Monday, February 8, 2016

இந்திய சாட்சியச் சட்டம்-1

 இந்திய சாட்சியச் சட்டம், 1872 
(The Indian Evidence Act, 1872
இந்த சாட்சியச் சட்டமானது பிரிட்டீஸ் ஆட்சி காலத்தில் 1872-ல் ஏற்படுத்தப் பட்டது; அதை சுதந்திர இந்தியாவும் அப்படியே ஏற்றுக் கொண்டது; இந்த சட்டத்தின்படிதான், நாம் சாட்சியங்கள் என்று சொல்லும், வாய்மொழி சாட்சியத்தையும், ஆவண சாட்சியத்தையும் கோர்ட்டுக்கு கொடுக்க முடியும்; இந்த சட்டமானது, “எந்தெந்த சாட்சியத்தை ஏற்கலாம்; எவைகளை ஏற்க முடியாது” என்று தெளிவுபடுத்தி சொல்லி உள்ளது; இந்த சட்டமானது, சிவில் வழக்குகளுக்கும், கிரிமினல் வழக்குகளுக்கும் பொதுவானதே; அதேபோல, கோர்ட்–மார்ஷல் என்று சொல்லும் ராணுவக் கோர்ட்டுகளுக்கும் இதே முறைப்படிதான் சாட்சியம் அளிக்க வேண்டும்; இந்த சட்டமானது 1872ம் வருடம் செப். மாதம் 1ம் தேதியிலிருந்து அமலில் இருந்து வருகிறது; மிகச் சிறப்பாக எழுதப்பட்ட சட்டங்களில் இதுவும் ஒன்று;
‘சாட்சியம்’ என்பதை Evidence என்று பொருள் கொள்ளலாம்; ஒரு நீதிமன்றத்தில், ஒருவர், தான் வாய்மொழியாக சொல்லும் சொற்களும், ஆவணமாகக் கொடுக்கும் பத்திரங்களும் ‘சாட்சியம்’ என்னும் Evidence ஆகும்; வாய்மொழியாகச் சொன்னால் அதை ‘வாய்மொழி சாட்சியம் அல்லது Oral evidence என்றும், ஆவணத்தைக் கொடுத்தால் அதை Documentary evidence என்னும் பத்திர சாட்சியம் எனவும் சொல்கிறது இந்தச் சட்டம்; இவைகளை, நீதிபதிகள் சீர்தூக்கிப் பார்த்துத்தான் நீதி வழங்க வேண்டும் என்பது இதன் பொதுவிதி;
ஒரு நிகழ்ச்சி நடந்ததை (நல்லதோ, கெட்டதோ) நிகழ்வு அல்லது fact  என்று சொல்கிறது இந்தச் சட்டம்; (சினிமாவில், இதை ‘சம்பவம்’ என்று வேடிக்கையாகச் சொல்வதைப் பார்த்திருப்போம்);
அவ்வாறு ஒரு நிகழ்வு நடந்ததை, வாய்மொழி சாட்சியம், ஆணவ சாட்சியம் இவைகளைக் கொண்டு முடிவு செய்வார் நீதிபதி;
அந்த ‘நிகழ்வு’ நடந்துள்ளது என்று அதைக் கொண்டே நீதிபதி முடிவுக்கு வருவார்; (A fact is said to be proved when, after considering the matter, the Court believes it to exist or considers its existence so probable that a prudent man ought, to act upon the supposition that it exists);
அதேபோல், சாட்சியங்கள் மூலம், அந்த நிகழ்வு நடக்கவில்லை என்று நிரூபித்தால், அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்ற முடிவுக்கு வருவார் நீதிபதி; (A fact is said to be DISPROVED when, after considering the matters before it, the Court believes that it does not exist, so probable that a prudent man ought to act upon the supposition that it does NOT exist.);
ஆனால், அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாகவோ, நடக்கவில்லை என்றோ எந்த சாட்சியமும் தெளிவு படுத்தவில்லை என்றால், அந்த நிகழ்வு நிரூபிக்கப்படவில்லை என்றே முடிவுக்கு வருவார்; (A fact is said NOT to be proved when it is neither proved nor disproved.)
**



No comments:

Post a Comment