Friday, February 12, 2016

ஸ்டாம்புகள் பலவகை: (Impressed Stamps)

ஸ்டாம்புகள் பலவகை: (Impressed Stamps)
ஸ்டாம்புகள் பல வகைகளில் உள்ளன; “முத்திரைத்தாள்கள்” என்று ரூபாய் நோட்டில் காணப்படுவதுபோல தலைப்பகுதி பேப்பர் இருக்கும், அதன் கீழ் எழுதுவதற்கான இடம் காலியாக உள்ள பேப்பராக இருக்கும்: இந்த பேப்பர்களில் இந்திய மத்திய அரசின் முத்திரை இருக்கும்; இதை “Impressed Stamps” என்பர்; இந்த முத்திரைத் தாள்களிலும் பல வகை உண்டு; சொத்துக்களை வாங்கும்போது, பத்திரம் எழுதிப் பதிவு செய்து கொள்வதற்கு உள்ள முத்திரைத் தாள்களை “நான்-சுடீஷியல்” Non-Judicial ஸ்டாம்ப் பேப்பர் என்று சொல்கிறார்கள்; அதாவது “நீதிமன்றம் சாராத அல்லது நீதிமன்றம் சம்மந்தமில்லாத ஸ்டாம்பு பேப்பர் என்று இதன் பொருள்; கோர்ட்டில் வழக்கு போட வேண்டும் என்றால் கோர்ட்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்: அவ்வாறு கோர்ட் வழக்குகளுக்கு செலுத்தும் கட்டணத்தை இதேபோல ஒருவகை ஸ்டாம்ப் பேப்பர் மூலமே செலுத்த வேண்டும்; அத்தகைய கோர்ட் பீஸ் ஸ்டாம்புகளுக்கு “சுடீஷியல் ஸ்டாம்ப்” Judicial Stamps என்று சொல்வர்;
சொத்து வாங்கும்போது உபயோகிக்கும் “நான்-சுடீஷியல் ஸ்டாம்ப் பேப்பரும்”, கோர்ட்டில் வழக்குப் போடும்போது கட்டணமாக செலுத்தும் “சுடீஷியல் ஸ்டாம்ப் பேப்பரும்” கண்ணால் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கும்; ஆனால், சொத்துக்கு உபயோகிக்கும் பேப்பரில் Non-Judicial என்று எழுதப்பட்டிருக்கும்; கோர்ட்டுக்கு கொடுக்கும் ஸ்டாம்ப் பேப்பரில் Judicial Stamps என்று எழுதப்பட்டிருக்கும்;
இவை இல்லாமல், லேபில்கள் என்னும் ஒட்டுவில்லைகள் இருக்கும்; இதை அட்ஹெசிவ் ஸ்டாம்ப் Adhesive Stamps என்பர்; அதில் பல வகைகள் உண்டு; அந்தந்த தேவைக்கு ஏற்ப இந்த ஒட்டுவில்லைகள் இருக்கும்; பணம் கொடுக்கல் வாங்கல் செய்யும்போது, ரெவின்யூ ஸ்டாம்ப் என்னும் ஒட்டு வில்லைகளை பயன்படுத்த வேண்டும்; கடன் வாங்கும்போது, புரோ நோட் எழுதுவதற்கு இந்த ரெவின்யூ ஸ்டாம்ப் உபயோகப்படும்; பணம் பெற்றுக் கொண்டேன் என்று சொல்லும் ரசீதுகளுக்கும், சம்பளம் வாங்கிக் கொண்டேன் என்று ரசீது கொடுப்பதற்கும் இந்த ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும்; ரூ.5,000 பணத்துக்கு குறைவான பணத்துக்கு ரசீது கொடுத்தால் அந்த ரசீது பேப்பரில் இந்த ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்ட தேவையில்லை; அதற்குமேல் உள்ள அதாவது ரூ.5,000-க்கு மேல் பணம் பெற்றதற்கு கொடுக்கும் ரசீதுகளுக்கு கண்டிப்பாக ரூ.1 மதிப்புள்ள ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும்: அதற்குமேல் எவ்வளவு பணமாக இருந்தாலும் இந்த ஒருரூபாய் ரெவின்யூ ஸ்டாம்பே போதும்; புரோ நோட் என்னும் கடன் பத்திரத்துக்கு ஒரு வெள்ளை பேப்பரில் கடன் பெற்றதையும் அதை திருப்பிச் செலுத்துவேன் என்று உறுதிகூறி எழுதி அதில் 25 பைசா காசுக்குறிய ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும்; எவ்வளவு பணம் கடன் பெற்றாலும் இந்த 25 பைசா  ரெவின்யூ ஸ்டாம்பே போதும்; அந்த ஸ்டாம்பின் மீது கையெழுத்துச் செய்தால் போதும்; பெரும்பாலும் புரோ நோட்டுக் கடனை, ஒரு ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொள்கிறார்கள்; இது தவறு; புரோ நோட் கடனுக்கு ரெவின்யூ ஸ்டாம்பே போதும்; அதுதான் சட்டத்தில் சொல்லி உள்ளது; எனவே ஸ்டாம்ப் பேப்பரில் புரோ நோட் எழுதக் கூடாது; அப்படி எழுதினால் அது சட்டப்படி செல்லாது;
இவை இல்லாமல், நோட்டரி வக்கீல் முன்பு எழுதிக் கொள்ளும் அபிடவிட்டுகள், உறுதிமொழிகள் இவைகளில் நோட்டரி வக்கீல் கையெழுத்துச் செய்யும்போது, அதில் “நோட்டரி ஸ்டாம்ப் லேபிள்” Notary Stamp என்னும் லேபிளை ஒட்டி கையெழுத்துப் பெற வேண்டும்;
இவை அல்லாமல், இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு இன்சூரன்ஸ் ஸ்டாம்ப் வில்லைகள் Insurance Stamp என்று தனியே உள்ளது; அதையே அந்த வேலைகளுக்குப் பயன்படுத்த வேண்டும்;
இவை அல்லாமல், கம்பெனிகள் வைத்திருக்கும், விற்பனை செய்யும் ஷேர்களை விற்கும்போதும், வாங்கும்போதும், அந்த பத்திரங்களில் Share Stamps உள்ளன; அவைகளையே அதற்குப் பயன்படுத்த வேண்டும்;
எந்தெந்த வகைக்கு ஒட்டுவில்லை என்னும் Adhesive Stamp உபயோகிக்க வேண்டும் என இந்திய ஸ்டாம்ப் சட்டம் 1899ல் பிரிவு 11ல் சொல்லப்பட்டுள்ளது; அது –
Sec.11 of the Indian Stamp Act 1899:
“The following instruments may be stamped with adhesive stamps, namely –
(a)     Instruments chargeable with the duty not exceeding twenty paise except of bills of exchange payable otherwise than on demand and drawn in sets;
(b)     Bill of exchange, and promissory notes drawn or made out of India.
(c)     Entry as an advocate, vakil or attorney on the roll of a High Court;
(d)     Notarial acts; and
(e)     Transfers by endorsement of shares in any incorporated company or other body corporate.
**


No comments:

Post a Comment