Saturday, August 15, 2015

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் -1

Minority and Guardianship-1
இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 என்ற சட்டமானது 25 ஆகஸ்டு 1956 முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் வருவதற்குமுன்னர், பழைய இந்து சட்டமே இருந்து வந்தது.  இந்த பழைய இந்து சட்டப்படி, “மைனர்” என்பவர் (இளவர் என்றும் சொல்கிறார்கள்) தென்னிந்தியாவில் 15 வயது பூர்த்தி அடையாதவர் மைனர் என்றும், வட இந்தியாவில் 16 வயது பூர்த்தியடையாதவரை மைனர் என்றும் சட்டம் இருந்ததாம். இந்த புதுச் சட்டமான இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 வந்தபின்னர், மைனரின் வயதை 18 வயதாக பூர்த்தி அடையாதவரை மைனர் என்று வகுத்துக் கொண்டனர்.

இந்த 18 வயது தத்துவம் ஏற்கனவே பிரிட்டீஸார் இந்தியாவை ஆளும் காலத்திலேயே ஒரு சட்டமாக 1875லேயே கொண்டு வந்துவிட்டது. அந்தச் சட்டத்துக்குப் பெயர் “இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875.” ஏற்கனவே அந்த சட்டம் நடைமுறையில் இருந்தால், 1956ல் எதற்கு இந்து மைனாரிட்டி சட்டத்தை கொண்டு வந்தார்கள்? காரணம்: 1875 இந்தியன் மெஜாரிட்டி சட்டப்படி, இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் ஒரே சட்டமாக, 18 வயது பூர்த்தி அடைந்தவர் மேஜர் வயதை அடைந்தவர் என்று சட்டம் கருதியது உண்மைதான்.

ஆனாலும், இந்தியாவில் பல மதங்கள் இருக்கின்றன. அந்தந்த மதங்கள் ஒவ்வொரு கோட்பாடுகளை அந்தந்த மத மக்களுக்கு ஊட்டிவிட்டிருக்கின்றன. எனவே, இந்த மதங்களில் கோட்பாடுகளில் தடையிட அரசாங்கம் விரும்பவில்லை. எனவே, இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875 ல் சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டனர். அதன்படி, அந்தந்த மதங்களின் “திருமணம், விவாகரத்து, தத்து எடுத்தல்” போன்ற மதம் சார்ந்த விவகாரங்களில் இந்த இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875ஐ நுழைக்க முடியாது.

அதாவது, திருமணம் போன்ற விஷயங்களில் அந்தந்த மதங்களில் எந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி உள்ளார்களோ அந்த வயதில் (மைனராக இருந்தாலும், குழந்தையாக இருந்தாலும்) திருமணம் நடத்திக் கொள்ளலாம். அதில் இந்த இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875 தலையிடாது. மற்ற விவகாரங்களில், அதாவது சொத்து வாங்குவது, விற்பது, உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்வது, கோர்ட்டில் வழக்கு போடுவது, இவைகளில், இந்த இந்தியன் மெஜாரிட்டிட சட்டமே செல்லும் என்று பிரிட்டீஸ் அரசு 1875ல் சட்டம் கொண்டு வந்தது.
**

No comments:

Post a Comment