Saturday, August 15, 2015

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-2

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-2
அதன்பின்னர், சுதந்திர இந்தியாவில் 1956ல் இந்த இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956ஐ கொண்டு வந்தனர். இந்த புதிய சட்டத்தின்படி, “பழைய இந்து மதத்தில் எதைச் சொல்லி இருந்தாலும், அதையெல்லாம் தூர எரிந்துவிட்டு, இனிமேல், மைனர் என்பவர் 18 வயது பூர்த்தி அடையாதவர் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது 18 வயது அல்லது பிறந்து 18 வருடங்கள் முடிந்திருந்தால் மட்டுமே அவர் மேஜர் அல்லது சட்டபூர்வ வயதுக்கு வந்தவர் என்று கருதப்படும் என்றும், அவ்வாறு மேஜர் ஆன ஒருவரே உலகில் உள்ள எல்லா வேலைகளையும் தானாக முடிவெடுக்க, அதை நிறைவேற்ற முடியும் என்று சட்டத்தை கொண்டுவந்து விட்டது.

முடிவில், இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு (ஜெயின், சீக்கியர், புத்தம் இவைகள் உட்பட) இந்த புதிய இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் நடைமுறையில் உள்ளது. (அதாவது 18 வயது முடியும்வரை மைனர் என இந்து சட்டம்).

கிறிஸ்தவர்களுக்கு தனியே ஒரு மைனர் & கார்டியன் சட்டம் இல்லை, எனவே அவர்கள் இந்தியன் மெஜாரிட்டி சட்டம் 1875ன் படி நடந்து கொள்ள வேண்டியது. (அதாவது அந்த சட்டப்படி 18 வயது முடியாதவரை மைனர் என கருதப்படுவார்).

முஸ்லீம்களுக்கு தனியே ஒரு மைனர் & கார்டியன் சட்டம் இல்லை. எனவே அவர்கள் நிக்காஹ் என்னும் திருமணம், தலக் என்னும் டைவர்ஸ், ஹிபா என்னும் தானம் முதலிய மத விஷயங்களில் புனித குரானில் சொல்லியுள்ளபடியும், ஷரியத் சட்டத்தில் சொல்லியுள்ளபடியும் மைனர் வயதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். (14 வயது வரை மைனர் என்று கருதுகிறார்கள்). மற்ற உலக சட்ட விஷயங்களில் 18 வயது பூர்த்தி ஆகாதவர் மைனர் என்று இந்தியன் மெஜாரிட்டி சட்டத்தில் சொல்லியுள்ளபடி நடந்து கொள்ள வேண்டும்.

**

No comments:

Post a Comment