும் ஒரே அறையில் ஒரு வழக்கை விசாரிக்க உட்கார்ந்தால், அதை "en banc" "எண் பான்க்" என்பார்கள். அதில் நீதிபதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

எனவே வழக்கு, அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு போகிறது. ஏற்கனவே ஒரு வழக்கில், அதில் உள்ள குற்றவாளி மூன்று குற்றங்களில் தண்டனை பெற்றுள்ளார். எனவே அவரை இந்த மூன்று குற்ற தண்டனையின் பெரிய தண்டனையாக ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டியது சட்டமாகிறது என்று தீர்ப்பு கூறியுள்ளதை மேற்கோளாக காட்டினர்.

தீர்ப்பு: அதன்படி இந்த குற்றவாளி மூன்று குற்றங்களை செய்திருப்பதால் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும். அது 12 வருடம்தான். அதில் பரோலில் வெளியே வந்துவிட்டு போகலாம். ஆனால் மற்ற மாநிலங்களில் இத்தகைய ஒரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை காலத்தில் பரோலில் வெளியே வரமுடியாது என்று சட்டமே உள்ளது என்றும் அமெரிக்க உச்சநீதிமன்றம் கூறி விட்டது.

டெக்சாஸ் மாநிலத்தில் குற்றங்களுக்கான தண்டனைகள்:
குற்றங்களை அங்கு Felony and Misdemeanor என்று இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்கிறார்கள். முதலாவது பெரிய குற்றங்கள், பின்னது, சிறிய வகை குற்றங்கள்.
தண்டனைகள் அதற்கு ஏற்றாற்போல கோர்ட் வழங்கும்.
Classification of Felonies:
1) Capital felonies
2) Felonies of the First degree;
3) Felonies of the Second degree:
4) Felonies of the Thrid degree;
5) State jail felonies.

Classification of misdemeanors:
1) Class A misdemeanors; ($4000 வரை அபராதம், 1 வருட சிறை)
2) Class B misdemeanors; ( $2000 அபராதம், 180 நாள் சிறை)
3) Class C misdemeanors; ($500 வரை அபராதம் மட்டும்; மிகச் சிறிய குற்றம், இதற்கு தண்டனையே மிக மிகச் சிறியதாகவே இருக்கும். காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடு என்பது மாதிரி)

Felony பெலெனி என்னும் பெரிய குற்றங்களுக்கு:
1) 18 வயதுக்குள் இருப்பவர் குற்றத்தை செய்திருந்தால், ஆயுள் சிறை, பரோலில் வரலாம்.
2) 18 வயதுக்கு மேல் இருப்பவர் குற்றத்தை செய்திருந்தால், ஆயுள் சிறை, பரோலும் கிடையாது.
3) கடுமையான குற்றத்தை செய்திருந்தால் தூக்கு தண்டனை.
4) 1-வது டிகிரி பெலெனி குற்றத்திற்கு 5வருடம் முதல் 99 வருடம் வரை சிறை, $10,000 அபராதம்.
5) 2-வது டிகிரி பெலெனி குற்றத்திற்கு 2 வருடம் முதல் 20 வருடம்வரை சிறை, $10,000 அபராதம்.
6) 3-வது டிகிரி பெலெனி குற்றத்திற்கு $10,000 மட்டும் அபராதம்.


No comments:

Post a Comment