Friday, October 21, 2016

சொத்துரிமை-4

சொத்துரிமை-4

1956 இந்து வாரிசுரிமைச் சட்டம்;
இப்படியாக இந்து சொத்துரிமைகள் 1956 வரை இருந்து வந்தது; 1956-ல் இந்து வாரிசுரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது: The Hindu Succession Act, 1956: இது 17.7.1956ல் இருந்து அமலுக்கு வந்தது; இது மொத்தம் 31 பிரிவுகளைக் கொண்டது; (It consists of 31 sections); இதில் முக்கியமான செக்ஷன்கள் (பிரிவுகள்-Sections) பல உண்டு: இதில் பிரிவு -6 மட்டும் கோபார்ஷனரி என்னும் பூர்வீகச் சொத்துக்களில் வாரிசுரிமையைப் பற்றி சொல்கிறது; பழைய முறையை மாற்றி புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது; இதிலும் பெண்களுக்கு சரிசம பங்கு கிடைக்கவில்லை; (எனவே பின்னர் மத்திய அரசு, 2005ல் இதில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது; அதைப் பின்னர் பார்க்கலாம்);

மற்றும், பிரிவு-8 என்பது இந்து ஆண்களின் தனிச் சொத்தின் வாரிசுரிமையைப் பற்றிச் சொல்கிறது; யார் யார் இந்து ஆணின் வாரிசுகள் என்றும், அவர்களுக்கு எவ்வளவு பங்குகள் என்றும் சொல்லப் பட்டுள்ளது;

பிரிவு-14 என்பது ஒரு முக்கியமான பிரிவு; இதன்படி இந்து பெண்கள் ஏற்கனவே ஆயுட்கால உரிமையுடன் அனுபவித்து வரும் சொத்துக்கள் அனைத்தும், இந்தச் சட்டம் வந்தபின்னர் முழு உரிமையுடன் முழு உரிமையாளராக எடுத்துக் கொள்ளலாம் என்ற உரிமையை பெண்களுக்கு வழங்கி உள்ளது; அதாவது, கோபார்சனரி சொத்துக்களில் கணவரின் பங்கை விதவை மனைவி ஆயுட்கால உரிமையுடன் அனுபவித்து வந்த சொத்தை (விற்க உரிமை இல்லாமல் இருந்து வந்த சொத்தை) இந்தப் பிரிவு-14 முழு உரிமையுடன் அனுபவித்துக் கொள்ள வழி வகை செய்தது;

No comments:

Post a Comment