Friday, October 21, 2016

சொத்துரிமை-5

சொத்துரிமை-5

மற்றும் பிரிவு-15, இந்து பெண்ணின் “தனிப்பட்ட சொத்தை” அவரின் இறப்புக்குப் பின்னர், அவரின் வாரிசுகள் எப்படி அடைய வேண்டும் என்றும், அதில் யார் யார் வாரிசுகள் என்றும் தெளிவுபடுத்தி உள்ளது; அதாவது, ஒரு இந்து பெண்ணுக்கு மூன்று வழிகளில் சொத்து கிடைத்திருக்கும்; முதல்வகை: அவர் கிரயம் வாங்கிய சொத்து அல்லது யாராவது அவருக்கு தானமாக (செட்டில்மெண்டாக) கொடுத்த சொத்து; இரண்டாவது வகை: அந்தப் பெண்ணுக்கு அவரின் கணவர் வழியில் வாரிசு முறையில் கிடைத்த சொத்து (அதாவது, கணவர் இறந்து விட்டால், கணவரின் தகப்பனார் சொத்தில் இந்த பங்கானது, பாகப் பிரிவினையில் கிடைத்திருக்கும்); மூன்றாவது வகை: அந்த பெண்ணின் தகப்பனார், தாய் வழியில் கிடைத்த சொத்து (இதுவும், அவரின் பெற்றோர் வீட்டில் நடந்த பாகப் பிரிவினையில் கிடைத்த சொத்தாக இருக்கும்); இப்படி மூன்று வகைகளில் ஒரு இந்து பெண்ணுக்கு சொத்து கிடைத்திருக்கும்; இந்த சொத்துக்களில் ஏதாவது ஒரு வகையை விட்டுவிட்டு, அந்த பெண் இறந்திருந்தால், அந்த சொத்துக்கள் கீழ்கண்டபடி வாரிசுகளை அடையும்; முதல் வகைச் சொத்துக்களை (அதாவது அந்தப் பெண்ணின் தனிச் சொத்துக்களை) அவள் காலத்துக்குப் பின்னர் அவளின் கணவரும், குழந்தைகளும் அடைவார்கள்; இரண்டாம் வகைச் சொத்துக்களை, அவள் இறந்தபின்னர் அவளின் கணவரும், குழந்தைகளும் அடைவார்கள்; ஆனால் குழந்தை இல்லை என்றால், அவளின் கணவரின் வாரிசுகளுக்கே திரும்பச் சென்று விடும்; மூன்றாம் வகை சொத்துக்களை அவள் காலத்துக்குப் பின்னர் அவளின் கணவரும் குழந்தைகளும் அடைவார்கள்; ஆனாலும், அவளுக்கு குழந்தைகள் இல்லையென்றால், அவளின் தகப்பனாருக்கே திரும்பச் சென்று விடும்; ஏனென்றால், இந்த மூன்றாம் வகைச் சொத்தானது, அவளுக்கு, அவளின் பெற்றோர் மூலம் கிடைத்த சொத்தாகும்: அவளின் பெற்றோரிடம் கிடைத்த சொத்தானது, அவளுக்கு குழந்தை இல்லையென்றால், அவளின் கணவரின் வாரிசுகளுக்குப் போகாது, மாறாக அவளின் தகப்பனார் வாரிசுகளைச் சென்று அடையும்; இதுதான் இந்து பெண்களின் சொத்துக்களின் வாரிசுரிமையின் சிறப்பு;

No comments:

Post a Comment