Sunday, May 29, 2016

பவர் ஆப் அட்டார்னி-1

பவர் ஆப் அட்டார்னி-1
 தன் வேலையை வேறு ஒருவரைக் கொண்டு செய்வது; பவர் ஆப் அட்டார்னி என்பது அதிகாரப் பத்திரம்; தனக்கு ஒரு ஏஜெண்டை வைத்து, அந்த வேலையைச் செய்து கொள்வது; தனக்கு வேறு வேலை இருந்தாலும், அல்லது தன்னால் அந்த வேலைக்காக தனியே அலைய முடியாதபோது, இப்படி ஏஜெண்ட் மூலம் அந்த வேலைச் செய்து கொள்வதே பவர் ஆப் அட்டார்னி;
தனக்கு நம்பிக்கையான ஆட்களைக் கொண்டு தன் வேலையை இந்த பவர் ஆப் அட்டார்னி பத்திரம் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம்; ஆனால், இப்போது இது வியாபார ரீதியில் போய் விட்டது; வயதானவர், தன்னால் அலைய முடியாது என்பதற்காக, தன் குடும்ப உறுப்பினர்களுக்கு, (மகனுக்கு, மகளுக்கு, மனைவிக்கு, கணவருக்கு) பவர் பத்திரம் எழுதிக் கொடுத்து அந்த வேலையைச் செய்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த பவர் பத்திர முறையை பிரிட்டீசார் ஏற்படுத்தி இருந்தனர்;
பவர் பத்திரங்களில் இரண்டு வகை உண்டு; ஒன்று – ஸ்பெஷல் பவர் பத்திரம்; மற்றொன்று – பொது பவர் பத்திரம்; ஸ்பெஷல் பவர் பத்திரம் என்பது ஓரே ஒரு வேலையை மட்டும் செய்வதற்காக கொடுக்கும் பவர் பத்திரம்; பொதுப் பவர் பத்திரம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட வேலையை செய்வதற்கு கொடுக்கும் பவர் பத்திரம்;
கோர்ட்டில் ஒரு வழக்கு போடவேண்டும் என்றால், அதற்காக கொடுக்கும் பவர் பத்திரம் ஸ்பெஷல் பவர் பத்திரம்; ஏன் என்றால், அது அந்த வழக்கை மட்டும் நடத்துவதற்காக ஒரே ஒரு வேலைக்காக கொடுக்கும் பவர் ஆகும்; அந்த வழக்கு தொடர்பாக உள்ள தொடர் வேலைகளைச் செய்தாலும், அது ஓரே ஒரு வேலை என்றே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது; இப்படியான ஸ்பெஷல் பவர் பத்திரத்தை ரூ.20 மதிப்புள்ள முத்திரைத்தாளில் எழுதிக் கொள்ளலாம்; அதை நோட்டரி வக்கீல் மூலம் சான்று பெற்றுக் கொண்டால் போதுமானது; அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; அத்தகைய ஸ்பெஷல் பவர் பத்திரத்தின் அதிகாரத்தைக் கொண்டு, வழக்கறிஞரை நியமித்து, ஏஜெண்டாகவே வக்காலத்து கையெழுத்துச் செய்து கொள்ளலாம்; வழக்குக்குத் தேவைப்படும் வழக்குறைகள், பதில் மனுக்கள், அப்பீல், மற்றும் அது தொடர்பான எல்லா வேலைகளையும் அந்த ஸ்பெஷல் பவர் பத்திரத்தைக் கொண்டே செய்து கொள்ளலாம்;

 contd...2

No comments:

Post a Comment