Saturday, August 15, 2015

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-3

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-3
ஆக வெளிஉலக வேலைகளான, சொத்து வாங்குவது, ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி கையெழுத்து செய்து கொள்வது, வழக்கு நடத்துவது போன்ற விஷயங்களில் இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் ஒரே சட்டம்தான், அதாவது 18 வயது அல்லது 18 வருடத்தை பூர்த்தி செய்திருப்பவர் மட்டுமே மேஜர் வயது உடையவர் என்றும், அவ்வாறு 18 வயது நிரம்பியவர் மட்டுமே தனியாக செயல்பட முடியும் என்றும் இன்றைய சட்டம் தெளிவாக்குகிறது. 18 வயது முடிவடையாதவர் தனியாக இயங்க முடியாது. அவருக்கு ஒரு கார்டியன் என்னும் பாதுகாவலர் வேண்டும். கார்டியன் என்னும் பாதுகாவலர் என்றால் மைனரின் உடலைப் பாதுகாக்கவும், அவரின் சொத்துக்களை பாதுகாக்கவும் இருப்பவரே கார்டியன் என்னும் பாதுகாவலர். உடலுக்கும் சொத்துக்குமான இரண்டுக்கும் பாதுகாவலராக இருக்கலாம் அல்லது ஏதாவது ஒன்றுக்கு மட்டும் பாதுகாவலராகவும் இருக்கலாம். இந்த பாதுகாவலர் யார் யார் என்பதைப்பற்றித்தான் இந்த இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 விளக்குகிறது.

அந்த பாதுகாவலரின் அதிகாரங்கள் என்ன என்றும் அவர்கள் எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதைப் பற்றியும் இந்த சட்டம் சொல்கிறது. இந்து மதத்தைச் சார்ந்த மைனருக்கு இரண்டு வகையில் சொத்துக்கள் கிடைக்கும். ஒன்று அவரின் பூர்வீக வழியில் மைனருக்கு கிடைக்கும் “பூர்வீகச் சொத்துக்கள்’. மற்றொன்று அந்த மைனரே, அதாவது அவரின் பணத்தைக் கொண்டே அந்த மைனரின் பெயரில் வாங்கப்பட்ட “தனிச் சொத்துக்கள்” உண்டு. இந்த சொத்துக்களில் அந்த இந்து மைனரின் பாதுகாவலரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்பதைத்தான் இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956 விளக்குகிறது.

**

No comments:

Post a Comment