Thursday, December 27, 2018

ஆந்திராவுக்கு புதிய ஐகோர்ட் புது வருடத்தில்


ஆந்திராவுக்கு புதிய ஐகோர்ட் புது வருடத்தில்
ஆந்திராவுக்கு புதிய ஐகோர்ட் புது வருடத்தில் வருகிறது. 2019 ஜனவரி 1-முதல் பிரிந்த ஆந்திர மாநிலத்துக்கு புதிய ஐகோர்ட் வருகிறது.
பழைய ஆந்திரப் பிரதேசம் என்ற பெரிய மாநிலத்தை, 2014 ஜூன் 2-ம் தேதி அன்று இரண்டு மாநிலங்களாகப் பிரித்தார்கள். ஒன்று, ஆந்திரா, மற்றொன்று தெலுங்கானா. ஐதராபாத் என்று நகரம் ஏற்கனவே பழைய ஆந்திர பிரதேசத்தின் தலைநகராக இயங்கி வந்தது. தற்போது, பிரிந்த ஆந்திராவுக்கு அமராவதி என்ற புதிய தலைநகரை, ஆந்திராவின் முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு ஏற்படுத்தி உள்ளார். அங்கு தனியே ஐகோர்ட்டையும் ஏற்படுத்தி உள்ளார்.
இதுவரை பழைய ஆந்திர பிரதேசத்துக்கு ஐகோர்ட்டாக ஐதராபாத்தில் உள்ள ஐகோர்ட்டே இருந்து வந்தது. இப்போது, பிரிந்த ஆந்திராவுக்கு தனியே ஐகோர்ட் கட்டிடத்தை அமராவதி நகரில் கட்டி உள்ளதால், 2019 ஜனவரி 1-முதல் அங்கு ஆந்திராவின் புதிய ஐகோர்ட் இயங்கும் என இந்திய ஜனாதிபதி புது வருடத்தில் அறிவிப்பார் என்று சொல்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டும் ஒப்புதல் கொடுத்து விட்டதாகச் சொல்கிறார்கள். இந்த புதிய ஐகோர்ட்டின் பெயர் “ஆந்திர பிரதேஷ் ஐகோர்ட்” என வழங்கப்படும். ஏற்கனவே ஐதராபாத்தில் உள்ள பழைய ஐகோர்ட்டான The High Court of Judicature at Hyderabad இனி தெலுங்கானா மாநிலத்தின் ஐகோர்ட்டாக இயங்கும்.
புதிய ஆந்திரா ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக, இப்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் தலைமை நீதிபதியாக உள்ள ஜஸ்டிஸ் ரமேஷ் ரங்கதாதன் அவர்கள் இருப்பார். இவரே புதிய ஆந்திரா ஐகோர்ட்டின் முதல் தலைமை நீதிபதி. இவருடன் மேலும் 15 நீதிபதிகள் இருப்பார்கள். ஏற்கனவே ஐதராபாத் ஐகோர்ட்டில் இருக்கும் 10 நீதிபதிகள் இதில் அடங்குவர்.
புது வருடத்தில் இயங்க ஆரம்பிக்கும் ஆந்திராவின் புதிய ஐகோர்ட்டுக்கு வாழ்த்துக்கள்.
Latest notification on 28.12.2018:
For the Andhra Pradesh High Court, the Government notification issued today intimates the appointment of Justice Chagari Praveen Kumar, the senior-most judge of the High Court as its Acting Chief Justice starting from January 1, next year. 
**

No comments:

Post a Comment