சொத்துரிமை-1
இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956ல்
“பூர்வீகச் சொத்து”:
இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956
சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், பழைய இந்து சட்டமே நடைமுறையில்
இருந்துள்ளது; தென் இந்தியாவில் மித்தாஷரா இந்து கூட்டு குடும்ப முறை இருந்து
வந்துள்ளது; அதாவது, இந்து கூட்டுக் குடும்பம் என்பது குடும்பத்தில் மூத்தவர்
கர்த்தா (காப்பவர், மேனேஜர்) என்று அழைக்கப்படுவார்; இவர்தான் அந்த குடும்பத்தை
நிர்வகித்து வருவார்; அந்த குடும்பத்தில் உள்ள ஆண் பெண் அனைவரும் கூட்டு குடும்ப
உறுப்பினர்கள்; ஒரு சொசைட்டி போல இந்த அமைப்பு இருக்கும்;
இந்து கூட்டு குடும்பத்தில்,
வெளிக் குடும்பத்திலிலிருந்து திருமணம் செய்து மனைவியாக வருவர்; அதேபோல இந்தக்
குடும்பத்து பெண்கள், திருமணம் செய்து கொடுக்கப்பட்டு வெளிக் குடும்பத்துக்கு
மனைவிகளாக செல்வர்; ஆக, பெண்கள், குடும்பத்தின் நிரந்தர உறுப்பினர்கள் இல்லை;
ஆனாலும், அவர்கள் அந்த குடும்பத்தில் இருக்கும் வரை, உணவு, உடை, இருப்பிடம்
இவைகளைப் பெற உரிமையானவர்கள், அவ்வளவே!
கோபார்சனரி குடும்பம்:
மேலே சொன்ன “இந்து கூட்டு குடும்ப”
முறையில் ஆண்கள் பெண்கள் அனைவரும் உறுப்பினர்கள்; ஆனால், அந்த “இந்து கூட்டு
குடும்பத்தில்” ஆண்கள் மட்டும், அதிலும் குறிப்பாக ஒருவரும், அவரின் மகனும்,
பேரனும், கொள்ளுப்பேரனும், சேர்ந்த நான்கு தலைமுறையான நேர்வழி ரத்த சொந்தங்கள்
மட்டும் “கோபார்சனர்” என்று அழைக்கப்படுவர்; ஆக, “இந்து கூட்டுக் குடும்பம்”
என்பது ஆண், பெண் சேர்ந்த மொத்த குடும்பம் ஆகும்; ஆனால் “கோபார்சனர்” என்பது ஒரு
ஆணும், அவரின் மகன்களும், பேரன்களும், கொள்ளுப்பேரன்களும் அடங்கிய ஒரு சிறு
கூட்டம் மட்டுமே கோபார்சனர்; அந்த ஆண்களுக்கு மனைவிகள் இருப்பார்கள், உடன்பிறந்த
சகோதர சகோதரிகள் இருப்பார்கள்; இவர்கள் எல்லாம், கோபார்சனர்கள் ஆகமாட்டார்கள்;
அவர்களுக்குறிய வாழ்க்கை ஆதரவும் பாதுகாப்பும் மட்டும் அந்தந்த ஆண்களிடமிருந்து
கிடைக்கும்; சொத்தில் பங்கு ஏதும் கிடையாது;
இப்படித்தான், இந்து
கூட்டு குடும்ப முறை இருந்து வந்தது; பெண்களுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டு
பூர்வீகச் சொத்தில், அல்லது ஆண்கள் வழி வழியாக அனுபவித்துவரும் சொத்தில்,
பெண்களுக்கு எந்தப் பங்கும் கிடையாது; கொடுக்கவும் மாட்டார்கள்;
No comments:
Post a Comment