Monday, February 8, 2016

இந்திய சாட்சியச் சட்டம்-2

இந்திய சாட்சியச் சட்டம்-2
ஒரு “நிகழ்வை” (fact) அது நடந்ததாகவோ, அல்லது அது நடக்கவில்லை என்றோ நிரூபிக்க வேண்டும்;
மூன்று வழிகளில் ஒரு நிகழ்வை கோர்ட் ஏற்றுக் கொள்ளலாம்;
(1)அவ்வாறு அது நடந்ததாகச் சொன்னால், அது அப்படி இல்லை என்று நிரூபிக்கும்வரை, அந்த நிகழ்வு நடந்ததாக நிதிபதி “கருதிக் கொள்ள” அல்லது ஏற்றுக் கொள்ள வேண்டும்; இதை “May presume” என்கிறது இந்த சாட்சியச் சட்டம்; அல்லது அது நடந்ததற்கு உரிய சாட்சியத்தை நீதிபதி கோரலாம்;
(2)அதேபோல, ஒரு நிகழ்வு நடந்ததாக  நிரூபித்து விட்டால், அது அப்படி நடக்கவில்லை என்று வேறு ஒரு சாட்சியம் மூலம் நிரூபிக்காதவரை, “கட்டாயமாக அந்த நிகழ்வு நடந்தது” என்றே நீதிபதி கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும்; இதை “Shall presume” என்கிறது சாட்சியச் சட்டம்;
(3)அதேபோல, இந்த சாட்சியச் சட்டத்தில், சில நிகழ்வுகளை தனியே நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை; அது அப்படியே இருப்பதாகவே கோர்ட் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும்; அது நடந்திருக்காது என்று கருதும் வேறு ஒரு சாட்சியத்தை கோர்ட் ஏற்றுக் கொள்ளக் கூடாது; இதை “Conclusive proof” என்கிறது சாட்சியச் சட்டம்; இந்த நிகழ்வை எதிர்த்து நிரூபிக்கும் எந்த சாட்சியத்தையும் கோர்ட் ஏற்றுக் கொள்ளவே கூடாதாம்;
அதாவது--
சில விஷயங்களை, அதற்கு எதிர்க்கருத்து வரும்வரை, வேறு வழியில்லாமல், ஏற்றுக் கொள்ளலாம் என்பது முதல் வகையைச் சேர்ந்த may presume  என்று கூறலாம்; உண்மை இருக்கும் அல்லது இல்லாமலும் இருக்க வாய்ப்பிருக்கும் என்பதே இதன் பொருள்;
அவ்வாறு வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்ட சில விஷயங்களை, அதற்கு எதிர்க்கருத்தே வராவிட்டால், “கண்டிப்பாக” அது “நிரூபிக்கப்பட்ட உண்மை” என்றே ஏற்றுக் கொள்ளலாம்; அது உண்மைதான் என்றே ஒரே முடிவாக ஏற்றுக் கொள்வது என்பது இதன் பொருள்;  இது Shall presume வகை;
அவைகள் இல்லாமல், சட்டத்தில் சில உண்மைகளை “அப்படியே ஏற்றுக் கொள்ளவும்” என்று குறிப்பிடப் பட்டள்ளது; எனவே அவைகளை கோர்ட் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்: அதை மறுத்துச் சொல்லும் அல்லது இல்லை என்று நிரூபிக்க முயலும் எந்த சாட்சியத்தையும் கோர்ட் ஏற்றுக் கொள்ளக் கூடாது; இது Conclusive proof வகை;
**


No comments:

Post a Comment