US Constitution -part-5
அமெரிக்க அரசியல்
சாசன சட்டத்தில் 5-வது திருத்தம்: "கிரிமினல் வழக்குகளில் பெரிய குற்றங்களை
செய்தவர்களை கிராண்ட் ஜூரி விசாரனை வைத்து அவன் குற்றத்தை செய்திருக்கிறானா என்று
கண்டுகொண்டு பின்னர்தான் வழக்கை கோர்ட்டுக்கு அனுப்பவேண்டும்." என்று
கூறியுள்ளது. குற்றமே செய்யாதவன் என்று தெரிந்தால் அவனை ஏன் கோர்ட் விசாரிக்க
வேண்டும்;
அவ்வாறு நேரடியாக கோர்ட் விசாரித்தால் அது அவனுக்கு இரட்டை
தொந்தரவாகத்தானே இருக்கும், என்று அந்த திருத்தச் சட்டத்தில்
கூறப்பட்டுள்ளது.
அந்த 5-வது
திருத்தத்தை செல்லமாக "மிரண்டா
எச்சரிக்கை" "Miranda Warning"
என்று கோர்ட் மொழியில் சொல்லிக் கொள்வர். இதை மிரண்டா உரிமைகள் என்று கூடச்
சொல்வார்கள்.
மிரண்டா
எச்சரிக்கை:
இது ஒரு வழக்கின்
மூலம் கோர்ட் எடுத்த முடிவாகும்.
'போலீஸ் உன்னை
விசாரிக்கும்போது, நீ அமைதியாக இருக்கலாம்; பதில் சொல்லத் தேவையில்ல; கட்டாயம் பதில்
சொல்லவேண்டும் என்று போலீஸ் உன்னை கட்டாயப்படுத்த முடியாது' என்பதே
மிராண்டா எச்சரிக்கை.
Miranda v. Arizona. 384 US
436 (1966)
இந்த வழக்கில் அமெரிக்க சுப்ரீம்கோர்ட் இவ்வாறு
கூறியதால், அந்த வழக்கின் நபரின் பெயரிலேயே மிராண்டா
எச்சரிக்கை என்று செல்லமாக கூறப்படுகிறது.
இது ஒரு சட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகும்.
மிராண்டா
வழக்கு:
மிராண்டா என்பவரை
போலீஸ் கைது செய்கிறது. அவன், ஒரு 18 வயதான சிறுமியை
கடத்தி கற்பழிப்பு செய்தான் என்று குற்றம். ஆனால் நேரடியாக சாட்சியம், ஆதாரம் கிடைக்கவில்லை. அவன்தான் இதை செய்திருப்பான் என்று வேறு
நம்பும்படியான சாட்சியம் இருப்பதால் இவனை கைது செய்கிறார்கள். அவனை என்ன
செய்தார்களோ போலீஸ், அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டு எழுதி
கையெழுத்தும் போட்டுக் கொடுத்து விட்டான். 'நான் தான் இந்த
குற்றத்தை செய்தேன் என்றும், நான் விருப்பப்பட்டே இந்த
உறுதிமொழியை போலீஸூக்கு எழுதிக் கொடுக்கிறேன்' என்று போலீஸ்
கையெழுத்து வாங்கி விட்டது. கோர்ட்டுக்கு வழக்கு போகிறது. ஜூரி விசாரனை. அவரின்
வக்கீல் ஒரு சட்டப் பிரச்சனையை கிளப்புகிறார். மிரண்டாவிடம் எந்த எச்சரிக்கையும்
செய்யாமல் எழுதி வாங்கப்பட்ட ஒப்புதல் செல்லாது என்கிறார். போலீஸ் கேட்டால்
உண்மையை சொல்லத்தானே வேண்டும் என்று மிரண்டா கூறிவிட்டார். ஆனால் போலீஸ் அவ்வாறு
கேள்விகளை கேட்கும்முன்பே, "நான் கேட்கும்
கேள்விகளுக்கு நீ பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று சட்டம் உள்ளது"
என்று சொல்லி இருக்க வேண்டுமாம். அவ்வாறு போலீஸ் மிரண்டாவை உஷார்
படுத்தவில்லையாம். எனவே அவரிடம் வாங்கிய, குற்றத்தை
ஒப்புக்கொண்ட ஒப்புதல் செல்லாது என்கிறார். ஆனாலும் கீழ்கோர்ட் அவனுக்கு தண்டனை
கொடுத்துவிடுகிறது. அவனிடம் வாங்கிய ஒப்புதல் வாக்குமூலம் அவன் விரும்பி
கொடுத்ததுதானே என்றும், போலீஸ் உஷார் படுத்தவில்லை என்றாலும்
அவனை கட்டாயப் படுத்தி வாங்கவில்லையே என்று கோர்ட் முடிவுக்கு வருகிறது.
ஆனால், வழக்கு அமெரிக்க சுப்ரீம் கோட்டுக்கு வருகிறது. அப்போது தலைமை நீதிபதியாக
இருப்பவர் ஏர்ல் வார்ன் அவர்கள். அவருடன் 8 துணை நீதிபதிகளும் அந்த அப்பீலை விசாரிக்கிறார்கள்.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்
இந்த அப்பீல் வழக்கில், கீழ்கண்ட விதிமுறைகளை வகுத்தது.
அதுவே "மிராண்டா எச்சரிக்கை" என்று அழைக்கப்படுகிறது.
குற்றவாளியை எச்சரிக்கை
செய்யாமல் பெறப்பட்ட சாட்சியத்தை கோர்ட் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதுதான் சுப்ரீம்கோர்ட்டின்
தீர்ப்பு.
இவ்வாறு ஒரு எச்சரிக்கையை
குற்றவாளிக்கு கொடுத்தால், எந்த குற்றவாளியும் உண்மையை ஒப்புக்
கொள்ள மாட்டானே என்ற கேள்வி எழலாம். ஆனாலும், வேறு வழிகளில் அவன்
குற்றம் செய்ததை கோர்ட்டுக்கு சொல்ல வேண்டுமேயன்றி, அவனை அடித்து
உதைத்து, ஆசைகாட்டி, குற்றத்தை ஒப்புக்கொண்டால்
தண்டனை குறையும் என்ற உறுதிமொழி கொடுத்து, இவ்வாறு பெறப்பட்டிருந்தால்
அதை அந்த வழக்கில் உபயோகிக்க முடியாது என்று கோர்ட் கூறியுள்ளது.
எனவே குற்றவாளி மிரண்டா
விடுதலை ஆகிவிட்டான்.
No comments:
Post a Comment