Sunday, May 29, 2016

பவர் ஆப் அட்டார்னி-4

பவர் ஆப் அட்டார்னி-4
பொதுவாக இப்போதெல்லாம், இதுபோன்ற பவர் பத்திரங்கள் குறைவாகவே உள்ளன; அதற்குப் பதிலாக, வியாபார ரீதியில் இந்த பவர் பத்திரங்கள் நடைமுறையில் உள்ளது; ரியல் எஸ்டேட் என்று சொல்லிக் கொண்டு, ஒரு சொத்தைக் கிரயம் வாங்குபவரே அல்லது வாங்கி விற்பவரே, தன் பெயரிலோ அல்லது தனது நாமினி அல்லது பினாமி பெயரிலோ பவர் பத்திரத்தை வாங்கிக் கொண்டு விடுகிறார்; சொத்தின் கிரயத் தொகை முழுவதையும் கொடுத்துவிட்டு, அதற்கு ஒரு ரசீதும் பெற்றுக் கொள்கிறார்; இப்படியான பவர் பத்திரங்களை ரத்து செய்ய முடியாது என்று ஒரு விதி இருப்பதாக பலரும் நினைத்துக் கொண்டு இதை செய்து வருகிறார்கள்; இதைக் கட்டுப்படுத்தவே இப்போது தமிழ்நாட்டில் ஒரு புதிய பவர் சட்ட நடைமுறை வந்துவிட்டது; அதாவது வெளி நபர்கள் பெற்றுக் கொள்ளும் பவர் பத்திரங்களுக்கு ரூ.10,000 பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், ரூ.100 மதிப்புள்ள முத்திரை தாளில் அந்த பவர் பத்திரம் எழுதிக் கொள்ள வேண்டும் என்றும் நடைமுறை வந்து வெகுகாலம் ஆகி விட்டது; இது இல்லாமல், உண்மையில் குடும்ப உறுப்பினர்களுக்கு எழுதிக் கொடுக்கும் பவர் பத்திரமாக இருந்தால், அந்த பவர் பத்திரத்தை, ரூ.100 மதிப்புள்ள முத்திரைத் தாளில் எழுதிக் கொண்டு, அதை பதிவு செய்ய ரூ.1,000 பதிவுக் கட்டணம் செலுத்தினால் போதும் என்று புதிய முத்திரைச் சட்டத்தில் பவர் பத்திர விபரம் சொல்கிறது;

சொத்தின் விற்பனை அல்லாத மற்ற பவர் பத்திரங்களாக இருந்தால், அத்தகைய பவர் பத்திரங்களை ரூ.100 மதிப்புள்ள முத்திரைத் தாளில் எழுதி, ரூ.150 பதிவுக் கட்டணமாகச் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்; ஆக எந்தப் பவர் பத்திரமாக இருந்தாலும் (பொது பவர்) அதற்கு ரூ.100 மதிப்புள்ள முத்திரைத் தாளே போதும்; ஆனால் பதிவு அலுவலகத்தில் பதிவுக் கட்ட்ணம் மட்டுமே வேறுபடும்; 
contd...5

No comments:

Post a Comment