Saturday, August 15, 2015

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-9

மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம்-9
வளர்ப்பு குழந்தைக்கு யார் கார்டியன்? (இந்து வளர்ப்பு குழந்தை)
இந்து மதத்தில் மட்டுமே வளர்ப்பு குழந்தைகளை தத்து (Adoption) எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. மற்ற மதங்களில் அந்த பழக்கம் இல்லை. (இப்போது சட்டம் மாறிவிட்டது). இந்து மதத்தில் தத்து என்னும் வளர்ப்பு குழந்தைகளை எடுத்து வளர்ப்பர். இதை அந்த குழந்தை 14 வயதுக்குள் இருக்கும்போது, அதன் தகப்பன்-தாய் சம்மதத்துடன் தத்து எடுத்து வளர்ப்பர். இப்படி தத்து எடுத்து வளர்த்த குழந்தைக்கு இயற்கை பெற்றோர் இருக்கும்போது, வளர்ப்பு பெற்றோர் இயற்கை கார்டியனாக இருக்க முடியுமா? இதற்கு பதிலாக, இந்து மைனாரிட்டி & கார்டியன்ஷிப் சட்டம் 1956ல் பிரிவு 7-ல் சொல்லப் பட்டுள்ளது. அதன்படி, வளர்ப்பு குழந்தைகளுக்கு அதன் வளர்ப்பு தந்தை இயற்கை கார்டியனாக இருக்கலாம், அவருக்குப்பின் (அவர் இயங்காமல் போனால்), வளர்ப்புத் தாய் இயற்கை கார்டியனாக இருக்கலாம்.

**

No comments:

Post a Comment