Tuesday, May 24, 2016

Fraudulent Transfers

Fraudulent Transfers
கடன் கொடுத்தவர்களை ஏமாற்றுவதற்காக சொத்தை விற்றதுபோல கடன் வாங்கியவர் பத்திரத்தை ஏற்படுத்திக் கொள்வதை Fraudulent transfer என்று சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882ல் பிரிவு 53ல் சொல்லப்பட்டுள்ளது.
அவ்வாறு கடன் கொடுத்தவரை ஏமாற்றி, கடன் வாங்கியவர் அவரின் சொத்தை வேறு பெயருக்கு மாற்றி எழுதிக் கொண்ட பத்திரம் செல்லாது என்றும், அந்த ஏமாற்றும் பத்திரத்தை, கடன் கொடுத்தவர் ரத்து செய்ய கோர்ட்டை நாடலாம் என்றும் இந்த சட்டம் கூறுகிறது.
ஆனாலும், அந்த சொத்தை வாங்கியவர் ஒரு உண்மையான நபராக இருந்து, உண்மையில் பணம் கொடுத்து  அந்த சொத்தை வாங்கி இருந்தால், அந்தப் பத்திரத்தை மேற்சொன்னபடி ரத்து செய்ய முடியாது என்றும் அந்தச் சட்டம் சொல்கிறது.
எனவே, கடன் வாங்கியவர், அவரின் சொத்தை, பணம் பெற்றுக் கொள்ளாமல் வேறு யார் பெயருக்காவது மாற்றி பத்திரம் எழுதி இருந்தால், அந்த பத்திரத்தை, கடன் கொடுத்தவர் ரத்து செய்து கொள்ளலாம்.
உண்மையில் பணம் கொடுத்து அந்த சொத்தை, அந்த கடன் வாங்கியவரிடமிருந்து ஒருவர் கிரயம் வாங்கி இருந்தால், அந்த கிரயம் செல்லும்.
கடன் வாங்கியவர், அவ்வாறு கடன் கொடுத்தவரை ஏமாற்ற நினைத்து, வேறு ஒரு நபருக்கு விற்றதுபோல (பணம் வாங்கிக் கொள்ளாமல்) எழுதிக் கொண்ட பத்திரத்தை, கடன் கொடுத்தவர் நினைத்தால் ரத்து செய்து கொள்ளலாம்.
கடன் கொடுத்தவர்களில் ஒருவர் அவ்வாறு அந்த ஏமாற்று கிரயப் பத்திரத்தை ரத்து செய்ய தாக்கல் செய்யும் வழக்கில், மற்ற கடன் கொடுத்தவர்களும் சேர்ந்து கொள்ளலாம், ஒவ்வொருவரும் தனித்தனியே வழக்கு போடத் தேவையில்லை என்றும் அந்தச் சட்டம் தெளிவுபடுத்தி உள்ளது.
1939ல் தீர்ப்பான ஒரு வழக்கு இது:
வெள்ளையாக் கோனார் <எதிர்> ராமசாமிக் கோனார் மற்றும் ஒருவர் (1939) 2 MLJ 400.
வாதி, 2-ம் பிரதிவாதிக்கு புரோ நோட்டில் கடன் கொடுத்திருக்கிறார். அவர் மீது வழக்குப் போட்டு டிகிரியும் வாங்கி உள்ளார். ஆச்சரியம் என்னவென்றால், 1924 ஆகஸ்டு 2ல் வழக்கு போட்டார். 1924 நவம்பர் 12ல் தீர்ப்பு வந்துவிட்டது. மூன்றே மாதத்தில் தீர்ப்பு என்பது ஆச்சரியம்தான்!
அதில் கடன் வாங்கிய 2-ம் பிரதிவாதி, அந்த டிகிரிக்கு கட்ட வேண்டிய கடன் பணத்தை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அவரின் மச்சானுக்கு (1-ம் பிரதிவாதிக்கு) ஒரு கிரயபத்திரம் எழுதிக் கொடுத்து, அவரின் சொத்தை விற்றுவிட்டதாக சொல்கிறார். சொத்து இருந்தால்தானே கோர்ட் அதை ஜப்தி செய்ய முடியும். அதை விற்றதுபோல பத்திரம் எழுதிவிட்டால், இந்த கோர்ட் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறார். இதைத்தான், சொத்துரிமை மாற்றுச் சட்டம் 1882 பிரிவு 53ல் Fraudulent transfer ஏமாற்றும் நோக்கில் எழுதிக் கொண்ட பத்திரம் என்று சட்டம் சொல்கிறது.
எனவே கடன் கொடுத்தவர் (வாதி) இந்த ஏமாற்றுக் கிரயம் செல்லாது என்றும், அவரின் கடனுக்கு அந்த சொத்தை ஜப்தி செய்ய வேண்டும் என்றும் இந்த வழக்கை தாக்கல் செய்தார். வாதி, அந்த வழக்கில், “அந்த ஏமாற்றுக் கிரயம் செல்லாது” என்று கேட்கிறார். ஆனால் “அந்த கிரயம் என்னைக் (வாதியைக்) கட்டுப்படுத்தாது” என்று டிக்ளரேஷன்தான் கேட்க முடியும் என்றும் கேன்சலேஷன் கேட்க முடியாது என்றும் தீர்ப்பு சொல்லி உள்ளது.
