Tuesday, January 5, 2021

சிவகங்கை ஜமீன் சொத்து

 சட்டம் XXVI of 1948-ன்படி (Madras Estates (Abolition and Conversion into Ryotwari Act 1948) சிவகங்கை எஸ்டேட் ஒரு Impartible Estate (பாகம் செய்ய முடியாத எஸ்டேட்) என்று அப்போதைய அரசு முடிவு செய்து அதற்குறிய நஷ்ட ஈடாக ரூ.7,900 1957-ல் கொடுத்தது. 

1951-ல் சிவகங்கை சமஸ்தானத்தின் ஜமின்தாராக வரகுணபாண்டியன் இருந்தார். அவருக்கு அவரின் முதல் மனைவி மூலம் இரண்டு மகன்களும், இரண்டாவது மனைவி மூலம் ஒரு மகனும் ஆக மூன்று மகன்கள் இருந்தனர். 1948 சட்டம் வந்தபின்னர் 2-ம் மனைவிக்கு மற்றொரு மகன் குட்டி ராஜா பிறந்தான். இவர்கள் இல்லாமல், செல்லபாப்பம்மாள் என்ற வைப்பாட்டி மூலம் இரண்டு மகன்கள் (Illegitimate sons) இருந்தனர். 

சிவகங்கை ஜமின்தார் வரகுணபாண்டியன் 16 ஆகஸ்டு 1955ல் இறந்தார். ஜமின் சொத்தின் நஷ்ட ஈட்டுத் தொகையை பங்கு பிரிப்பதில் பிரச்சனைகள் ஏற்பட்டு வழக்கு கோர்ட்டுக்குப் போகிறது. அவரின் வைப்பாட்டிக்கு பிறந்த இரண்டு மகன்களான செல்லத்துரை, சாமித்துரை இருவரும் பங்கு கேட்டு வழக்குப் போடுகின்றனர். 

Impartible Estate (பாகம் பிரிக்க முடியாத எஸ்டேட்) சொத்துக்களில் The Madras Impartible Estate Act 1904 படி சொத்துப் பிரியும். ஜமின்தாரின் வைப்பாட்டி மகன்களுக்கும் பங்கு உண்டு என்று தீர்ப்பானது.

**


No comments:

Post a Comment