Monday, June 15, 2015

சுக்கிர தெசை


கதைகளில்தான், ஒரு சாதாரண பெண், திடீரென்று ராணி ஆவது நடக்கும். ஆனால் உண்மையில் சுவீடன் நாட்டில் இது நடந்துள்ளது.

சுவீடன் நாட்டின் இளவரசர் கால் பிலிப் Carl Philip.
இவர் அந்த நாட்டின் மன்னர் ஆவதற்குறிய வாய்ப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள இளவரசர் ஆவார். இவர் திடீரென்று ஒரு 36 வயது மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்தப் பெண்ணோ, உடம்பில் மேல்பகுதியில் துணி இல்லாமல் மாடல் செய்யும் அழகி, மற்றும் யோகா கற்றுத்தரும் செய்முறையாளராகவும் இருக்கிறார்.

இளவரசருக்கு வேண்டியவர்கள் எல்லோரும், 'இந்த பெண்ணின் உறவு உங்களின் புகழைக் குறைக்கும்' என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்குப் பின்னரும் இவர் அவளையே மணக்க சம்மதித்து விட்டார்.

'எல்லா நாட்டு வாலிபருக்கும், பெண்ணைப் பார்த்தவுடன் புத்தி பேதலிக்கும்போல!'
அவள், ஒரே நாளில் இளவரசி ஆகிவிட்டாள்!!

திருமணம் முடிந்தவுடன் இருவரும் ஸ்டாக்ஹோம் நகரத்தின் தெருக்களில் குதிரை பூட்டிய சாரட்டில் ஊர்வலம் வந்தார்கள். 2010லிருந்தே அந்த பெண்ணின்மீது ஒரு கண்ணாய்தான் இருந்திருக்கிறார் இந்த இளவரச மணமகன்.

அந்த இளவரிசி மணமகளின் பெயர் ஹெல்குவிஸ்ட்.
நீங்கள் அரைகுறை ஆடையுடன் மேகஜின்களுக்கு மாடல் அழகியாக படம் கொடுத்துவிட்டு இப்போது இளவரசி ஆனதால் உங்கள் மனநிலை எப்படி உள்ளது என கேட்டதற்கு, "நான் எதற்காகவும் வருத்தப்படவில்லை; எல்லா அனுபவங்களுமே என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது" என்று கூலாக பதில் சொல்லியுள்ளார்.

கடவுள் நல்ல வாழ்வை கொடுக்கும்போது, பழையனவற்றை மறப்பதுதானே வாழ்வின் தத்துவம் என்று நினைக்கிறாள் போலும்!!!
**

No comments:

Post a Comment