வெங்கடகிருஷ்னையா எதிர் அலிசாகிப், AIR 1938 Mad 921  என்ற வழக்கில், ஒரு மைனரின் சொத்தை, அவரின் கார்டியன், அந்த மைனருக்காக கார்டியன் என கையெழுத்துச் செய்து விற்றுவிடுகிறார். அந்த மைனர், மேஜர் வயதை அடைந்தவுடன், அந்தக் கிரயத்தை ரத்து செய்ய நினைக்கிறார். இங்கு, அந்த சொத்தின் சுவாதீனம் இந்த மைனரிடம் இல்லை. எனவே சொத்தின் சுவாதீனத்தை கேட்பதற்கு முன், அவர் இந்த கிரயப் பத்திரத்தை ரத்து செய்ய (கேன்சல் செய்ய) வழக்கு போட வேண்டும். பத்திரத்தை ரத்து செய்யாமல், சொத்தின் சுவாதீனத்தை கேட்க முடியாது.
அவ்வாறு இருக்கும்போது, மேற்சொன்ன வெள்ளையாக் கோனார் வழக்கில், ஏமாற்றுக் கிரயப் பத்திரத்தை மொத்தமாகவே ரத்து செய்து விட முடியாது என்கிறது கோர்ட். காரணம்: உதாரணமாக, கடன் ரூ.10,000 மட்டுமே உள்ளது. சொத்தை ரூ.50,000க்கு விற்று விட்டார். பத்தாயிரம் கடனுக்கு ஐம்பதாயிரம் சொத்தின் பத்திரத்தை ரத்து செய்து விட்டால் நிலைமை என்னவாகும்? எனவே அவரின் கடன் தொகை வரைக்கும் அந்த பத்திரம் செல்லுபடியாகாது என்றுதானே வழக்கு போடமுடியும் என்று அந்த கோர்ட் கேள்வி கேட்டிருக்கிறது. ஒருவேளை கடன் தொகையானது, சொத்தின் கிரயத் தொகையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்பட்சத்தில், அந்த ஏமாற்றுப் பத்திரம் முழுவதையும் ரத்து செய்யலாம்.
What the creditors therefore seek is not the cancellation of the sale, but a declaration that it is not valid so far as their claims are concerned.
எனவே கிரயத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு போடக்கூடாது; அதற்குப்பதிலாக கடன் தொகையைப் பொறுத்தவரை அந்த கிரயம் கட்டுப்படுத்தாது என்று டிக்ளரேஷன் வழக்குத் தான் போடமுடியும் என கோர்ட் சொல்லிவிட்டது.
**
Fraudulent Transfers:
Sec.53 of the Transfer of property Act 1882
(1)         Every transfer of immoveable property made with intent to defeat or delay the creditors of the transferor shall be voidable at the option of any creditor so defeated or delayed.
Nothing in this sub-section shall impair the rights of a transferee in good faith and for consideration.
Nothing in this sub-section shall affect any law for the time being in force relating to insolvency.
A suit instituted by a creditor (which term includes a decree-holder whether he has or has not applied for execution of his decree) to avoid a transfer on the ground that it has been made with intent to defeat or delay the creditors of the transferor shall be instituted on behalf of, or for the benefit of, all the creditors.
(2)        Every transfer of immoveable property made without consideration with intent to defraud a subsequent transferee shall be voidable at the option of such transferee.
For the purpose of this sub-section, no transfer made without consideration shall be deemed to have been made with intent to defraud by reason only that a subsequent transfer for consideration was made.


No comments:

Post a Comment