Tuesday, May 2, 2017

லஷ்மணம்மாள் வழக்கு

Lakshmanammal case
Lakshmanmmal and another vs Tiruvengada Mudali
Citation: (1882) ILR 5 Mad 241
லஷ்மணம்மாள் வழக்கு
இந்த வழக்கு 1882-ல் நடந்த வழக்கு.

சபாபதி முதலி என்பவர் சொத்தின் கடைசி உரிமையாளர். அவர் 1846-ல் இறந்து விடுகிறார். அவருக்கு ஒரு மனைவியும், தாயாரும், மூன்று சகோதரிகளும் உள்ளனர். இவர்களில், அவரின் மனைவி 1861-ல் இறந்து விடுகிறார். அவரின் தாயார் 1871-ல் இறந்து விடுகிறார். தாயார் இறந்தவுடன், சகோதரிகளுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சகோதரியின் மகன் வழக்கை போடுகிறார். சகோதரியின் மகன், மற்ற சகோதரிகளை முந்தி பங்கு பெற உரிமை உண்டா என்பதே பிரச்சனை.

மதராஸ் மாகாணத்திலும், இந்தியாவின் வடக்கிலும், மித்தாச்சரா இந்து முறையே அமலில் இருக்கிறது. சகோதரியின் மகன் பந்து என்ற உறவில் சொத்தில் பங்கு கேட்க முடியுமா என்பதே சட்டப் பிரச்சனை. சகோதரியின் மகன் என்பதால், அவன் “பின்ன கோத்ர சப்பிந்தா” உறவு உள்ளவன். ஆனால், மித்தாச்சரா சட்ட முறையில், சகோதரியின் மகன் பந்து என்ற உறவில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

தகப்பனின் தாய் மாமன்களை பந்துக்கள் என்று கல்கத்தா ஐகோர்ட்டில் ஒரு வழக்கில் முழு பெஞ்ச் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால், சகோதரியின் மகனும் பந்து உறவு தானே என்று இந்த வழக்கு.

ஒரு பர்மா வழக்கில் – ஆண் நேர்வழி உறவுகள் இல்லாதபோது, சகோதரியின் மகன் பந்துக்கள் என்ற முறையில் வாரிசுகளில் முந்திக் கொள்வான் என்றும் அவன் பங்குரிமை பெற முடியும் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

மாதவைய்யா என்ற ஆசிரியரின் கூற்றுப்படி – மனைவி, சகோதரன், தாயார், இவர்கள் இல்லாதபோது, சகோதரி பங்கு பெறுவாள் என்று கூறுகிறார்.

ஆண்வாரிசுகள் இல்லாதபோது, நெருங்கிய சபிந்தா உறவுகள் பங்கு பெறலாம் என்கிறார்கள்.

ஆனால் தென்னிந்தியாவில், சகோதரி கோத்ரச சபிந்தா உறவில் வரமாட்டார்; எனவே அவர் பந்து என்ற உறவில் இல்லை; ஏனென்றால், அவள் இறந்தவருக்கு பிண்டம் கொடுக்கும் உறவில் இல்லை; எனவே மித்தாச்சரா முறைப்படி சகோதரி பந்துக்கள் உறவில் வரமாட்டாள் என்ற பழக்க வழக்கம் இருக்கிறது.

மித்தாச்சரா முறையை விஞ்ஞானேஸ்வரா முனிவர் விளக்கி உள்ளார். இரத்த உறவுகள் வாரிசு ஆகலாம். ரத்த உறவில் நேர் வாரிசுகள் கன்சான்குனிட்டி உறவுகள் அதாவது ஒரே முதாதையர் வழி வந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் ஒரே கோத்திரமாக இருந்தாலும், ஒரே கோத்திரமாக இல்லாமல் போனாலும், வாரிசுகள் ஆவார்கள்.

உறவுகளில் இரண்டு வகை உண்டு; ஒன்று சமனகோத்ரம் மற்றொன்று பின்னகோத்ரம்; சமனகோத்ரம் என்பதை சகோதரகோத்ரம் என்பர்.

சகோதரி என்பவள் சபிந்தா உறவு உள்ளவள். எனவே அவளை சகோதரகோத்ரத்தில் உள்ளவள் எனக் கருதலாம். ஆனாலும், அவள் பிறந்த வீட்டில் உள்ளவரை தகப்பனின் கோத்திரத்தில் இருப்பாள்; அவளின் திருமணத்துக்குப் பின்னர், புகுந்த வீட்டினரின் கோத்திரத்தில் மாறிவிடுவாள்; எனவே அவளை பின்னகோத்ரத்தில் சேர்க்கலாம்; (சகோதரகோத்ரத்தில் வரமாட்டாள்);

யார் யார் இறந்தவருக்கு காரியம் செய்ய உரிமையுடையவர்கள் என்றால் – “மகன், மகனின் மகன், அந்தப் பேரனின் மகன், அதேபோல சகோதரன், அந்தச் சகோதரின் மகன்கள், மற்றும் சபிந்தா உறவுகள்” இவர்களில் யாருமே இல்லாதபோது, இறந்தவரின் தாயார் வழி உறவுகள்; ஆண்வாரிசுகளே இல்லாதபோது, மகள்களும் அவர்களின் வாரிசுகளும் செய்யலாம்;

தீர்ப்பு;
இந்த வழக்கில் சகோதரியின் மகன் வாரிசு உரிமை பெறுவானா என்பதே! இங்கு ஆண்களுக்கு முன்னுரிமை; பெண்களுக்கு முன்னுரிமை இல்லை என்பதன் அடிப்படையில் ஏற்பட்டது; எனவே சகோதரியின் மகனும் பந்து என்ற உறவே என்பதால், அவன் மற்ற சகோதரிகளை முந்தி பங்கு பெற உரிமை உள்ளவன் ஆகிறான் – என்று தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
**



No comments:

Post a Comment