Friday, October 21, 2016

சொத்துரிமை-2

சொத்துரிமை-2

பெண்களின் சீதனச் சொத்துக்கள் (Stridhana):
அப்படியென்றால், பெண்களுக்கு சொத்து வாங்கவும், அதை வைத்துக் கொள்ளவும் உரிமைகள் ஏதும் கிடையாதா என்ற கேள்வி எழும்; ஆம்! அவர்கள் ஆண்களின் துணையுடனேயே வாழ்ந்து வந்துள்ளனர்; ஆனாலும், அவர்களின் திருமணத்தின்போது, அவர்களின் உறவினர்களிடமிருந்து கிடைக்கும் பரிசுப் பணத்தை கொண்டு அவர்களுக்கே தனிச் சொத்தாக வாங்கி வைத்துக் கொள்ளலாம்; ஆனாலும் அதை விற்பனை செய்யும்போது, அவளின் கணவனின் சம்மதம் வேண்டுமாம்! (ஸ்ரீதானம் = சீதனம்; ஸ்ரீ என்றால் பெண்; ஸ்ரீதானம் =பெண்ணுக்குக் கொடுக்கும் தானம்; தனம் = பொருள், சொத்து; ஸ்ரீதனம் = பெண்ணிடம் உள்ள சொத்து; இப்படியாகப் பொருள் கொள்ளலாம்); இந்த சீதனச் சொத்துக்கள் பெண்களின் தனிச் சொத்தாகும்; இதற்கும் கூட்டுகுடும்ப சொத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை; பெண்களுக்கென்று தனி சொத்து வைத்துக் கொள்ள இது ஒன்றுதான் அப்போதுள்ள ஒரேவழி ஆகும்!

இந்து விதவைகளின் நிலை:

தாத்தா இறந்து விடுகிறார்; அவரின் சொத்தில் அவரின் விதவை மனைவிக்கு எந்தப் பங்கும் கிடையாது; ஆனால், அந்த விதவை இறக்கும்வரை அந்த கூட்டுக் குடும்பத்தில் வசித்து வரலாம்; அவருக்கு வேண்டிய சௌகரிகங்களான உணவு, உடை, இருப்பிடம் இவற்றை மற்ற ஆண் உறுப்பினர்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்; இதுதான் அன்றைய இந்து கூட்டு குடும்ப முறை, கோபார்சனரி கூட்டமைப்பின் முறையும் கூட; ஆனால், இறந்த கணவர் சொத்தில் அவரின் விதவை மனைவிக்கு ஒரு பங்கும் கிடையாது; கோபார்சனரி என்னும் அந்த தாத்தாவின் மகனும், பேரனும், கொள்ளுப்பேரனும் அந்த கூட்டுக் குடும்பச் சொத்தை அனுபவித்து வருவார்கள்; 

No comments:

Post a Comment