Wednesday, June 3, 2015

பாகப் பிரிவினை-8

பாகப் பிரிவினை-8
முகமதிய ஷரியத் சட்டம் 1937:
இதன்படி, முகமதியர் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள், கீழ்கண்டபடி சொத்துக்கு வாரிசுகள் ஆவார்கள்.
கணவன், மனைவி, தகப்பனார்,. பாட்டனார், தாயார், பாட்டி, மகள், மகனின் மகள், சகோதரி இவர்கள் இறந்தவரின் சொத்துக்கு “பங்குதாரர்” ஆவார்கள்.
இறந்தவருக்கு ஆண்வழி உறவுகள் அனைவரும் “மிச்சத்தை பெறுபவர்கள்” Residuaries  ஆவார்கள்.
(1)   பிள்ளைகள் இருந்தால், இறந்த கணவனின் சொத்தில், மனைவிக்கு எட்டில் ஒரு பங்கை பெறுவார். ஆனால், அதேபோல, பிள்ளைகள் இருந்தால், இறந்த மனைவி சொத்தில்,  கணவனுக்கு நான்கில் ஒரு பங்கு கொடுத்துவிட வேண்டும், மீதி உள்ளதைத்தான் பிள்ளைகள் பங்காக எடுக்க முடியும்.
(2)   இறந்தவருக்கு குழந்தைகள் இல்லையென்றால், (1) இறந்த கணவன் சொத்தில் மனைவிக்கு நான்கில் ஒரு பங்கு; (2) ஆனால், இறந்த மனைவி சொத்தில் கணவனுக்கு பாதி பங்கு அதாவது இரண்டில் ஒரு பங்கு.) (3) தாயாருக்கு மூன்றில் ஒரு பங்கு; தகப்பனாருக்கு ஆறில் ஒரு பங்கு; தாத்தா, பாட்டிகளுக்கு ஆறில் ஒரு பங்கு;
(3)   மகள்களுக்கு – (1) தன் சகோதரனுடன் பங்கு பெறும்போது, சகோதரன்களுக்கு தலா இரண்டு பங்கு வீதமும், சகோதரிக்கு ஒரு பங்கு வீதமும். (2) சகோதரன் இல்லையென்றால், ஒரே மகளாக இருந்தால் இரண்டில் ஒரு பங்கும், பல மகள்கள் இருந்தால் அனைவருக்கும் மூன்றில் இரண்டு பங்கும்;
(4)   இப்படியாக ஒரு பெரிய பட்டியலே இருக்கும். மிகக் கவனமாக பங்கு கணக்கை தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே சரியாக பங்கை குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.
மிகச் சுலபமாக தெரிந்துகொள்ள;
கணவன் இறந்துவிட்டால், கணவனின் சொத்தில் மனைவிக்கு எட்டில் ஒருபங்கும், மீதி சொத்து பிள்ளைகளுக்கும் சேரவேண்டும். (அதில் மீதி உள்ளதை, ஆண்கள் (மகன்கள்) இரண்டு பங்குகள் வீதமும், பெண்கள் (மகள்கள்) ஒரு பங்கு வீதமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஷரியத் சட்டம் என்னும் முஸ்லீம் சட்டம் விளக்குகிறது.
மனைவி இறந்தால், மனைவியின் சொத்தில், கணவனுக்கு நான்கில் ஒரு பங்கும், மீதி உள்ளது பிள்ளைகளுக்கு மேற்சொன்னபடி, மகன்களுக்கு தலா இரண்டு பங்கும், மகள்களுக்கு தலா ஒரு பங்கும் கொடுக்க வேண்டும்.
இந்த பங்கீட்டு விபரம் சரியாக கணக்குப் போடத் தெரிந்தவர்களுக்கு மட்டும் விளங்கும்.


No comments:

Post a Comment